உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மொபைல் போன் 'ரீசார்ஜ்' கட்டண தொகையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. வோடாபோன் நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடைசியாக 2021ம் ஆண்டு இறுதியில் டெலிகாம் நிறுவனங்கள், 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின.இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 12 - 25 சதவீதமும், ஏர்டெல் நிறுவனம் 10 - -21 சதவீதமும் ரீசார்ஜ் கட்டண தொகையை உயர்த்தி உள்ளன. இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை 3ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.- - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramasuthakar Ramasuthakar
ஜூன் 29, 2024 21:11

முதலில் நெட்வொர்க்கை சரிபன்னுங்கடா அப்புறமா விலையை ஏற்றலாம் திருட்டுபயல்கள்


தயா
ஜூன் 29, 2024 17:05

சித்தே பொறுங்கோ... இப்பத்தான் டிரையிலர் முடிஞ்சு மெயின் பிக்சர் ஆரம்பிக்குது.


Rajagopalan Narasimhan
ஜூன் 29, 2024 15:54

Incoming calls should not be free.Call charges should be divided equally between caller and receiver.Then people will talk less.


RAAJ68
ஜூன் 29, 2024 10:33

Mobile phone 1999 ல் முதன்முதலாக சென்னையில் துவக்கப்பட்டது. RPG CELLULAR நிறுவனம் வயர்லெஸ் போன்ற பெரிய size mobile phoneஐ அறிமுகப்படுத்தியது. 32000 ரூபாய் கட்ட வேண்டும். பெரிய தனியார் நிறுவனங்கள் மட்டுமே அலுவலக உபயோகத்திற்காக வைத்திருந்தனர். அவ்வளவு சுலபமாக வாங்க முடியாது COMPANY ADDRESS PROOF? PAN COPY எல்லாம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு கொஞ்ச நாட்களில் ரிலையன்ஸ் அம்பானி post paid connection பத்தாயிரம் ரூபாய்க்கு கைப்பேசியை கொண்டு வந்தனர். LG COMPANY SMALL SIZE MOBILE phone அழகாக வடிவமைக்கப்பட்ட SIM CARD இல்லாத கைப்பேசி. அதன் பிறகு கொஞ்ச நாட்களில் 500 ரூபாய்க்கு எல்லோரும் பயனடைய வேண்டும் prepaid connection ஐ அறிமுகப்படுத்தியது RELIANCE . Outgoing call 3 ரூபாய். Incoming free. RPG company closed. Mobile.புரட்சி செய்தது தான். இதன் நடுவில் பிஎஸ்என்எல் IDEA TATA AIRCEL நிறுவனங்கள் களத்தில் இறங்கி ன . BSNL சிம் கார்டு ப்ரீபெய்டு விலை 500 ரூபாய். அதற்கும் ஏகப்பட்ட demand. 500 ரூபாய் கட்டி முன்பதிவு செய்து இரண்டு மாதங்கள் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். ரிலையன்ஸ் மொபைலில் மற்ற SIM CARD வேலை செய்யாது. எனவே பிஎஸ்என்எல் சிம் வாங்கிக் கொண்டு நோக்கியா கம்பெனி தயாரித்த விதவிதமான மாடல்களில் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். Nokia கைப்பேசிகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட். சாதாரண பிளாக் அண்ட் வொயிட் கைபேசியின் விலை பத்தாயிரம் வரை விற்கப்பட்டது. மும்பை கோவா போன்ற நகரங்களில் ஐடியா செல்லுலர் கம்பெனி கொடிகட்டி பறந்தது. பிஎஸ்என்எல் கைபேசியில் இருந்து ஐடியாவுக்கு கால் போகாது. எல்லாம் தொழில் போட்டி. 24 வருடங்களில் பெரிய புரட்சி நடந்துள்ளது. அப்போதய நோக்கியா போன்களின் விதவிதமான வடிவங்கள் ring tone கள்மக்களை மிகவும் ஈர்த்தன.


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 10:32

முப்பதாயிரம் கொடுத்து மொபைல் வாங்குறவன் கட்டணம் ஏறினா பொங்கறார். அடுத்த மாசமே அப்கிரேட் ன்னு வேற காஸ்ட்லி மொபைலுக்கு மாறுகிறார்


RAAJA69
ஜூன் 29, 2024 09:55

நிமிடத்திற்கு இரண்டு ரூபாய் போடுங்க. எங்க போனாலும் தொல்ல தாங்க முடியல. லோக்கல் ரயிலுக்காக ? காத்திருந்தா பக்கத்துல நிக்கிறவன் எதிர்ல நிக்கிறவன் எல்லாரும் போன்ல பேசிக்கிட்டே இருக்காங்க. ட்ரெயின்ல ஏறி உட்கார்ந்தாலும் பின்னாடி இருக்கிறவன் முன்னாடி இருக்கிறவன் பக்கத்துல இருக்குறவன் எதிர்ல இருக்கிறவன் எல்லாரும் உரக்க பேசிக்கிட்டே இருக்கார் சாலையில் நடந்து போனாலும் பின்னாடியே சத்தம் போட்டு பேசிக்கொண்டே வருகிறான். கொஞ்ச நேரம் மொட்டை மாடியில காத்து வாங்கலாம்னு போனால் அங்கே ஏற்கனவே பக்கத்து வீட்டுக்காரர் ஒருத்தர் போன்ல சத்தமா பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு நிக்கிறார். எங்கு சென்றாலும் கைப்பேசியால் பெரிய தொல்லை. கைபேசி வருவதற்கு முன் இருந்த சூழல் மீண்டும் வரவேண்டும்.


pmsamy
ஜூன் 29, 2024 09:27

மக்களின் அத்தியாவசிய தேவைகளின் விலையை உயர்த்துவது பாஜகவின் வழக்கம்.


RAAJ68
ஜூன் 29, 2024 08:38

ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் போடுங்க. எங்கு சென்றாலும் தொல்லை தாங்க முடியல மணிக்கணக்குல பேசுகிறார்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி