உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வுக்கு சென்ற கிறிஸ்துவ ஓட்டு; விஜய் பக்கம் திருப்பிவிட முயற்சி

தி.மு.க.,வுக்கு சென்ற கிறிஸ்துவ ஓட்டு; விஜய் பக்கம் திருப்பிவிட முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'சட்டசபை தேர்தலில், எந்த அணியை ஆதரிக்க வேண்டும் என கிறிஸ்துவர்களுக்கு, கத்தோலிக்க பிஷப்புகள் அறிவிப்பு செய்யக்கூடாது' என, தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பாதிரியார்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதையடுத்து, கிறிஸ்துவர்கள் ஓட்டுகளை வளைக்க, நடிகர் விஜயும், சீமானும் களம் இறங்கி உள்ளனர்.தேர்தலில், கிறிஸ்துவர்கள் யாரை ஆதரித்து ஓட்டு போட வேண்டும் என்பதை, கத்தோலிக்க பிஷப் உத்தரவின்படி, பாதிரியார்கள் பிரசங்கத்தின் வாயிலாக, சர்ச்சுகளில் சூசகமாக அறிவிப்பர். கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் மொத்தமாக விழும் என்பதால், அவர்கள் ஆதரவு, தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த, அனைத்து தேர்தல்களிலும், தி.மு.க., கூட்டணிக்கே கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் முழுமையாக கிடைத்து வருகின்றன. தற்போதைய தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பலவும் நிறைவேற்றப்படவில்லை என்ற கோபம் கிறிஸ்துவர்களுக்கு உள்ளது. எனவே, 'மீண்டும் தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கூட்டணிக்கு, கிறிஸ்துவர்கள் ஓட்டுபோட வேண்டும் என்ற அறிவிப்பை, எந்த பிஷப்பும் வெளியிடக் கூடாது' என, துாத்துக்குடியை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர், பிஷப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் 17ல், தி.மு.க., - எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் தலைமையிலான கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடக்க உள்ளது. அதில், தேர்தலில் யாருக்கு ஆதரவு என, முடிவு செய்ய உள்ளனர். இந்த சூழ்நிலையில், தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பாதிரியார்கள், 'தி.மு.க., கூட்டணியை, ஆதரிக்கும் முடிவை, மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, குரல் எழுப்பி உள்ளனர்.நாம் தமிழர் கட்சி சீமான் அல்லது த.வெ.க., தலைவர் விஜயை ஆதரிக்க வேண்டும் என, பிஷப்புகளிடம் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். விஜயின் நெருங்கிய உறவினர், கத்தோலிக்க கிறிஸ்துவர். அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லுாரி பாதிரியார்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அவரும், அவரது மனைவியும், விஜய் கட்சிக்கு கிறிஸ்துவர்களின் ஓட்டுகளை வளைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையில் பிஷப்புகள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கலந்து கொள்ளும் 'வழக்காடுவோம் வாருங்கள்' என்ற நிகழ்ச்சி, சென்னை செம்பாக்கத்தில் 22ம் தேதி நடக்க உள்ளது. அதில் கலந்து கொள்ளும் சீமான், கிறிஸ்துவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

angbu ganesh
மே 10, 2025 16:23

ஆக கூடி ஹிந்துக்களை அவனுங்க ஓட்டுக்காக கூட மதிக்கவில்லை திருந்துங்க ஹிந்துக்களே


angbu ganesh
மே 10, 2025 16:21

இதுல இருந்து என்ன தெரியுது கிறிஸ்துவ முஸ்லீம் சகோதர மக்களே நீங்க தேவ இல்ல உங்க வோட்டுதான் முக்கியம் அண்ணாமலைக்கேய எங்கள் வோட்டு


Shekar
மே 10, 2025 13:39

இந்து கோவில்களில் சிவபுராணம், திருமால் அவதாரம், கந்த புராணம் போன்று பக்தி கதைகள் பிரசங்கம் நடைபெறும். அதை கேட்க கோவிலுக்கு செல்பவன் மத வெறியன். மோடி தோற்கவேண்டும் ஆண்டவரே என்று வெளிப்படையாய் பிரசங்கம் செய்யும் போலிகள் மத சார்பற்றவர்கள். இது தான் திராவிட நீதி.


Muralidharan S
மே 10, 2025 12:28

ஹிந்துக்களே... இப்பொழுதாவது புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இப்பொழுதே, ஒரு ஸ்வாமி தேர் / ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு நிற்கும் நிலை. திராவிஷங்களுக்கு ஒட்டு போட்டுக்கொண்டே இருந்தீர்கள் என்றால்... சுவாமி கோவிலில் சென்று வழிபடவே அனுமதி கேட்க்கும் நிலைமை வரும்.. விழித்துக்கொள்ளுங்கள்.. இல்லையேல் சொந்த மண்ணில் உரிமையற்றவர்களாகி போகும் அபாயம் உள்ளது.


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 10, 2025 17:09

சரியான கருத்து.... அதுமட்டுமல்ல நமக்கு தேவையான பொருட்களை நமது சகோதர மற்றும் உறவினர்கள் நடத்தும் கடைகளில் வாங்குங்கள், அவர்கள் முன்னேறுவர்கள், இல்லை எனில் அமைதி மார்க்கம் மெல்ல மெல்ல தீவிரமாக வளரும், புரிந்து கொண்டால் சரி..


Kulandai kannan
மே 10, 2025 12:05

தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பாதிரியார்களிடம் எப்படி தேசப்பற்று இருக்கும்? இந்த வாடிகன் மிஷநரிகளின் நோக்கமே பதிலாக கிறித்தவ நாடுகளை உருவாக்குவதுதான். அப்படி சமீப ஆண்டுகளில் உருவானவைதான் தெற்கு சூடானும், கிழக்கு டிமோரும். (அவ்விரு நாடுகளும் தற்போது வறுமையில் உழல்வது வேறு விஷயம்)


Kulandai kannan
மே 10, 2025 12:00

தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பாதிரியார்களிடம் தேசப்பற்று எப்படி இருக்கும்? வாடிகன் மிஷநரிகளின் நோக்கமே கிறித்தவ நாடுகளை உருவாக்குவதுதான். அப்படி சமீப ஆண்டுகளில் உருவானவைதான் தென் சூடானும், கிழக்கு டிமோரும். அவ்விரு நாடுகளும் தற்போது வறுமையில் உழல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Sridhar
மே 10, 2025 11:56

ஒருவேளை இதுக்குதான் விஜய் களமிறக்கப்பட்டிருக்கிறாரோ? ஏற்கனவே 2021 தேர்தல்ல திமுக வெறும் 2 லச்சம் வோட்டு வித்தியாசத்தில்தான் மெஜாரிட்டி பெற்றது. இந்த ஐஞ்சு வருஷ ஆட்சியில சம்பாதிச்ச மக்கள் வெறுப்பு, பஜகவின் பயங்கர வளர்ச்சி, இதுக்கெல்லாம் மேல இப்போ மைனாரிட்டி வோட்டு உருவல் .... போற போக்கைப்பாத்தா திமுகவுக்கு வர்ற தேர்தல் 2011 ரிபீட்டு போல ஆவது நிச்சயம்போல இருக்கே ஆனா அவுங்க தோக்கறது முக்கியமில்லை. அவுங்க குடும்பத்தோட ஜெயிலுக்கு போவரதுகூட முக்கியமில்லை. அடிச்ச லச்சக்கணக்கான கோடி மக்கள் பணம், அத எப்படி மீட்டு எடுத்து அரசு கருவூலத்துல சேக்கறது, அதுக்கான வழிமுறைகளைத்தான் ED யும் மற்ற துறைகளும் சேர்ந்து ஆராய்ந்து ஒரு வழி கண்டுபிடிக்கவேண்டும். 2G போல விட்டுட்டா அந்த பணத்தை வச்சு பத்துவருசம் ஆட்சியில இல்லாட்டாலும் திருட்டு கும்பல் திரும்பி ஆட்சியை பிடிக்க முயலும். மீண்டும் எழுந்து வர முடியாதபடி அடிக்கவேண்டுமென்றால், அதற்க்கு ஒரேவழி, அந்த ஊழல் சொத்துக்களை மொத்தமாக பறிமுதல் செய்யவேண்டும். இன்று இருக்கும் வசதிகளை வைத்து திருட்டு கும்பல் வெளிநாடுகளிலும் bitcoin போன்ற கிரிப்டோ முதலீடுகளிலும் கொள்ளை அடித்த பணத்தை பதுக்கிவைத்திருக்கும் ED நினைத்தால் அவை எல்லாவற்றையும் வெளிகொண்டுவந்து பறிமுதல் செய்யமுடியும். முக்கியமா அவுங்க போன் களை உடைக்கவிடாமல் செய்தாலே முக்கால்வாசி குற்றங்களை சாட்சிகளுடன் கண்டுபிடித்து நிரூபித்துவிடலாம். paasword குடுக்கமாட்டானுக, அதுக்கும் ஏதாவது வழியை இப்போதே கண்டுபிடிக்கணும்.


