உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நீதித்துறை குறித்து எம்.பி.,க்கள் கருத்து: பா.ஜ., நிராகரிப்பு

நீதித்துறை குறித்து எம்.பி.,க்கள் கருத்து: பா.ஜ., நிராகரிப்பு

புதுடில்லி: ''நீதித்துறை குறித்து எம்.பி.,க்கள் கருத்தை நிராகரிக்கிறோம்''என பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டா தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் கோட்டா லோக்சபா தொகுதி எம்.பி., நிஷிகாந்த் துபே. இவர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கடுமையாக விமர்சித்து இருந்தார். இவர், ''சுப்ரீம் கோர்ட் தனது அதிகார வரம்பை தாண்டி செயல்பட்டு வருகிறது. அனைத்து விஷயங்களுக்கும் ஒருவர் சுப்ரீம்கோர்ட் செல்ல முடியும் என்றால், பார்லிமென்ட், சட்டசபையை இழுத்து மூட வேண்டும்'' என கூறி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நிஷிகாந்த் துபேயின் கருத்திற்கு பா.ஜ., எம்.பி., தினேஷ் ஷர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நிஷிகாந்த் துபேயின் இந்த கருத்துக்கு நட்டா விளக்கம் அளித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நீதித்துறை மற்றும் தலைமை நீதிபதி குறித்து பா.ஜ., எம்.பி.,க்கள் நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுடன் பா.ஜ.,வுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்களின் தனிப்பட்ட கருத்துகள்.இந்த கருத்தை பா.ஜ., ஏற்கவில்லை. ஆதரிக்கவும் இல்லை. இந்த கருத்துகளை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். பா.ஜ., எப்போதும் நீதித்துறையை மதித்து வருகிறது, அதன் உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது. ஏனெனில், ஒரு கட்சியாக, சுப்ரீம்கோர்ட் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் நமது ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இவ்வாறு நட்டா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Sampath Kumar
ஏப் 20, 2025 17:00

அர்ப்பனனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் கோடை பிடிப்பான் என்பார்கள் இந்த ஏழவு ஏடுத்த பிஜேபி அறிவு வீலிகள் சொல்லும் செய்கையும் அப்பத்தின் உச்ச கட்டம் எவனுக்களி நம்பி நாட்டை ஒப்படைத்த மக்களை என்ன வென்று சொல்வது அனுபவிங்க


naranam
ஏப் 20, 2025 15:37

நட்டாவின் கருத்து மிகவும் அபத்தம்.


venugopal s
ஏப் 20, 2025 15:14

நீங்கள் தான் பெரிய தைரியசாலி ஆச்சே, உங்கள் பாஜக கட்சியின் கருத்தும் அது தான் என்று தைரியம் இருந்தால் சொல்ல வேண்டியது தானே!


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 20, 2025 18:23

என்னா கோவாலு நாம் தான் கவர்னருக்கு ஆப்பு வெச்சோமே....எவ்ளோ தைரியம் நமக்கு....அப்படியே நீட்ட பத்தியும் ஒரு வழக்க உச்ச நீதிமன்றத்துல போட்டு நாம் எவ்ளோ பெரிய தெகிறசாலின்னு நிருபிப்போமா ???


Ray
ஏப் 20, 2025 14:53

இவர்தான் பிஜேபியின் தேசிய தலைவரா? இங்கே ஆளுநருக்கு பதவி நீட்டிப்பு எப்போ ஆர்டர் போடுவாங்க? எல்லாமே...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 20, 2025 18:29

ஏன் இத்தனை நாள் போதையில் இருந்தீரா அல்லது கோமாவில் இருந்தீரா.... நட்டா தான் தலைவர்னு தெரியாது போல.....அது சரி இது என்ன திமுகவா பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்து வாரிசு தலைவராக...!!!


Ray
ஏப் 20, 2025 19:20

டியர் கோபாலகிருஷ்ணன். ON 20 JANUARY 2020, SHREE J P NADDA WAS ELECTED UNANIMOUSLY AS THE BJP NATIONAL PRESIDENT, THE PRESIDENT IS NOMINALLY ELECTED BY AN ELECTORAL COLLEGE COMPOSED OF MEMBERS DRAWN FROM THE PARTYS NATIONAL AND STATE COUNCILS, BUT IN PRACTICE IS A CONSENSUS CHOICE OF SENIOR MEMBERS OF THE PARTY.[1] THE TERM OF THE PRESIDENT IS THREE YEARS LONG, AND INDIVIDUALS MAY NOT SERVE MORE THAN TWO CONSECUTIVE TERMS.


Ray
ஏப் 20, 2025 14:51

என்ன நடந்து விட்டதென்று கொதிக்கிறார்கள்? அரசியலமைப்பு சட்டத்தில் கால வரைமுறையில்லாதிருந்தது.


