பி.பி.ஜி., கல்லுாரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
கோவை: சரவணம்பட்டி பி.பி.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.பி.பி.ஜி., கல்வி குழுமத் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை வகித்தார். தாளாளர் சாந்தி, துணை தலைவர் அக்சய் பங்கேற்றனர். தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜெயந்த்ஸ்ரீ பாலகிருஷ்ணன், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் சிறப்பாக பேசினார். பி.பி.ஜி., கல்விக் குழுமத்தின் பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.