உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தீபாவளிக்கு குவிகிறது பிரியாணி ஆர்டர்: விற்பனை ரூ.250 கோடியை எட்ட வாய்ப்பு

தீபாவளிக்கு குவிகிறது பிரியாணி ஆர்டர்: விற்பனை ரூ.250 கோடியை எட்ட வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புரட்டாசி மாதம் முடிவு, தீபாவளி கறி விருந்து உள்ளிட்ட காரணங்களால், வரும் தீபாவளிக்கு பிரியாணி சாப்பிட, உணவகங்களில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் தீபாவளி பிரியாணி விற்பனை மதிப்பு, 250 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை, பாரம்பரிய அசைவ உணவாக, சாதம், ஆட்டுக்கறி குழம்பு இருந்தது. குறிப்பாக, தீபாவளிக்கு வீடுகளில் காலையில் இட்லி, ஆட்டுக்கறி குழம்பு, மதியம் சாதம் ஆட்டுக்கறி குழம்பு, ஆட்டுக்கறி சுக்கா என, அசைவ விருந்து சாப்பிடுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, சென்னையில் முதன்மையான அசைவ உணவாக பிரியாணி மாறியுள்ளது. தற்போது, சென்னை, கோவை போன்ற நகரங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுதும் பிரியாணிக்கு மக்கள் அடிமையாகி விட்டனர் .https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yjotp6t7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், பாசுமதி அரிசி மட்டன், சிக்கன் பிரியாணி; மற்ற மாவட்டங்களில் சீரக சம்பா அரிசி பிரியாணி விற்பனை அதிகம் உள்ளது. களைகட்டுகிறது குறிப்பாக சீரக சம்பா அரிசி பிரியாணியில், ஆம்பூர், திண்டுக்கல், கொங்கு என, பல வகையான பிரியாணி விற்கப்படுகிறது. மக்கள் தங்களுக்கு பிடித்த பிரியாணியை விரும்பி வாங்குகின்றனர். வீடுகளில் சமைத்தால், பிரியாணி சுவை தெரிவதில்லை என்பதால், அசைவ உணவகங்களில் சாப்பிடுகின்றனர். மேலும், ஒரு கிலோ, 2 கிலோ என, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 'ஆர்டர்' கொடுத்து வாங்கி, வீட்டில் சாப்பிடுகின்றனர். இதனால், முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத பிரிவில், அனைத்து அசைவ உணவகங்களிலும், பிரியாணி விற்பனை களைகட்டுகிறது. சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக, 5,500 கோடி ரூபாய், தமிழகம் முழுதும், 11,000 கோடி ரூபாய்க்கு பிரியாணி வியாபாரம் நடக்கிறது.தற்போது, புரட்டாசி மாதம் என்பதால், அசைவ பிரியர்களும், அசைவத்துக்கு பதில், சைவ உணவு வகைகளை சாப்பிட்டு வருகின்றனர். புரட்டாசி மாதம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. முன்பதிவு எனவே, தீபாவளிக்கு பிரியாணியை வெளுத்து கட்ட, பிரபலமான அசைவ உணவகங்களில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். அதற்கேற்ப, ஒவ்வொரு உணவகமும், மட்டன், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மட்டன் சுக்கா என, இரண்டு நபர், நான்கு நபர், ஆறு நபர், 12 நபர் சாப்பிடும் வகையில், பல்வேறு தொகுப்புகளில், பிரியாணி விற்க ஆர்டர்களை பெறுகின்றன.இதனால், தீபாவளிக்கு பிரியாணி விற்பனை, 250 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, 'ஜூனியர் குப்பண்ணா' நிறுவனத்தின் இயக்குநர் பாலச்சந்தர் கூறியதாவது: தீபாவளிக்கு வீடுகளில் கறி விருந்து என்பது தொன்று தொட்டு உள்ளது. தமிழகத்தில் வழக்கமாக, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில், பிரியாணி விற்பனை மதிப்பு, சராசரியாக 120 கோடி ரூபாயாக உள்ளது.புரட்டாசி என்பதால், கடந்த ஒரு மாதமாக, அசைவம் சாப்பிடாமல் இருந்தவர்களும், புரட்டாசி முடிவடைவதால், தீபாவளிக்கு பிரியாணி சாப்பிட விருப்பமாக உள்ளனர். எனவே, தீபாவளிக்கு பிரியாணி வாங்க உணவகங்களில் முன்பதிவு செய்கின்றனர். இதனால், வரும் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தீபாவளி பிரியாணி விற்பனை, 250 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

V GOPALAN
அக் 18, 2025 13:41

Road side biriyani is Hawala Biriyani. No GST No IT.


