உடனடி சேர்க்கை அறிவிப்பு
மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான, ராஜூவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான உடனடி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.வளாகங்கள்:சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர், சண்டிகர் மற்றும் கவுகாத்தி பல்கலைக்கழகம் ஆகிய மூன்று இடங்களில் இக்கல்வி நிறுவனத்திற்கான வளாகங்கள் செயல்படுகின்றன.படிப்புகள்: ஸ்ரீபெரும்புதூர் வளாகம்:எம்.எஸ்சி., - அப்ளைடு சைக்காலஜிஎம்.ஏ., - இங்கிலீஷ்எம்.ஏ., - சோசியாலஜிஎம்.ஏ., - சோசியல் வொர்க்சண்டிகர் வளாகம்:எம்.ஏ., - பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்எம்.ஏ., - டெவெலப்மெண்ட் ஸ்டடீஸ்விண்ணப்பிக்கும் முறை: https://www.rgniyd.gov.in/reg/node/546 எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை 31ம் தேதி காலை 10:30 முதல் 12:30 மணிவரை 'மல்ட்டிபிள் சாய்ஸ்' கேள்விகள் அடிப்படையில் நுழைவுத்தேர்வு நடைபெறும். அன்று மாலையே முடிவுகள் வெளியிடப்பட்டு நேர்முகத்தேர்விற்கு பிறகு உடனடியாக அட்மிஷன் வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 27விபரங்களுக்கு: https://www.rgniyd.gov.in/