உள்ளூர் செய்திகள்

ஆசிரியை வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி; டி.வி.,நிருபர் கைது

தேனி : கம்பம் தனியார் பள்ளி ஆசிரியையிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த டி.வி., நிருபர் விஜயலிங்கராஜா 49,வை சின்னமனுார் போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், சின்னமனுார் சொக்கநாதபுரம் சிவசக்திநகர் எல்லை பாதுகாப்பு படை வீரர் கண்ணன் 48. இவரது மனைவி ரதிதேவி 46. இவர் 2017ல் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார்.இதேப்பள்ளியில் கம்பம் கோம்பை ரோடு ஆசிரியை சகாயஹென்ரிட்சுதா பணியாற்றினார். 'எனது கணவர் விஜயலிங்கராஜா டி.வி., நிருபராக பணியாற்றுகிறார். அவருக்கு முதல்வர் வரை பழக்கம் உள்ளது. சிந்தலைச்சேரி அரசுப் பள்ளியில் ஆசிரியை பணியிடம் காலியாக உள்ளது. அதை வாங்கித்தருகிறேன் என சகாயஜென்ரிட்சுதா தெரிவித்துள்ளார்.இதற்காக ரூ.7 லட்சம் கேட்டனர். 2017 ஆகஸ்டில் நிருபரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.5 லட்சமும், மீதி ரூ.2 லட்சம் பணத்தை வீட்டில் வைத்து இருவரிடமும் ரதிதேவி வழங்கி உள்ளார். இருவரும் அரசு வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்தனர். பாதிக்கப்பட்ட ரதிதேவி புகாரில் சின்னமனுார் போலீசார் 2023 அக்., 13ல் விஜயலிங்கராஜா, சகாயஜென்ரிட்சுதா ஆகியோர் மீது வழக்குப்பதிந்தனர்.போலீசார் பேச்சுவார்த்தையில் ரூ.2 லட்சத்தை தவணை முறையில் திருப்பி வழங்கினர். மீதியுள்ள ரூ.5 லட்சம் வழங்காததால் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று சின்னமனுார் போலீசார் விஜயலிங்கராஜாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்