உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க.,வை விமர்சிக்காமல் மோடி அரசை வில்லனாக்கி பிரசாரம்

அ.தி.மு.க.,வை விமர்சிக்காமல் மோடி அரசை வில்லனாக்கி பிரசாரம்

சென்னை: அரசின் சாதனைகளை சொல்லாமல், அ.தி.மு.க.,வை விமர்சிக்காமல், மத்திய பா.ஜ., அரசை மட்டும் வில்லனாக்கி சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, தி.மு.க., துவங்கியுள்ளது.வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை, ஜூலை 1ல் தி.மு.க., துவக்கியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் முதல் ஓட்டுச்சாவடி முகவர்கள் வரை அனைத்து நிர்வாகிகளும், வீடு வீடாகச் சென்று, மக்களை சந்தித்து, பிரசாரம் செய்து வருகின்றனர்.பொதுவாக, ஆளுங்கட்சி தன் ஆட்சியின் சாதனைகளை முன்வைத்தும் பிரதான எதிர்க்கட்சியை விமர்சித்தும்தான் பிரசாரம் செய்யும். ஆனால், மத்திய பா.ஜ., அரசை மட்டுமே விமர்சித்து, தேர்தல் பிரசாரத்தை தி.மு.க., துவங்கிஉள்ளது.இதற்காக, ஆறு கேள்விகள் அடங்கிய படிவத்தை தி.மு.க., தயாரித்துள்ளது. அதை மக்களிடம் கொடுத்து, 'ஆம், இல்லை' என பதிலை பெற்று வருகின்றனர். எந்த நெருக்கடியான சூழலிலும், தமிழகத்தின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்கான நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, 'நீட்' போன்ற கொடுமையான நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றில் இருந்து, நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? டில்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல், தமிழகத்தின் உரிமையை காக்கும் முதல்வர் தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா?இம்மூன்று கேள்விகளும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசை, தமிழக மக்களின் வில்லனாக காட்டும் வகையில் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படியே பொதுமக்களிடம் தி.மு.க.,வினர் வற்புறுத்தி வருகின்றனர்.

'சிறுபான்மையினர் ஓட்டுக்காக'

தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:ஜெயலலிதா மறைவுக்குப் பின், பா.ஜ., எதிர்ப்பு தான் தமிழக அரசின் முக்கிய அம்சமாக உள்ளது. பா.ஜ., எதிர்ப்பில் தீவிரம் காட்டியதால்தான், 2019, 2024 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில், தி.மு.க., கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது.அது மட்டுமல்லாது, பா.ஜ.,வை தீவிரமாக எதிர்ப்பதால், சிறுபான்மையினர் ஓட்டுகள் மொத்தமாக கிடைக்க வழிவகுக்கும். மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு, தமிழகத்திற்கு நிதி மறுப்பு ஆகிய விவகாரங்கள், தேர்தலில் பெரும் பயன் தரும் என, தி.மு.க., தலைமை நினைக்கிறது. எனவே, வரும் சட்டசபை தேர்தலும், அதே பா.ஜ., எதிர்ப்பு உத்தியை, முதல்வர் ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

kamal 00
ஜூலை 05, 2025 21:24

என்ன குட்டி கரணம் போட்டாலும் மங்கிஸ்க்கு எதிர்க்கட்சி தயார்.... இல்லை அதை சீமான் கிட்ட குடுக்கலாம்..... பின்னாடி திமுக மங்கிஸ் கூட்டணி நிக்கட்டும்


பென்னி
ஜூலை 05, 2025 15:47

சொல்வதற்க்கு சாதனைகள் இல்லை. வேதனைகள் தான்


Barakat Ali
ஜூலை 05, 2025 15:45

பாஜக எதிர்நோக்கும் காங்கிரஸ் இல்லா பாரத் நிறைவேறும் காலம் கனிந்து வருகிறது .... பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது ..... இதையெல்லாம் தமிழக மக்கள் கவனித்தே வருகிறார்கள் என்கிற உண்மை புரியாமல் திமுக ஒவ்வொரு தேர்தலிலும் அதே அரசியல் பாணியைக் கையாள்வது திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தருமா ????


Naranammalpuram
ஜூலை 05, 2025 14:34

என்னமோ திமுக பெரிய ராஜதந்திரம் செய்து விட்டமாதிரி! அதான் தமிழகமெங்கும் குள்ள நரித்தனம் தோலுரிக்கப்பட்டு சந்தி சிரித்துக் கொண்டிருக்குதே!


Anantharaman Srinivasan
ஜூலை 05, 2025 12:33

வீடு வீடாக சென்று இந்த மூன்று கேள்விகளுக்கும் "ஆம்" என்ற பதிலை எழுதி வாங்குவதால் ஒரு "விடியலும் ஏற்படப்போவதில்லை. பலர் பயந்து எழுதி கொடுப்பர்.


Balaa
ஜூலை 05, 2025 11:54

முட்டாள்களா, உங்களுக்கு சாதகமாக ஆம் , இல்லை என்று பதில்களா. தமிழ் பண்பாடு காக்கப்பட வேண்டும். ஆனால் திருட்டு முக வினால் இல்லை.


Balaa
ஜூலை 05, 2025 11:51

அதி புத்திசாலித்தனமான கேள்விகள் என்று நினைப்பு. திமுகவினரை பார்த்து , நீங்கள் கொள்ளை அடிப்பதை நிறுத்தி விட்டீர்களா - ஆம், இல்லை என்று பதில் தாருங்கள் என்று கேட்கவேண்டும்.


Kanagaraj M
ஜூலை 05, 2025 11:47

இங்கு ஒரு மாநிலத்தை ஆளுவதற்கு ஆயிரம் பிரச்சனைகள் 19 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்ன கத்தினாலும் ஒன்னும் நடக்காது


krishna
ஜூலை 05, 2025 10:33

IDH7DHAAN ANNAMALAI EFFECT.AVAR THALAIMAYIL BJP INGU ABAARA VALARCHI.ADHU THODANGI DRAVIDA MODEL KUMBALUKKU BJP BAYAM PAAVAM.MUTUGAN MAANAATUKKU PINBAR INNUM KADHARA AARAMBITHU ULLANAR. ENNAMO THAMIZH THAMIZHAN THAMIZH NATTAI IVARGAL KAAPAATRUVSDHU POLA VESHAM INDHA ONGOLE MAFIA KUMBALUKKU.INDHA MAFIA DRAVIDA MODEL KUMBALUKKU VOTTU PODUM TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU.


venugopal s
ஜூலை 05, 2025 10:00

தமிழினத் துரோகி பாஜகவை முதலில் அண்ட விடாமல் தமிழகத்தில் இருந்து விரட்டி விட்டு பிறகு மற்ற கட்சிகள் தங்கள் கட்டைப் பஞ்சாயத்தை வைத்துக் கொள்வது நல்லது!


krishna
ஜூலை 05, 2025 10:35

EERA VENGAAYAM VENUGOPAL UNNAI PONDRA KEVALA 200 4OOVAA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBAL INDHA MANNIN SAABA KEDU.THAMIZH NAATIN MIGA PERIYA DHROGA KUMBAL 200 ROOVAA OOPIS.


Balaa
ஜூலை 05, 2025 11:56

முட்டாளே, எதனால் தமிழின துரோகி. மர மண்டைகளா கொஞ்சம் யோசிங்கடா.


முக்கிய வீடியோ