திருக்கோவிலுார் நுாலகத்தில் மாதிரி போட்டி தேர்வு
திருக்கோவிலுார்: தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை சார்பில் திருக்கோவிலுார் நுாலகத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வு நடந்தது.திருக்கோவிலுார் நுாலகத்தில் தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.நுாலகர் அன்பழகன் வாசகர்களுக்கு கேள்வித்தாள்களை வழங்கி துவக்கி வைத்தார். தேர்வு குறித்த நுணுக்கங்களை நுாலகர் தியாகராஜன் வழங்கினார். இதில் நுாலகத்தில் பயிலும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.நுாலகப் பணியாளர்கள் சம்பத், தேவி, பாஸ்கரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.