உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒருவழியாக போராட்டம் அறிவித்த தோழர்கள்

ஒருவழியாக போராட்டம் அறிவித்த தோழர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: ''திருப்பூர் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, மா.கம்யூ., - இந்திய கம்யூ., இணைந்து டிச., 29ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, திருப்பூர் இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன் கூறினார்.திருப்பூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: திருப்பூர் மாநகராட்சி குப்பை பிரச்னைக்கு, போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். குப்பை கொட்ட வேண்டாமென, இடுவாய் பகுதி மக்கள் போராடுகின்றனர்; போராட்டத்தில் நியாயம் இருக்கிறது. எதிர்ப்பு தெரிவிப்பது முற்றிலும் நியாயமானது. எதிர்த்து போராடிய, 14 நபர்களை கைது செய்து, கடும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும்; 14 நபர்களையும் விடுதலை செய்வதுடன், மேல் நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.'மன்னிப்பு வீடியோ வெளியிட்டால் குப்பை கொட்ட மாட்டோம்' என்று மிரட்டி, மேயர் வீடியோ வெளியிட செய்தது உண்மையாக இருந்தால், கம்யூ., கட்சி அதை ஏற்காது. இருப்பினும், தனி நபர் மீது தரக்குறைவாக விமர்சனம் செய்வதையும் நாங்கள் ஏற்க மாட்டோம். குப்பை பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகே, வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பா.ஜ.,வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்க, பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து போராடி வருகிறோம். அதுவே எங்கள் பிரதான கடமை; அதை ஒட்டித்தான் நிலைப்பாடு இருக்கும்.அரசியல் ரீதியான எங்கள் போராட்டத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில் தான், உள்ளூர் போராட்ட யுத்திகளை வகுப்போம். பலரும், குப்பை பிரச்னையை அரசியலாக்கி வருவதால், இனியும் தாமதம் செய்யாமல், நிரந்தர தீர்வை வலியுறுத்தி, நாங்களும் போராடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். திருப்பூர் மாநகராட்சி குப்பை விவகாரம் கொழுந்துவிட்டு எரியும் நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் மக்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் குதித்த நிலையில், ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால், கம்யூனிஸ்டுகள் அடக்கி வாசித்தனர்.இது போன்ற பிரச்னைகளில், முதல் ஆளாக போராட வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தேர்தல் நெருங்கும் நிலையில், மக்கள் எதிர்ப்பில் இருந்து தப்பிக்கவே, வேறு வழியின்றி இவ்வளவு தாமதமாக போராட்டம் அறிவித்துள்ளனர் என்கின்றனர் உள்ளூர் மக்கள். இதற்கிடையே, திருப்பூரில் நேற்று முன்தினம் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 612 பேர் மீது மூன்று பிரிவுகளில், திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

suresh Sridharan
டிச 20, 2025 18:52

கூட்டிக் கொடுக்க நான் சொல்வது போன தடவை கொடுத்ததை விட அதிகம் கொடுக்க


பொது உடமை சித்தாந்தம்
டிச 20, 2025 16:59

போன தடவை 25 கோடி. இந்த தடவை கொஞ்சம் கூட போட்டு குடுங்க எசமான்...


aaruthirumalai
டிச 20, 2025 13:04

தோழர்களின் மதிப்பு அதளபாதாலத்தில் உள்ளது. மீட்டெடுக்க என்ன செய்ய போகிறார்கள்.


