உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒரு மின் இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவசம்: ஆய்வில் இறங்கியது மின்வாரியம்

ஒரு மின் இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவசம்: ஆய்வில் இறங்கியது மின்வாரியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ஒரே உரிமையாளரின் இரு மின் இணைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் கழிக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்த அது போன்ற இணைப்பு உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களை கணக்கெடுக்கும் பணி ரகசியமாக நடக்கிறது.தமிழக மின்வாரியம் வருவாயை பெருக்க ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து அதில் ஒன்றில் மட்டும் 100 யூனிட் இலவசமாக கழித்து மின் கட்டணம் கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை சென்னையில் அமல்படுத்தியுள்ளது. தொடர்ந்து தென் மாவட்டங்களில் அமல்படுத்த முடிவு செய்து அதுபோன்ற வீடுகள், வர்த்தக நிறுவனங்களை கணக்கெடுக்கும் பணியை ரகசியமாக மின்வாரிய அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மின்வாரிய அலுவலர்கள் கூறியதாவது:

ஒரு வீட்டில் இரு மின் இணைப்பு இருந்தால் ஒருங்கிணைந்த இணைப்பாக கருதி மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் சாப்ட்வேர் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு இணைப்புக்கு ஒவ்வொரு பில் கணக்கீட்டிலும் 100 யூனிட் இலவசமாக கிடைக்கிறது.தற்போது ஒரு வீட்டில் இரு இணைப்புகள் பெற்றிருந்தால் தலா 100 யூனிட் இலவசமாக பெறுகின்றனர். அதே போல் வர்த்தக நிறுவனத்துக்கு இரு இணைப்புகள் இருக்கும் போது மின் கட்டணம் குறைவாக வரும். ரகசிய கணக்கெடுப்பில் இத்தகைய இணைப்புகள் கண்டறியப்பட்டு இரு வீடுகளில் ஒன்றுக்கு மட்டும் 100 யூனிட் கழித்து கட்டணம் விதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Rukmani
செப் 23, 2024 07:23

மொதல்ல மாச மாசம் ரீடிங் எடுங்க....திருட்டுதனதையெல்லாம் நீங்க பண்ணிட்டு அப்பாவி மக்கள் மேல பழி போடரது....கமர்ஷியல்க்கு நீங்க என்னவோ பண்ணுங்க.....எந்த மக்கள் பிரதிநிதியும் இத கேக்குறது இல்ல... மக்களே கொஞ்சமாவது விழித்து கொள்ளுங்க...


Gk Anbu
செப் 18, 2024 19:50

First the Govt. has to implement month wise units measurement as assured before election. This will atleast reduce financial burden.


Mohan Mohan
செப் 18, 2024 11:57

மாதம் மாதம் கணக்கு எடுத்து பணம் கட்டினால் நன்றாக இருக்கும்


Rukmani
செப் 23, 2024 07:23

Yess..


S Muralidharan
செப் 17, 2024 23:02

முதல்ல அதை பண்ணுங்க. நிறைய பேர் அரசை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.


S Muralidharan
செப் 17, 2024 23:00

சூப்பர் . முதல்ல அத பண்ணுங்க. அப்புறம் அந்த சலுகை அவசியமா என்றும் யோசிங்க. இன்று ஏழை என்று யாரும் இல்லை. அனைவரும் அதிக சம்பளம் பெற்று, இலவசங்கள், சலுகைகள் பெற்று சோம்பேறி ஆகி கொண்டு இருக்கிறார்கள். கஷ்டம் தெரிந்தால் தான் உழைப்பார்கள். நாடும் முன்னேறும்.


ponnambalam main
செப் 22, 2024 21:10

Hi friend where you working or doing business. Tell your government to give poison, Rope, and etc to die. for chennai living families. Here Im jobless living rental housing Rs5000 and power bill bimonthly ₹₹₹ 1142/- nearly im paying ₹5600/-pm but without income. If government implements this rule, first tell them they recovery the asect from house owners, who bulting house and earning money eating money.. My house ower have 12 house each rent ₹₹ 5000/- = ₹60000+ salary round ₹ 200000/- the totally income ₹260000/- you check about IT, as per knowledge he wont pay any IT


ponnambalam main
செப் 22, 2024 21:14

Hi sir, first give job, Im 47 old jobless with families of 5 members, and give one house & 5 liters of petrol, capacity to fire 5 person., no need EB power


Paramasivam
செப் 17, 2024 17:37

இலவச யூனிட்டை மொத்தமாக கட் பண்ணி விட்டு ஒன்றிய அரசின் மீது பழியை போட்டு விடுங்க. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்....


chennai sivakumar
செப் 17, 2024 15:02

மாதம் 50 யூனிட் என்றால் 150 ரூபாய் என வைத்து கொண்டாலும் ஒரு நாளைக்கு 5 ரூபாய் மட்டுமே. இதை எல்லோராலும் தாங்கிக்கொள்ள முடியும். இலவசத்தை ஒழிப்பது சிறந்த செயல்.


chennai sivakumar
செப் 17, 2024 14:59

எதுக்கு இப்படி தலையை பிச்சிகிட்டு. ஒரே அடியாக இலவசத்தை ஒழித்து விட வேண்டியது தானே. மக்கள் கேட்டால் அது தீர்ப்பாயத்தின் முடிவு என்று கை கழுவி விடலாமே. அனாவசியமாக மென்பொருள் உண்டாக்க செலவு போன்றவற்றை தவிர்க்கலாமே


Sankar Dvini Sankar Dvini
செப் 17, 2024 14:50

சூப்பர்


G.Palani Samy
செப் 17, 2024 14:46

சரியான முடிவு.


முக்கிய வீடியோ