உள்ளூர் செய்திகள்

பொறியியல் கல்லூரி மாணவர் 500 ரூபாயில் ரோபோ தயாரித்து சாதனை!

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர் 500 ரூபாயில் ரோபோ தயாரித்து சாதனை படைத்துள்ளனர். தேனி நாடார் சரஸ்வதி எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் நான்காம் ஆண்டு மாணவர் விக்னேஷ். இவர் ரூ.500 ல் ரோபோ தயாரித்துள்ளார். இந்த ரோபோவில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர், புரோகிராம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. பேட்டரியில் மட்டும் இயங்குகிறது. எல்.டி.ஆர்., சென்சார், கேமரா மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரோபோ செல்லும்போது எதிரில் தடைகள் வந்தால் தானாக விலகி வேறு திசையில் சென்று விடும். மாணவர் விக்னேஷ் கூறுகையில், "நிலக்கரி சுரங்கங்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய இந்த ரோபோவை பயன்படுத்தலாம். மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் இது சென்று வரும். தவிர பார்வையற்றவர்களுக்கு வழிகாட்ட உதவும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்