TRE
ஏப் 20, 2025 13:40

மதவாத பிஜேபியின் கட்டுப்பாட்டில் தான் நீதித்துறை இயங்குது நல்ல உதாரணம் டெல்லி டுபாகுர் ஜட்ஜ் சர்மா வீட்டில் கட்டு காட்டாக பணம் இருந்ததையும் வீடு எரித்தபோது தியன்னைப்பு வீரர்கள் தெரிவித்தார்கள் அவரை டிஸ்மிஸ் செய்யாமல் அலகாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றினார்கள்


மூர்க்கன்
ஏப் 20, 2025 14:06

அலகாபாத் ஆக இருந்தபோது நீதி இருந்தது இப்போ யோகியின் பிரக்யராஜ் ஆனபின் கட்டு கட்டா பெருச்சாளிகள்தான் இருக்கு..


Ray
ஏப் 20, 2025 14:42

இன்னும் அலஹாபாத் உயர் நீதி மன்றமாகத்தான் உள்ளது. மதராஸ் ஹை கோர்ட்டாகத்தான் உள்ளது. அவைகள் மாறாதவை. கட்சி கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இன்றைய பிரச்சினை வாதப் பிரதிவாதங்கள் என்ன?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 20, 2025 18:32

பாஜக மதவாத கட்சின்னா நீங்க... கொத்தடிமையா இருக்குற கட்சி எந்த வாத கட்சி.....!!!


GMM
ஏப் 20, 2025 13:32

நீதித்துறை குறித்து எம்.பி.,க்கள் தனிப்பட்ட கருத்தை பிஜேபி ஏன் நிராகரிக்கிறது. நாடு முழுவதும் நீதிபதிகள் பலர் தனது எல்லை இல்லாத அதிகார வரம்பை உருவாக்கி சட்டமற்ற ஆட்சி புரிகின்றனர். வக்ஃபு சட்டத்தில் வராதவர்கள் / தன் பாதிப்பை நிரூபிக்க முடியாமல், பொதுநல வழக்கு. உடன் விசாரணை. மன்றம் தடை. நில அபகரிப்பு மூலம் உரிமை இழந்தவர்கள் போராட்டத்தை உருவாக்கும். நீதிபதி தன் அதிகார வரம்பு அறிய வேண்டும். அரசியல் சாசனம் நீதிக்கு அதிகாரம் மக்கள் தாவா விசாரிக்க மட்டும் கொடுத்துள்ளது? சட்டம், அரசாணை, மத்திய அரசு அதிகாரிகளை தக்க வழி மூலம் தான் விசாரிக்க முடியும். தேர்தல் ஆணையர், மத்திய வங்கி கவர்னர், மத்திய தணிக்கை தலைவர், மாநில கவர்னர், நாட்டின் ஜனாதிபதியை அணுக முடியாது. கவர்னர், ஜனாதிபதிக்கு கெடு. மத்திய அரசு அவர்களை செயல் பட விடாமல் கூண்டு கிளியாக வைத்துள்ளது? நாடு, மக்களை விட மத்திய பதவி முக்கியம். சட்ட விதி விரும்பாத நீதிமன்றம், நேர்மை குஞ்சு பொரிக்கும் என்று மத்திய அரசு கூமுட்டையை அடை காக்கிறது. வக்கீல் அதிகாரிகளை ஆட்டி படைத்து விடுவர். மத்தியில் ஊழல் ஆட்சி அமைந்தால் வக்கீல் சர்வாதிகாரம் மூலம் நாடு தாங்காது.


Kasimani Baskaran
ஏப் 20, 2025 13:29

ஜனாதிபதி அரசியலமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர். அவருக்கு சட்டம் இயற்றி அவரை கேள்வி கேட்கும் அதிகாரம் எந்த நீதிமன்றத்துக்கும் கிடையாது. எப்பொழுது அரசியலமைப்புச்சட்ட பெஞ்ச் இரண்டு நீதிபதிகளால் நடத்தப்பட்டது?


Shankar
ஏப் 20, 2025 13:27

அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொன்னதில் எந்த தவறும் இல்லை. மிகச்சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள்.


Oviya Vijay
ஏப் 20, 2025 13:20

அரைவேக்காடு எம்பிக்கள் அப்படித்தான் பேசுவர்... அரசியலில் சுமூகமான ஒரு நகர்வுக்கு நீதித்துறையின் மிக முக்கியம் வாய்ந்த தீர்ப்பு இது... இதை மாற்றுவது இயலாத காரியம்...


Oviya Vijay
ஏப் 20, 2025 13:44

இங்கு இப்படித்தான் கருத்து தெரிவிப்பார்...இது தெரியாதா...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 20, 2025 18:45

தற்குறியெல்லாம் உண்மையை சொன்ன எம்பிக்களை அரைவேக்காடு என்கிறது .....எல்லாம் நீதிமன்றமே உத்தரவிட்டால் பாராளுமன்றத்தை கேளிக்கை விடுதி ஆக்கி விடலாமா....இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பவருக்கே உத்தரவு போட எந்த செக்ஸன் சொல்லுது????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை