உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் மிகவும் பிரபலமடையும் ஐ.இ.எல்.டி.எஸ்.,

ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வை மேலும் பிரபலப்படுத்த, இத்தேர்வை எழுத ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியையும் பிரிட்டிஷ் கவுன்சில் துவக்கியுள்ளது. வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும், ஆங்கில மொழி தாய்மொழியாக இல்லாதவர்களுக்காக இந்த இரண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், 2006ம் ஆண்டு 13 ஆயிரம் பேராக இருந்த இந்தியாவில் ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரமாக அதிகரித்தது. இந்த ஆண்டு இது மேலும் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், அமெரிக்க கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கும் ‘டோபல்’ (TOEFL) தேர்வை கடந்த ஆண்டு 70 ஆயிரம் பேர் மட்டுமே எழுதியுள்ளனர். பிரிட்டனில் கூட, ஆயிரம் கல்வி நிறுவனங்கள் இந்த இரண்டு தேர்வில் ஏதேனும் ஒரு தேர்வை அங்கீகரிக்கின்றன. ஆனால், ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் ஐ.இ.எல்.டி.எஸ்., மதிப்பெண்களை மட்டுமே அங்கீகரிப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்