உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேர்தல் நிதி வசூலிக்க தி.மு.க., மும்முரம்: இலக்கு நிர்ணயத்தால் மா.செ.,க்கள் கலக்கம்

தேர்தல் நிதி வசூலிக்க தி.மு.க., மும்முரம்: இலக்கு நிர்ணயத்தால் மா.செ.,க்கள் கலக்கம்

மதுரை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தேர்தல் நிதி வசூலிக்க தி.மு.க., தரப்பில் மும்முரமாக களம் இறங்கி விட்டனர். இதையொட்டி இன்று, மாவட்டம் வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வசூல் இலக்கு எவ்வளவு என்ற விபரத்தை தெரிவிக்கும் சிறப்புக் கூட்டங்கள் நடக்கவுள்ளன.கட்சி வளர்ச்சி, தேர்தல் செலவுக்காக அரசியல் கட்சிகள் மக்கள், நிறுவனம், தொழிலதிபர்களிடமிருந்து நிதி வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இதற்காக நிதி அளிப்போருக்கு கட்சி சார்பில் ரசீது வழங்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mwl9luvf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆளும் கட்சியான தி.மு.க., வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க, 2016க்கு பின், இந்தாண்டு தேர்தல் நிதி வசூலிக்க களம் இறங்கியுள்ளது. இதற்காக மாவட்டச் செயலர்கள், ஒன்றியம், பகுதி, வட்டம், கவுன்சிலர் என பதவிக்கு ஏற்ப வசூல் இலக்கை கட்சி தலைமை நிர்ணயித்துள்ளது. இதில் யாருக்கு என்ன இலக்கு என்பது குறித்து மாவட்டம் வாரியாக, இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், மாவட்டச் செயலர்கள் அறிவிக்க உள்ளனர். இதற்காக மாவட்டம் தோறும் கட்சி சார்பில் சிறப்பு கூட்டம் கூட்ட, தலைமையிடம் இருந்து உத்தரவு சென்றுள்ளது. முன்னதாக, நன்கொடைக்கான டிக்கெட்டுகளை பல மாவட்டங்களுக்கு கட்சி தலைமை அனுப்பி வைத்துள்ளது. சில மாவட்டங்களில் மாவட்டச் செயலரே அச்சடித்துள்ளனர். குறைந்தது 1 லட்சம் ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்சியின் வட்டச் செயலர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை கலக்கம் அடைந்துள்ளனர்.

தி.மு.க.. நிர்வாகிகள் கூறியதாவது:

துணை முதல்வர் உதயநிதி கூறியது போல் வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க., இப்போதே தயாராகி விட்டது. மத்தியில் பா.ஜ., எதிர்ப்பு, தமிழகத்தில் நடிகர் விஜய் வருகை, அண்ணாமலையின் தடாலடி அரசியல், அ.தி.மு.க., ஒன்றிணைந்து கூட்டணி பலமாக அமைந்தால் அதை சமாளிப்பது, வி.சி.க.,வின் திருமாவளவன் போன்றோர் ஆட்சியில் பங்கு கோஷம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் தி.மு.க.,வுக்கு உள்ளன.இவற்றையெல்லாம் பணத்தை வைத்து ஈடுகட்டலாம் என தி.மு.க., தலைமை முடிவெடுத்திருக்கிறது. அதனால், பொருளாதார ரீதியாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அதையடுத்தே, தேர்தல் நிதி வசூலிக்க வேண்டிய கட்டாயம் கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், இது வரை நிதி வசூலிப்பில் தி.மு.க., தரப்பு ஈடுபடவில்லை. ஆனாலும், தேர்தல் நெருங்குவதால், 2016க்கு பின், தற்போது தேர்தலுக்காக நிதி வசூல் செய்யும் திட்டத்தை தி.மு.க., கையில் எடுத்துள்ளது. இதன்படி 500, 1000, 10,000 ரூபாய் என நன்கொடை டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டச் செயலர்களுக்கு அனுப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

S Srinivasan
நவ 29, 2024 16:07

ஏய் எல்லா கடையும் உடை எல்லார்கிட்டயும் பணம் கேளு எவன் கொடுக்கவில்லையோ அவனை அடி எப்படியாவது பணத்தைக் கொண்டு வந்து சேர்


N Srinivasan
நவ 29, 2024 16:01

தேர்தல் பத்திரம் கூடாது என்று சொன்ன நீதி துறை வாய் மூடிக்கொண்டு இருக்கும் கலியுகத்தின் உச்சம்


Ramesh Sargam
நவ 29, 2024 13:30

மா.செ.,க்கள் கலக்கம். மக்களுக்கு வசூலிக்க வரும் மா.செ.க்களால் அச்சம். எங்கே மிரட்டி, அடித்து, உதைத்து நிதி வசூலிப்பார்களளோ என்று.


வைகுண்டேஸ்வரன்
நவ 29, 2024 12:34

"வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க., இப்போதே தயாராகி விட்டது". இது தான் முக்கியம். பிற கட்சிகள் என்ன பண்ணுதுங்க என்று பார்க்க வேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 29, 2024 12:32

. 2026 தேர்தல் பணிகளில் தேர்தல் நிதியும் ஒன்று. எல்லா கட்சிகளும் இலக்கு வைத்து தான் இயங்கும்.?


krishna
நவ 29, 2024 22:54

AAHA EERA VENGAAYAM OOPIS CLUB GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBAL THALA VAIKUNDESWARAN ENNAMAAV MUTTU KODUKKARAARU SUPER.


Balasubramanian
நவ 29, 2024 12:05

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!


NACHI
நவ 29, 2024 09:47

விளங்கிடும் ....தொண்டர்கள் ஓட்டம் ????


Kanns
நவ 29, 2024 11:19

Election Commission Must DeRecognise All Parties Indulging in Direct Looting of People under Garb of Compelled Donations for Vote-Briberies& Extravagant Expenditures Besides Arresting-Prosecuting-Convicting All Involved Persons incl Topleaders


ஆரூர் ரங்
நவ 29, 2024 09:34

அதிக தேர்தல் நிதி வசூலித்ததைப் பாராட்டி அண் திரு கரு.வுக்கு பொது மேடையில் மோதிரம் பரிசளித்தார். அதனைக் கண்ட இன்னொரு தலைவர்( கவிஞர்) ஏன் எனக்கு மோதிரம் கிடையாதா எனக் கேட்டார். அதற்கு அண் நீயும் அவரைப் போலவே சொந்தக் காசில் ஒரு மோதிரம் வாங்கிட்டு வா. தாராளமாக போட்டு விடுகிறேன் என்றாராம். கட்டுமரம்ன்னா சும்மாவா?


கிஜன்
நவ 29, 2024 08:40

தவறான செய்தி ... இலக்கு நிர்ணயிக்காவிட்டால்தான் கலக்கம் அடைவார்கள் ... இனி புகுந்து விளையாடுவார்கள் ...


Rajarajan
நவ 29, 2024 07:17

கடன்கொடுத்தவன் வட்டியும் / நன்கொடை கொடுத்தவன் ஆதாயமும் / முதல் போட்டவன் லாபமும் அடைவது தான் அரசியல். இதில் நேர்மை, தூய்மைக்கு ஆட்சியில் இடமேது ? சாத்தன் வேதம் ஓதலாமா ?? இப்படி ஆட்சி அமைந்தால், விலைவாசி உயர்வும் / வரி உயர்வும் தாங்கித்தானே ஆக வேண்டும். இலவசத்தை விரும்புபவன், இந்த இம்சயை அனுபவித்தே ஆக வேண்டும். இது அரசியல் விதி.


புதிய வீடியோ