உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மொபைல் போன் 'ரீசார்ஜ்' கட்டண தொகையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. வோடாபோன் நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடைசியாக 2021ம் ஆண்டு இறுதியில் டெலிகாம் நிறுவனங்கள், 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின.இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 12 - 25 சதவீதமும், ஏர்டெல் நிறுவனம் 10 - -21 சதவீதமும் ரீசார்ஜ் கட்டண தொகையை உயர்த்தி உள்ளன. இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை 3ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.- - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்