உள்ளூர் செய்திகள்

பல்கலை மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு

கோவை:  அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் நேற்று, ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலை நிர்வாகம், யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு கட்டுப்பட வலியுறுத்தியும், துணைவேந்தர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக கூறியும், போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, போராட்டம் குறித்து பல்கலை பதிவாளர் (பொ) வெண்மதி வெளியிட்டுள்ள அறிக்கை: அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை யில் பயிலும் மாணவியர், வகுப்புகளை புறக்கணிக்காது, வருகை தர வேண்டும். மாணவியரின் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் கல்வி நலனில் கவனம் செலுத்த வேண்டும். வகுப்புகளை புறக்கணிக்கும் உரிய மாணவியர்மீது, பல்கலை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்