உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் சரிவு: பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகரிப்பு

தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் சரிவு: பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லோக்சபா தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ள அ.தி.மு.க., 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், ஒரு தொகுதியில் நான்காம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அமோக வெற்றி பெற்ற போதிலும், தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் சரிவை கண்டுள்ளது.அ.தி.மு.க., கூட்டணி, 2004 லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதன்பின், தோல்வியிலிருந்து மீண்ட அ.தி.மு.க., 2014 லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m0dn6mcp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், 2011, 2016 சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது.ஜெயலலிதா மறைவுக்குப் பின், அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சட்டசபை தேர்தலில், பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்திருந்த நிலையில், 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகி, தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை இணைத்து தேர்தலை சந்தித்தது. பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதால், சிறுபான்மையினர் ஓட்டுகள் வரும்; வெற்றி வசமாகும் என, அ.தி.மு.க., தலைமை நம்பியது. ஆனால், அக்கட்சிக்கு தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தையே தந்துள்ளன.விருதுநகர் தொகுதியில் மட்டும், தி.மு.க., கூட்டணிக்கு கடும் சவாலை அளித்தது. மற்ற தொகுதிகளில், அ.தி.மு.க., பெரும் போட்டியை தரவில்லை. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும், கன்னியாகுமரி தொகுதியில் நான்காம் இடத்தையும் பெற்று, பெரும் சரிவை கண்டுள்ளது.தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திகழ்கிறோம் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி வந்த நிலையில், அக்கட்சி 12 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.அ.தி.மு.க., ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு அதிக அளவில் சென்றுள்ளன. இதன் காரணமாக, பா.ஜ., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில், மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளில், பா.ஜ., இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., ஆகியவை இடம் பெற்றிருந்தன. அந்த தேர்தலில் அ.தி.மு.க., 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 30.27 சதவீத ஓட்டுகளைப் பெற்றது.பா.ஜ., ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு, 3.66 சதவீதம்; பா.ம.க., ஏழு இடங்களில் போட்டியிட்டு, 5.42 சதவீதம்; தே.மு.தி.க., நான்கு இடங்களில் போட்டியிட்டு, 2.19 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றன.இந்த தேர்தலில், அ.தி.மு.க., 35 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.46 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றுள்ளது. தே.மு.தி.க., நான்கு தொகுதிகளில், 2.59 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. பா.ஜ., 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 11.24 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.தி.மு.க., கூட்டணியில், 2019 தேர்தலில் 23 இடங்களில் களம் இறங்கிய தி.மு.க., 32.76 சதவீத ஓட்டுகளை பெற்றது. இந்த தேர்தலில், தி.மு.க., 22 இடங்களில் போட்டியிட்டு, 26.93 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது; அதன் ஓட்டுகளும் குறைந்துள்ளன.இந்த தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் குறைந்த நிலையில், பா.ஜ., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது, நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு திசை மாறியதையே காட்டுகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Maharaja M
ஜூன் 06, 2024 21:10

பிஜேபி மாஸ்


Maharaja M
ஜூன் 06, 2024 21:08

பிஜேபி mass


Prem
ஜூன் 05, 2024 20:14

என்றைக்கு இந்த பல்லக்கு தூக்கும் வேலையை, விடும் என்று தெரியவில்லை.


Ganesan
ஜூன் 05, 2024 18:15

தமிழக பாஜக வாக்கு சதவீதம் அடிப்படையில் பார்த்தால் 2014: 5.5% 2,223,566 வாக்குகள் என்டிஏ கூட்டணி 2019: 3.7% 1551924 வாக்குகள் அதிமுக கூட்டணி 2024: 10.7% 3345897 வாக்குகள் என்டிஏ கூட்டணி முன்னேற்றம் போல தெரியலாம். ஆனால் 2014ல் பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. அப்போது அவர்கள் போட்டியிட்டது 8 சீட். 2014ல் அவர்கள் போட்டியிட்டது 5 சீட். 2019ல் ஒரு தொகுதிக்கு 3 லட்சம் வாக்குகள் வந்துள்ளது. 2014ல் ஒரு தொகுதிக்கு சராசரியாக 277945 வாக்குகள் வந்துள்ளது. 2024ல் 23 இடங்களில் பாஜக சின்னம் நின்றுள்ளது. பாரி வேந்தர் தேவநாதன் யாதவ் எல்லாம் சேர்த்து. இதில் தொகுதிக்கு 1.7 லட்சம் வாக்குகள் என்று பாஜக சுருங்கி உள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் எடுத்ததை விட பாஜக சரிந்து உள்ளது. 50 சதவிகித வளர்ச்சி அண்ணாமலை தலைமைக்கு கீழ் சென்றுள்ளது. மொத்தமாக 11 சதவிகிதம் வாக்கு பெற்றுள்ளது. பாஜக 25 சதவீதம் வாக்குகளை பெறும் என்று அண்ணாமலை கூறிய நிலையில் அதுவும் அண்ணாமலைக்கு எதிராக திரும்பி உள்ளது.


skv srinivasankrishnaveni
ஜூன் 05, 2024 14:13

தமிழர்கள் 2/3 எல்லாம் டாஸ்மாக்கிவாசிகள் முக தானே கொண்டாந்து குடிக்கவாச்சாறு அந்த விசுவாசம் பலன் நீதி நேர்மை உண்மை சத்தியம் இதெல்லாம் குடிகாரப்படைக்கு சுத்தமா தெரியாதுங்கோ ,இப்படியேபோனால் பொய்மையே உறுதி என்று வாழும் திமுகாவுக்கே வோட்டுப்போட்டுட்டு மேலும் மேலும் குடியார்ப்படைகளை அதிகமாக்குவானுக திமுகலே பல பெரியமனுஷாளும் மேலும் பழகிடிகளை KUVIPPAANGKO


venugopal s
ஜூன் 05, 2024 12:11

அடுத்த தேர்தல் தோல்வி வரும் வரை இதேபோல் ஆறுதல் சொல்லி சொறிந்து விட்டுக் கொள்ள வேண்டியதுதான்!


hari
ஜூன் 05, 2024 13:25

ஆமாம் உண்மை .....தமிழ்நாட்டு மக்கள் கொல்லிக்கட்டையை எடுத்து தலையில் சொரிகிறார்கள்.....பலன் பிறகு தெரியும்....


எஸ் எஸ்
ஜூன் 05, 2024 10:57

மலைகள் கரைகின்றன. மணல் ஏற்கனவே கொள்ளை போய்விட்டது. எதிர்கால தலைமுறையினர் எப்படி வாழ்வார்களோ என்று பயம் ஏற்படுகிறது. நம் கலாச்சாரம், இறை நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கிறது, எங்கும் ஊழல் என்றாலும் கவலைப் படாமல் மீண்டும் மீண்டும் இவர்களுக்கே வாக்களிப்போம்.


Ganesh Shetty
ஜூன் 05, 2024 20:06

செருப்பால் அடித்தாலும் அவர்களுக்கே வாக்களிப்போம் ,என்றென்றும்.. எப்போதும்... ஏனென்றால் குவார்ட்டரும் ,கோழி பிரியாணியும் நீ தருவியா


தமிழ்
ஜூன் 05, 2024 09:40

இதுபோன்ற சமாளிப்பு கட்டுரை வரும் என்று ஏற்கனவே எதிர்ப்புர்த்ததுதான்.


Neutrallite
ஜூன் 05, 2024 10:47

இது போன்ற சமாளிப்பு கருத்து வரும் என்று 200 ஊபிகளிடம் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான்.


Vasoodhevun KK
ஜூன் 05, 2024 09:03

பா.ஜ.க இங்கே யாராலும் வெற்றிபெற முடியாத கட்சி அடுத்த பல ஆண்டுகள் இங்கே பா.ஜ.க ஆட்சிதான் என்று நான் தொடர்ந்து எழுதிவந்தாலும் என்னால் வெளிப்படையாகக் கூறமுடியாதவற்றை நாங்கள் நடத்திய கோவை, சென்னை, மதுரைக் கூட்டங்களில் கூறினேன் அதில் கலந்துகொண்ட நண்பர்களுக்குத் தெரியும் - ஆம், பாரதம் மிகமிக ஆபத்தான காலகட்டத்தை நோக்கி நகர்ந்து வகிறது என்பதே அது, 1947-பிரிவினையின் பொழுது நமக்கு இழைக்கப்பட்ட அநீதி இன்று வளர்ந்து மரமாகி நிற்க்கிறது நாடு மற்றொரு பிரிவினையை எதிர்கொண்டே தீரவேண்டும் இது சத்தியம்- 2039-ல் இங்கே பா.ஜ.க தோற்க வாய்ப்பிருப்பதாகக் கருதினேன் அது வெகு சமீபத்தில் வந்தேவிட்டது அதற்குக் காரணம் இங்கே அபரிதமாக வளர்ந்துவிட்ட இஸ்லாமியர்களின் மக்கள்தொகை, நான் பார்த்த ஒரு சர்வேயில் அது 2038-ல்தான் இங்கே பெரும்பான்மையாகும் என்று நினைத்தேன் ஆனால், 2011 ற்குப் பிறகு இங்கே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை 2021-ல் எடுத்திருந்தால் புரிந்திருக்கும் அவர்கள் இங்கே 30% ற்கும் மேல் வளர்ந்துவிட்டார்கள் என்பது- இவ்வளவு தூரம் நமது நாட்டை கொரோனா பேரிடரில் இருந்து காப்பாற்றி பொருளாதார நாடுகளின் பட்டியலில் நான்காமிடத்திற்குக் கொண்டுவந்து, 10 வருடங்களாக ஊழலற்ற கலவரமற்ற நாடாகவும், உலகநாடுகள் மத்தியில் மதிப்புமிக்க நாடாகவும் மாற்றி வைத்திருக்கக்கூடிய மோடியையே தோற்கடிக்க முடிகிறது என்றால் இவர்கள் யார்?- சாட்ஷாத் இங்கே பெருகிவிட்ட இஸ்லாமியர்கள்தான், இதை நான் இன்னும்10 வருடங்கள் கழித்து எதிர்பார்த்தேன், அது இன்றே ஆரம்பித்துவிட்டது, எழுதிவைத்துக்கொள்ளுங்கள் இன்னும் ஒரு பத்து வருடங்கள் இங்கே பா.ஜ.க ஆண்டாலும் நமது அழிவைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது, இவை நான் எப்பொழுதும் யோசிப்பதுதான், இது மட்டுமேதான் எனது கவலை இன்று உறுதியாகிவிட்டது மற்றுமொரு மாப்ளா, நவகாளி நடக்கும் பொழுது புரியும், இனிமேல் அதைத் தடுக்கும் சக்தியும் நமக்குக் கிடையாது, ஏனென்றால் இங்கே 70% ஹிந்துக்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது- வந்து குவிந்துள்ள வங்கதேச, பாகிஸ்தான் அகதிகளை விரட்டினாலே பாதிப்பிரச்சினைகள் தீரும் அதை அடுத்த 5 ஆண்டுகளில் மோடி செய்துமுடிப்பார் என்று நம்பினேன்,ஆனால் கூட்டணிக்கட்சிகளின் தயவில் எதையும் செய்யமுடியாது என்பதால் எனக்கு நம்பிக்கை போய்விட்டது- உலகத்திலேயே கேவலமான ஜந்துக்கள் இந்த நடுநிலை நக்கி ஹிந்துக்கள்தான். பாவம் அவர்களும் என்ன செய்வார்கள் அவர்களை முட்டாள்களாக வைத்திருக்கத்தான் ஆயிரம் மீடியாக்கள் உள்ளனவே - இறுதியாக அறுதியிட்டுக் கூறுகிறேன் இங்கே ஹிந்துக்களின் மக்கள்தொகை இன்று 60% தான், ஹிந்துக்களாக உணர்ந்தவர்கள் வெறும் 20% -


Ganesh Shetty
ஜூன் 05, 2024 20:13

அதனால் என்ன 10 வருடங்களாய் ஆட்சி தனியாகத்தான் நடத்தினீர்கள் இந்துக்களுக்கு இந்து தேசம் என்று அறிவித்தீர்களா? அல்லது கான்கிரஸ்ஸால் சொருகப்பட்ட மதசார்பற்ற வாசகத்தை அரசியல்அமைப்பு புத்தகத்தில் இருந்து நீக்கினீர்களா ? எப்போதும் விளம்பரமாய் அலைந்தீர்கள் அதனால் வைத்தார்கள் 1.60 கோடி இந்துக்கள் ஆப்பு... இனி கூட்டணியுடன் அடங்கியே இருங்கள் ,


அரசு
ஜூன் 05, 2024 08:14

கீழே விழுந்தேன், ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