உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ.இ.இ.இ. தேர்வெழுதுபவர்களின் விபரங்கள் வெளியீடு

அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு(ஏ.ஐ.இ.இ.இ), அதன் இணையதளத்தில், அனைத்து தேர்வெழுதுபவர்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்களில் ஏதேனும் பிழை இருக்கிறதா? என்று சரிபார்த்துக் கொள்ளும்படி தேர்வெழுதுபவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஏதாவது தவறுகள் இருந்தால், அவைப் பற்றி மார்ச் 12 ம் தேதி வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கலாம். மேலும் வலைதளத்தில் தங்களுடைய விவரங்களை கண்டுபிடிக்க முடியாதவர்கள், சி.பி.எஸ்.இ. அலுவலகத்தை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ மார்ச் 12 ம் தேதி தொடர்பு கொள்ளலாம். விவரங்களில் மாற்றம் செய்வதற்காக ஏற்கனவே விண்ணப்ப படிவத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுகோள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்