உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்டாலின் வழியில் அகிலேஷ்!

ஸ்டாலின் வழியில் அகிலேஷ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மறைந்த முலாயம் சிங் யாதவ், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை ஆரம்பித்தவர். தற்போது, அவருடைய மகன் அகிலேஷ் யாதவ் கட்சியை வழிநடத்துகிறார்; தற்போது, 'இண்டி' கூட்டணியில் உள்ளார்.தி.மு.க., எப்படி கருணாநிதியை முன்வைத்து அரசியல் நடத்துகிறதோ, அதை போல தன் தந்தை முலாயம் சிங் யாதவை வைத்து, அரசியல் நடத்துகிறார் அகிலேஷ்.டில்லியில் சமாஜ்வாதி கட்சிக்கு, பெரிய அலுவலக கட்டடம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இங்கு, ஒரு பெரிய அறையில் முலாயம் சிங்கின் சிலை நிறுவப்பட உள்ளதாம்; கட்சி அலுவலகத்திற்குள் செல்லும் முன், கட்சி நிறுவனர் முலாயம் சிங்கை வணங்கிவிட்டு, உள்ளே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உ.பி., சட்டசபைக்கு 2027 மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடைபெறும். அப்போது காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றும் ஆசையில் உள்ளார் அகிலேஷ். இதற்கு மறைந்த தன் தந்தை உதவ வேண்டும் என விரும்புகிறாராம். அதற்குத் தான் அவருடைய சிலை நிர்மாணிக்கப்படுகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 20:11

அடங்கொய்யால நான்கூட போலிபகுத்தறிவை உபியிலும் வேகவைக்குதா நெபொடிசா கட்சி என்று நினைத்தேன்


மணியன்
ஆக 25, 2024 10:57

உ.பி மக்களிடம் உள்ள உ.பி மாடல் எடுபடாது.யோகியை வெல்வது மிகவும் கடினம்.


விஜய்
ஆக 25, 2024 10:04

கொடுமை பாவம் உத்திர பிரதேசம் மக்கள் இங்கே இந்த தொல்லை தாங்க முடியல


புதிய வீடியோ