புகையிலைப் பொருளுக்குத் தடை விதித்துள்ள 701 கல்வி நிறுவனங்கள்
இதன் மூலம் கல்வி நிறுவனங்களில் புகைப்பழகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. சுகாதாரத்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து அடையாறு புற்றுநோய் சிகிச்சை நிலையம் மேற்கொண்ட முயற்சியை அடுத்து 701 கல்வி நிறுவனங்கள், தங்களது வளாகத்தில் புகைப்பழகத்திற்குத் தடை விதித்துள்ளன. இதில் 600 பள்ளிகளும் 100 கல்லூரிகளும் அடங்கும். கல்வி வளாகத்திற்கு 100 மீட்டர் தூரத்திற்குள் புகையிலைப் பொருள்களை விற்கும் கடைகளை அனுமதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.