விலையில்லா லேப்-டாப் வழங்கல்
திருச்சி: திருச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா லேப்-டாப் வழங்கும் விழா நடந்தது. திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு அப்பாட் மார்ஷல் மேல்நிலைப் பள்ளியில் படித்த 136 மாணவர்களுக்கும், திருச்சி தேவதானம் சாவித்திரி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 528 பேருக்கும், இ.பி., ரோடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 17 மாணவ, மாணவியர்கள் உள்பட 671 பேருக்கு, தமிழக அரசு வழங்கிய விலையில்லா லேப்- டாப்புகளை, அ.தி.மு.க., சட்டசபை கொறடா மனோகரன் வழங்கினார். எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஐயப்பன், சுதாகர், கிருஷ்ணமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர்கள் லூர்துராஜ், மலர்கொடி, மகாலிங்கம் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.