உள்ளூர் செய்திகள்

ஜன.,1ல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி -58 ராக்கெட்

சென்னை: எக்ஸ்- போ சாட் விண்கலத்தை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் ஜன.-1ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.இஸ்ரே நிறுவனம் வர்த்தக ரீதியாக மட்டுமின்றி பல்வேறு கட்ட அறிவியல், ஆய்வு பணிகளுக்காக பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மூலம் செயல்படுத்தி வருகிறது.அதன்படி பிளாக்ஹோல் , நியூட்ரான் நட்சத்திரங்கள், செயலில் உள்ள விண்மீன் கருக்கள் குறித்து வானியல் எக்ஸ்ரே மூலங்களின் பல்வேறு இயக்கவியலை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்-போ -சாட் எனப்படும் (எக்ஸ்- ரே பொலாரிமீட்டர் சாட்டிலைட்) விண்கலத்தை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை இஸ்ரோ 2024-ம் ஆண்டு ஜன., 1ம் தேதி காலை 9:10 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்துகிறது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்