இன்று பள்ளிகள் செயல்படும்
திருப்பூர்: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது.இதற்கு மாற்றாக, பிப்., 3ம் தேதி (இன்று) பள்ளி வேலை நாள் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், மாவட்டத்தில், தேசிய திறனறிவு தேர்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ள, 22 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.