உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 10ம் வகுப்பு தமிழில் பாடங்கள் குறைப்பு

10ம் வகுப்பு தமிழில் பாடங்கள் குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றி, 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒன்பது பிரிவுகள் இருந்த நிலையில், தற்போது ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 10ம் வகுப்பு சமச்சீர் கல்வியில், தமிழ் பாடப்புத்தகம், பாடநுால் கழகம் சார்பில் தயாரித்து வெளியிடப்படுகிறது. இப்புத்தகம் ஒன்பது பிரிவுகளாக இருந்தன.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்துக்கு, இதே புத்தகம் பயன்படுத்தப்படுகிறது. குறித்த காலத்தில் நடத்தி முடிப்பது, மாணவர்களுக்கு கற்றல் சுமை கருதி, கடைசி மூன்று பிரிவுகளான நாகரிகம் மற்றும் சமூகம், அறம் மற்றும் தத்துவம், மனிதம் மற்றும் ஆளுமை பிரிவுகள், 'டெலீஷன் போர்ஷன்' ஆக அறிவிக்கப்பட்டன.இதனால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள், தமிழ் தேர்வுக்கு ஆறு பாடப்பிரிவுகளை மட்டும் படித்து தேர்வெழுதிய நிலையில், சமச்சீர் கல்வி மாணவர்கள், ஒன்பது பாடப்பிரிவுகளையும் படித்தனர். இதனால், அரசு பள்ளி மாணவ - மாணவியர் அவதிப்படுவதாகவும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக பாடப் பிரிவுகளை குறைக்கவும் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில், வரும் கல்வியாண்டுக்கு தமிழ் பாடப்புத்தகத்தை அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஒன்பது பாடப்பிரிவுகள் ஏழாக குறைக்கப்பட்டுள்ளன. அறிவியல் தொழில்நுட்பம், ஆளுமை பாடப் பிரிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.அதேநேரம் ஆளுமை பாடப்பிரிவில் இருந்த மனிதம், மொழி பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கற்றல் சுமை குறைக்கப்பட்டதால் தமிழ் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.அதேபோல் பிளஸ் 2 வகுப்பிலும், சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் பாடச்சுமையை குறைக்க, அரசு பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர் - நமது நிருபர் -- .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

nb
மார் 09, 2025 09:22

சைலன்ட்டா cbse காலில் விழுதா திராவிட மாடல்?


சசிக்குமார் திருப்பூர்
மார் 09, 2025 09:14

சம கல்வி பாஜாகவுடையது. சமச்சீர் கல்வி திராவிட கும்பல் உடையது. அனைவருக்கும் அனைத்தும் என்பது சம கல்வி. தமிழர்களை திராவிட அடிமையாக முட்டாளாக வைத்திருக்க சமச்சீர் கல்வி


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 09, 2025 08:53

சம கல்வி எங்கள் உரிமை. தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உழைக்கிறோம். தமிழில் அதிக பாடங்கள் இருப்பதால் தான் தமிழில் மாணவர்கள் நிறைய பேர் பெயில் ஆகிறார்கள். ஆகவே பாடத்தை குறைத்து சினிமா கலை கூத்தாடிகள் பற்றிய பாடங்களை அதிகம் சேர்த்தால் மாணவர்கள் வீட்டிலும் டிவியில் சினிமா கலை கூத்தாடிகளை பார்த்து அறிவை வளர்த்துக் தமிழில் தேர்ச்சி பெற்று விடுவார்கள். தமிழ் தாய் வாழ்த்து பாடல் கூட படிப்பதற்கு மனனம் செய்வது கடினமாக இருப்பதால் திருக்குறள் போல் ஈரடியாக மாற்ற பட்டி மன்ற தலைவர் மூலமாக குழு அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க ஆலோசிக்கபடலாம். தமிழ் மெய் எழுத்துக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனையும் ஈரோட்டுகாரர் வழி காட்டல் படி குறைக்க உத்தேசிக்க பட உள்ளது. தமிழ் எங்கள் உயிர். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு. ஹிந்தி தெரியாது போடா