உள்ளூர் செய்திகள்

திறனாய்வு தேர்வு

அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான 'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு' அறிவிக்கப்பட்டுள்ளது.தகுதி: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.உதவித்தொகை: திறனாய்வு தேர்வு வாயிலாக நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தலா 500 மாணவ, மாணவியர் வீதம் மொத்தம் 1,000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு மாதத்திற்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு கல்வியாண்டில் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.தேர்வு முறை: தமிழக அரசின் 9ம் மற்றும் 10ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமுக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் இடம்பெறும் இரு தாள்களிலும் கொள்குறிவகையில் கேள்விகள் கேட்கப்படும். முதல் தாளில் கணிதம் சார்ந்து 60 கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்து 60 கேள்விகள் இடம்பெறும். தேர்வு நேரம்: முதல் தாள் காலை 10 மணிமுதல் 12 மணிவரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணிமுதல் 4 மணிவரையிலும் நடைபெறுகிறது.விண்ணப்பிக்கும் முறை: https://dge.tn.gov.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் 50 ரூபாயும் சேர்த்து அந்தந்த பள்ளி முதல்வரிடம் வழங்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 9தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 25, 2025விவரங்களுக்கு: https://dge.tn.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்