கவிதைப் போட்டி அறிவிப்பு
சென்னை: கருணாநிதி நுாற்றாண்டு விழாவை கொண்டாட, 10 குழுக்களை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.அதில், எழுத்தாளர் - கலைஞர் குழு, கவிதைப் போட்டியை அறிவித்துள்ளது. இதில், வெற்றி பெறுவோருக்கு, முதல் பரிசாக 50,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர், வரும், 22ம் தேதிக்குள் ezhuthalar kalaignar@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு கவிதையை அனுப்பலாம்.