நாலந்தா பல்கலைகழகம் 2014ல் செயல்படும்: அமர்த்திய சென்
பாட்னா: நாலந்தா சர்வதேச பல்கலைகழகம் அடுத்த ஆண்டில் (2014ல்) தனது கல்வி நடவடிக்கைகளை துவங்க உள்ளதாக அதன் துணைவேந்தரும், நோபல் பரிசு பெற்றவரும், பேராசிரியருமான அமர்த்திய சென் நேற்று தெரிவித்தார். புகழ்பெற்ற நாலந்தா சர்வதேச பல்கலைகழகம் அடுத்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபரில் துவங்க உள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.