வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முன்பு வன்னியர்கள் சிறப்பு ஒதுக்கீடு கேட்ட நேரத்தில் மிகவும் பிற்பட்டோர் கோட்டா ஒன்றை ஏற்படுத்தி முதலில் தனது சாதியையும் அதில் சேர்த்த சாகசக்காரரர் கருணா. இப்போ அப்பட்டியலில் சாதிகள் நிரம்பி வழிவதால் வன்னியர்களுக்கு வாய்ப்பு குறைந்து விட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாலும் உண்மையான பொருளாதார நிலையைக் கண்டுபிடித்தல் கஷ்டம். போலி சாதிச்சான்றிதழ் ஏராளம்.
மேலும் சிலைகள் மண்டபங்கள்? இதுக்குதான் நேற்று ஐம்பது சதவீத பங்கு கேட்டீங்களா? ஆனா ஆசிரியர் சம்பளம் கொடுக்க நிதியில்லையாம். நல்ல சாலை போடவும் பணமில்லை?
துரைமுருகனே - அல்லது டி துரைமுருகனா - அந்த வகுப்பைச் சேர்ந்தவர்தான் ...... தனது சமூக வாக்குகளை குடும்பக்கட்சிக்குப் பெற்றுத்தருவார் ......
வன்னியர்களின் ஆதரவை பெற எடப்பாடி செய்த ஓட்டு அரசியலால்தான் அவரது ஆட்சியே பறிபோனது. இப்போது முதல்வர் ஸ்டாலினும் அதே போன்று சாதி ஓட்டு அரசியலை கையில் எடுத்துள்ளார். தமிழகத்தில் MBC என்று அழைக்கப் படும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என தமிழக அரசால் அங்கீகரித்து வரையறுக்கப் பட்ட சமுதாயத்தினர்கள் கிட்டத்தட்ட 90 க்கும் (ஜாதிகள்) மேல் அதிகமாக இருக்கின்றனர் அவர்கள் அனைவருக்குமான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அரசு வழங்கிய மொத்த இட ஒதுக்கீடு 20 சதவீதம் ஆகும். அப்படி அந்த ஒட்டு மொத்த சமுதாயத்தினருக்குமான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து 10.5 சதவீதத்தை எடுத்து வன்னியர்களுக்கு கொடுத்து விட்டு மீதமிருக்கும் வெறும் 9.5 சதவீத இட ஒதுக்கீட்டை மற்ற சமுதாயத்தினர் அனைவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என வன்னியர்களின் ஓட்டுக்களை முழுமையாக பெறுவதற்காக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் இது மற்ற அனைத்து சமுதாய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது அந்தக் கோபம்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியின் தலைமையிலான அதிமுக தோற்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. (பின்குறிப்பு: இப்படி எழுதுவதால் நான் வன்னியர்களுக்கு எதிரானவன் என யாரும் நினைத்து விட வேண்டாம் தமிழகத்தில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் அவர்களுக்கும் அரசு நியாயமான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதே என் விருப்பம்.)