உள்ளூர் செய்திகள்

ஐஐடி புவனேஸ்வரில் நமோ செமிகண்டக்டர் ஆய்வகம்

சென்னை: மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஐடி புவனேஸ்வரில் 'நமோ செமிகண்டக்டர் ஆய்வகம்' அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 4.95 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இளைஞர்களுக்கு தொழில்துறைக்கு தேவையான திறன்களை வழங்கும் நோக்கில் அமைக்கப்படும் இவ்வாய்வகம், ஐஐடி புவனேஸ்வரை செமிகண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான மையமாக மாற்றும்.'இந்தியாவில் தயாரிப்போம்' மற்றும் 'இந்தியாவில் வடிவமைப்போம்' போன்ற முன்முயற்சிகளை ஊக்குவிக்கும் இந்த ஆய்வகம், நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் செமிகண்டக்டர் துறைக்கு உந்து சக்தியாக அமையும்.தற்போது உலகளவில் உள்ள சிப் வடிவமைப்பு திறமையில் 20% இந்தியாவிலேயே உள்ளது. நாடு முழுவதும் உள்ள 295 பல்கலைக்கழக மாணவர்கள் தொழில்துறையுடன் இணைந்து சமீபத்திய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.ஐஐடி புவனேஸ்வர் ஏற்கனவே சிலிக்கான் கார்பைடு ஆராய்ச்சி மற்றும் புதுமை மையத்தை (SiCRIC) கொண்டுள்ளது. புதிய 'நமோ செமிகண்டக்டர் ஆய்வகம்' சேர்க்கையுடன், இந்தியாவின் செமிகண்டக்டர் தொழில்துறைக்கு வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவு கிடைக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்