உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லையேல் காங்கிரஸ் ஒரு சீட் கூட ஜெயிக்காது

தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லையேல் காங்கிரஸ் ஒரு சீட் கூட ஜெயிக்காது

கோவை: மக்களுக்கு நல்லது செய்ய தவறியதை மறைக்கவே, தி.மு.க., மடைமாற்றம் செய்வதாக குற்றஞ்சாட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், போலி வாக்காளர்களை வைத்தா ஸ்டாலின் வெற்றி பெற்றார் என கேள்வி எழுப்பியுள்ளார். கோவை முதலிபாளையத்திலுள்ள மண்டபத்தில் நடந்த, பா.ஜ. கோவை கோட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

அவர் அளித்த பேட்டி:

வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் செய்வதற்கு, தி.மு.க., அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தி.மு.க., கூட்டணி அங்கம் வகிக்கும் காங்., ஆட்சி காலத்திலும் இச்சீர்திருத்தம் நடந்துள்ளது. கடந்த 2,000ம் ஆண்டுக்கு முன், 10 முறையும், அதன்பின், மூன்று முறையும் சிறப்பு சீர்திருத்தம் நடந்துள்ளது. அப்போது ஏன் தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? வாக்காளர் சீர்திருத்தப் பணி என்பது மக்களின் ஓட்டுரிமையை பறிக்கிறது, பா.ஜ., வெற்றி பெற சூழ்ச்சி நடக்கிறது என்கிறார், முதல்வர் ஸ்டாலின். அரசியலமைப்பு சட்டத்தின்படிதான், தேர்தல் ஆணையம் இப்பணியை மேற்கொள்கிறது. இது தெரியாமல் துணை முதல்வர் உதயநிதி, இது 'ரிவிஷன்' அல்ல; 'ரெஸ்ட்ரிக் ஷன்' எனக் கூறி வருகிறார். முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறை சரியில்லை என்றனர்; அவர்கள் வெற்றி பெற்றதும் அது குறித்து எதுவும் பேசவில்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறையை பா.ஜ., தவறாக பயன்படுத்துகிறது என்கின்றனர். வருமான வரித்துறையின் வழக்கு, ஒரு இடத்தில்கூட தவறாகப் போடப்படவில்லை. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி சீர்குலைந்துள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய தவறியதையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததையும் மறைக்கவே, வாக்காள சீர்திருத்தப் பணியை குறை கூறி, தி.மு.க.,வினர் மடைமாற்றம் செய்கின்றனர். வாக்காளர் சீர்திருத்தப் பணியை, மாநில அரசு ஒத்துழைக்க மறுத்தாலோ, தடுக்க முயன்றாலோ, சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும். 'நீட்' தேர்வை வரவிடாமல் தி.மு.க.,வினர் தடுத்தனர். 'நீட்' வந்த பிறகுதான் கிராமப்புற ஏழை மாணவர்கள் டாக்டர் ஆகின்றனர். மத்திய அரசின் நல்ல திட்டங்கள், தமிழக மக்களுக்கு கிடைக்காமல் தடுக்கிறது தி.மு.க., அரசு. தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவில்லையேல், தேர்தலில் காங்., ஒரு சீட் கூட ஜெயிக்காது. தேசியத்தையும், ஆன்மிகத்தையும் மனதில் வைத்து நடத்தும் கட்சி பா.ஜ., ஒன்றுதான். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். போலிகளால் ஸ்டாலின் வெற்றி முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்துார் தொகுதியில், 4,379 போலி வாக்காளர்கள் உள்ளனர். 933 வாக்காளர்கள் போலி முகவரியிலும், 80 பேரின் வாக்காளர் அடையாள அட்டையில் ஒரே முகவரியும் உள்ளது. இப்படிப்பட்ட போலிகளை வைத்துதான் ஸ்டாலின் வெற்றி பெற்றார். தனியார் நிறுவனத்தின் தரவுகளை வைத்து, ராகுல் பேசுகிறார். அந்நிறுவனமே, அது தவறான தரவுகள் என்கிறது. பீஹார் மாநிலத்தில் மரணமடைந்த, 22 லட்சம் பேரின் பெயர்கள், வாக்காளர் அட்டையில் இருப்பது தெரிய வந்துள்ளது. 35 லட்சம் பேர் பீஹாரை விட்டே வெளியே சென்றும், இன்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது. இப்படி, 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட வேண்டியுள்ளது. - நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

vaiko
நவ 13, 2025 01:08

இந்த முந்திரி இதுவரை எதனை தேர்தல்களில் நின்று ஜெயித்து இருக்கின்றார்


Bala
நவ 13, 2025 00:47

Wrong statement. Congress illana DMK zero . Tamilnadu eppavum Congress ku support . Nalla leader Congress ku illa athaan ippadi nadakkuthu


Anbarasu K
நவ 12, 2025 21:13

சரியா சொன்னிங்க ஆனா கூட்டணி இல்லன்னா திமுக கூட வெற்றி பெறாது போலயே பிஜேபி யம் ஜெயிக்காதுங்க


T.sthivinayagam
நவ 12, 2025 21:12

ஜெயலலிதா அம்மையார் போல தமிழக முதல்வர் ஆக மத்திய அமைச்சருக்கு அதிக விருப்பம் என்று கட்சி தொண்டர்கள் பேசுகின்றனர்.


shyamnats
நவ 12, 2025 20:22

திமுக, கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட தைரியமில்லாமல் தானே அணைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டிருக்கின்றது . சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் ஒட்டுண்ணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சி கட்டிலில் அமர்ந்து வதைத்து கொண்டிருக்கிறார்கள்.


2010starsekar
நவ 12, 2025 19:03

காங்கிரஸ் என்ற ஒரு கட்சியை தமிழகத்தில் கிடையாது இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிலேயே கிடையாது


Sundar R
நவ 12, 2025 18:52

Since inception, DMK had no courage to con alone. It is unfortunate situation for the Congress to ally with the DMK, eventhough the DMK people are universally known bad guys. Glorious days will come again to the Congress only when they strip their ties with the DMK.


ஆரூர் ரங்
நவ 12, 2025 14:37

திமுக வரலாற்றில் ஒரு முறை கூட கூட்டணியில்லாமல் போட்டியிட்டதில்லை . ரெய்டு பயத்தில் பலவீனமான காங்கிரசுக்கு கூட 63 சீட் கொடுத்தது. மற்றவர்கள் கூட்டணியமைப்பது பற்றிப் பேச திமுக ஆட்களுக்கு அருகதையில்லை.


Anantharaman Srinivasan
நவ 12, 2025 11:49

கூட்டணியில்லாமல் பாஜக தமிழ்நாட்டில் போட்டியிட்டால் எத்தனையிடங்களில் ஜெயிக்கும். ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரசும் பாஜகவும் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடட்டும். தெரிந்து விடும் அப்பொழுது.


Srinivasan
நவ 12, 2025 11:45

காங்கிரஸ் கூட்டணி இல்லையேல் திமுகவும் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது. டெபாசிட் போயிடும். எல்லா கட்சியையுமே தனியா நிக்க சொல்லுங்க. உடைந்த சேர் எல்லாம் காணாமல் போய்விடும்.


சமீபத்திய செய்தி