கண்ணன்
டிச 20, 2025 11:38

கண்துடைப்புக் களவாணிகள் கொடு கைகளில் வந்தாச்சு- வெற்றுக் கோஷம் போட்டாச்சு- இனி உண்டியல் சப்தம் காதைக் கிழிக்கும்


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 20, 2025 11:09

எத்தனை நாளைக்குத்தான் சூட் கேஸ் வரும் ன்னு காத்து இருக்கிறது. இப்படி போராட்டம் ஆர்ப்பாட்டம் ன்னு எதுனாச்சும் அறிவிப்பை வெளியிட்டால் சூட் கேஸ் வெளியே வருமில்லே


MUTHU
டிச 20, 2025 10:18

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் கம்யூனிசம் தான் உலகின் எதிர்காலம் என்று பரவலாய் மக்கள் நினைத்திருந்தனர். ரஷ்யா போன்ற நாடுகள் அதற்கு தீவிர பணஉதவி செய்தன. ஆனாலும் மக்கள் உள்ளுக்குள் தீவிர முதலாளித்துவ எண்ணங்கள் வைத்திருந்தனர். அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கம்யூனிச நாடுகள் என்றாலே அலர்ஜி. இந்தியாவிற்குள் தங்கள் சித்தாந்தங்களை எப்படி நுழைப்பது. அந்த செயல்பாடுகளுக்கு அவர்கள் இட்ட பெயர் "ஜனநாயக குழுக்கள் உருவாக்குதல் அல்லது உதவி செய்தல்" . ஒரு ஜனநாயக குழு என்றால் அதனை எப்படி உருவாக்குவது. பணம் எப்படி கொடுப்பது. அவர்களுக்கு கிடைத்த ஒரு எளிமையான வழி இங்கு தாழ்த்தப்பட்டோர் என்றுள்ளவர்களிடம் அமைப்புகளை உருவாக்குதல். திருமா போன்றோர் உருவாகியது இப்படியே. சரி. மற்றவர்களுக்கு. அதுவே மத மாற்றம். கிறிஸ்தவ அமைப்புகள் ஒரு நாட்டில் ஊடுருவும் வித்தையில்-மக்கள் மனதை மாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். அவர்களின் துணையோடு இந்தியாவிற்குள் எளிதில் ஊடுருவி விட்டார்கள். ஊழலில் கொழுத்த காங்கிரஸ் கட்சி எதனையும் கண்டுகொள்ள வில்லை. இந்தியர்கள் வழக்கம் போல் விழித்துக்கொள்ளவில்லை. தூங்கிய வண்ணமே உள்ளனர். நமது நாட்டில் இப்பொழுது உள்ள அரசியல் குழப்ப செயல்பாடுகளுக்கு ஒரு வகையில் இதுவே காரணம். கருத்து சொல்கிறேன் என்று ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு கட்சி அல்லது இயக்கம் வைத்துக்கொள்கின்றனர். ஏராளமான உப்புமா பத்திரிகைகள் டிவி சேனல்கள் ஆன்லைன் பத்திரிகைகள். இவற்றிற்கு எல்லாம் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வந்த பணம் முற்றிலும் தடுக்கப்பட்டு முடங்கி விட்டது. அதனால் மோடியின் மேல் கடும் கோபத்தில் உள்ளனர். ஜனநாயக குழுக்கள் இதனால் நொடித்துப்போய் விட்டது. இதில் நடந்த உபயோகமான ஒரே விஷயம் கம்யூனிஸ்ட் கட்சி அஸ்தமம் ஆனது தான்.


kjpkh
டிச 20, 2025 07:43

கம்மிகள் ஏழை கட்சி என்பது ஒரு காலம். இப்பொழுது பொட்டி வாங்கும் பணக்கார கட்சி. பொட்டி கொடுக்கும் கட்சிக்கு விசுவாசமானவர்கள்.


SUBBU,MADURAI
டிச 20, 2025 06:38

கம்யூனிஸ்ட்டுகள் தங்களை ஏழைகளுக்கான கட்சி என்று கூறிக் கொள்வார்கள். ஆனால் அதன் அர்த்தம் மக்களை கடைசிவரை ஏழைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்பதுதான்!


SRIDHAAR.R
டிச 20, 2025 06:16

இவர்களை நம்பி ஏமாறாதீர்கள்


சமீபத்திய செய்தி