நரேந்திர பாரதி
அக் 18, 2025 04:07

"saliva" enhanced, multi-vitamin version


Vijay D Ratnam
அக் 17, 2025 23:05

ஆயிரம்தான் இருந்தாலும் கறிக்குழம்பு கறிக்குழம்புதான். பிரியாணியால் கறிக்குழம்பை நெருங்க கூட முடியாது. என்னதான் பல்சர், ஹீரோ ஹோண்டா ல்லாம் வந்தாலும் அந்த ராயல் என்ஃபீல்டு பக்கத்தில் கூட நிற்க முடியாது. பிரியாணி டொயோட்டான்னா, கறிக்குழம்பு மெர்சிடிஸ் பென்ஸ். தீபாவளி அன்று நல்லா எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டு பெரிய சைசில் வாழை இலை, நுனி இலை போட்டு நிறைய சோறு போட்டு, நாலு கரண்டி மட்டன் குழம்பு, சைடுல மட்டன் வறுவல், நல்லி, இரண்டு முட்டை என்று மூணு முறை சோறு போட்டு ஃபுல் கட்டு கட்டிவிட்டு அப்படியே புள்ளைங்களோட ஹாலில் பாய் தலைகாணி போட்டு படுத்தால் ஒரு தூக்கம் அப்டியே நம்மள தூக்கிகிட்டு போவும் பாருங்க அட அட அட. குர்பானியெல்லாம் கிடா வெட்டு ஆக முடியாது.


SP
அக் 17, 2025 22:18

பிரியாணி கடைகள் அதிகரிக்க அதிகரிக்க செயற்கை கருத்தரிப்பு மையம் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது


Kulandai kannan
அக் 17, 2025 19:07

உலகிலேயே பொருளாதார ரீதியில் மிகப் பெரும் பண்டிகை தீபாவளி என்ற வகையில் நாம் பெருமை கொள்வோம்


Iyer
அக் 17, 2025 17:42

""வீடுகளில் சமைத்தால், பிரியாணி சுவை தெரிவதில்லை என்பதால், அசைவ உணவகங்களில் சாப்பிடுகின்றனர்."" இது ஒரு மிகமிக அபாயகரமான TREND ஆகும். உணவகங்களில் அப்படி என்ன ரசாயனம் கலக்கிறார்கள் - சுவை கூட்டுவதற்கு. ? மாமிச உணவே - மனிதன் உடல் நலத்தை கெடுக்கும். சுவையூட்டி ரசாயனங்கள் மேலும் அந்த அபாயத்தை கூட்டும்.


SANKAR
அக் 17, 2025 22:28

hotel food being tastier not restricted to briyaani only.we all know even traditional idly thosai pongal vadai etc are far more superior in taste.for triplicane ratna cafe saambhar there is a rasigar mandram!


Vasan
அக் 17, 2025 17:20

மக்களின் பிரியாணிக்காக, கொலை செய்யப்படவிருக்கும் அந்த பல்லாயிரக்கணக்கான ஆடுகளுக்காக வருந்துகிறேன். அவைகளின் அம்மா, அம்மா என்னும் மரண ஓலம் கனத்த மனம் உடையவர்களின் காதில் விழாது. அந்த கொலை செய்யப்படவிருக்கும் ஆடுகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.


bharathi
அக் 17, 2025 16:15

What is the relationship between diwali and biriyani. People are crazy


Vasan
அக் 17, 2025 15:46

பிரியாணி விற்பனை, மதுபான விற்பனை போல் அரசுடைமையாக்கப்படவேண்டும்.


Balasubramanian
அக் 17, 2025 15:38

எனக்கு என்னமோ சிலர் இப்பொழுது முதலே ஓட்டு சேகரிப்பில் இறங்கி விட்டதாக தோன்றுகிறது! சில கட்சிகள் தாராளமாக பணம் செலவழித்து மாவட்ட செயலாளர்களுக்கு போனஸ் வழங்கியதாக கேள்வி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை