வந்தாச்சு என்.இ.பி.,!
ஓர் ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ், இரண்டு ஆண்டு படிப்புக்கு பிறகு பட்டயப்படிப்பு, மூன்று ஆண்டுகாலம் நிறைவு செய்தவர்களுக்கு இளநிலை பட்டம் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை படிக்கும் மாணவர்கள், இயற்கை அறிவியல், சமூக அறிவியல், பல்துறை படிப்புகள், தொழில்கல்வி ஆகிய பாடங்களில் உரிய புரிதலை பெற்றிருக்க வேண்டும். மேலும், ஏதேனும் ஒரு பாடத்தில் ஆழமான அறிவை நிரூபிக்க வேண்டும். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு, 19 மத்திய பல்கலைக்கழகங்கள், 40க்கும் மேற்பட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், 18 மாநில தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 22 மாநில பல்கலைக்கழகங்கள் உட்பட மொத்தம் 105 பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு - யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.