Sridhar
மே 10, 2025 11:56

ஒருவேளை இதுக்குதான் விஜய் களமிறக்கப்பட்டிருக்கிறாரோ? ஏற்கனவே 2021 தேர்தல்ல திமுக வெறும் 2 லச்சம் வோட்டு வித்தியாசத்தில்தான் மெஜாரிட்டி பெற்றது. இந்த ஐஞ்சு வருஷ ஆட்சியில சம்பாதிச்ச மக்கள் வெறுப்பு, பஜகவின் பயங்கர வளர்ச்சி, இதுக்கெல்லாம் மேல இப்போ மைனாரிட்டி வோட்டு உருவல் .... போற போக்கைப்பாத்தா திமுகவுக்கு வர்ற தேர்தல் 2011 ரிபீட்டு போல ஆவது நிச்சயம்போல இருக்கே ஆனா அவுங்க தோக்கறது முக்கியமில்லை. அவுங்க குடும்பத்தோட ஜெயிலுக்கு போவரதுகூட முக்கியமில்லை. அடிச்ச லச்சக்கணக்கான கோடி மக்கள் பணம், அத எப்படி மீட்டு எடுத்து அரசு கருவூலத்துல சேக்கறது, அதுக்கான வழிமுறைகளைத்தான் ED யும் மற்ற துறைகளும் சேர்ந்து ஆராய்ந்து ஒரு வழி கண்டுபிடிக்கவேண்டும். 2G போல விட்டுட்டா அந்த பணத்தை வச்சு பத்துவருசம் ஆட்சியில இல்லாட்டாலும் திருட்டு கும்பல் திரும்பி ஆட்சியை பிடிக்க முயலும். மீண்டும் எழுந்து வர முடியாதபடி அடிக்கவேண்டுமென்றால், அதற்க்கு ஒரேவழி, அந்த ஊழல் சொத்துக்களை மொத்தமாக பறிமுதல் செய்யவேண்டும். இன்று இருக்கும் வசதிகளை வைத்து திருட்டு கும்பல் வெளிநாடுகளிலும் bitcoin போன்ற கிரிப்டோ முதலீடுகளிலும் கொள்ளை அடித்த பணத்தை பதுக்கிவைத்திருக்கும் ED நினைத்தால் அவை எல்லாவற்றையும் வெளிகொண்டுவந்து பறிமுதல் செய்யமுடியும். முக்கியமா அவுங்க போன் களை உடைக்கவிடாமல் செய்தாலே முக்கால்வாசி குற்றங்களை சாட்சிகளுடன் கண்டுபிடித்து நிரூபித்துவிடலாம். paasword குடுக்கமாட்டானுக, அதுக்கும் ஏதாவது வழியை இப்போதே கண்டுபிடிக்கணும்.


எஸ் எஸ்
மே 10, 2025 11:49

அப்படி எல்லாம் திருப் முடியுமா என்பது சந்தேகம். ஏன் எனில் பிஜேபி கூட்டணிக்கு எதிராக நிற்கும் வேட்பாளர்களில் யார் பலமானவரோ அவருக்கு மொத்தமாக ஓட்டு பிரியாமல் போட்டு விடுவார்கள். உதாரணமாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் நின்ற அதிமுக கிறிஸ்தவ வேட்பாளர் எதிர்பார்த்த ஓட்டுகளை பெறவில்லை.


Sridhar
மே 10, 2025 11:37

இவனுக ஓப்பனா இப்படி மதவாத அரசியல் செய்வானுங்க, அப்புறம் பிஜேபி மதவாத கட்சிம்பாங்க. சிங்கப்பூர் பிரதமர் சொன்னமாதிரி நம்ம நாட்டிலும் இதுபோல் மதரீதியாக யாராவது சர்ச்சிலோ மசூதியிலோ வோட்டு போடுமாறு பிரச்சாரம் செய்தர்களேயானால் அவர்களை உடனே கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். அது முடியாதென்றால், எல்லா கோவில்களிலும் ஹிந்துக்கள் வோட்டுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவேண்டும். ஒவ்வொரு அர்ச்சகரும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பிஜேபிக்கு வோட்டுப்போடுங்க இல்லேன்னா உங்க குடும்பத்துல கெடுவிளையும்னு சொல்றாருனு வச்சுக்கங்க, ஒவ்வொரு நாளும் சுமார் 40 லட்சம் பக்தர்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். தேர்தல் பிரச்சார கூட்டங்களே தேவையில்ல. மொத்த தமிழகத்தை சுலபமாக வென்றுவிடலாம். இதை ஏன் உண்மையாகவே பிஜேபி முயற்சி செய்து பார்க்கக்கூடாது? அவ்வாறு செய்யக்கூடாது என்று சொன்னர்களேயானால், எல்லா சர்ச்சுகளிலும் மசூதிகளில் காமெராக்கள் வைத்து கண்காணித்து அவர்கள் அக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வழிவகுக்கவேண்டும்.