உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான் தொழில் நடத்த முடியும்

தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான் தொழில் நடத்த முடியும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பம்மல் காமராஜ்புரத்தை சேர்ந்த பீட்டர் கஸ்பவர் என்பவர், எம் - சாண்ட் ஆலை நடத்தி வருகிறார். தி.மு.க., வார்டு செயலர் அனிஷ்டன் என்பவர், மாமூல் கேட்டு தராததால், தன்னை தாக்கியதாக பீட்டர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:

பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் 3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் ஐந்தாவது வார்டு தி.மு.க., வட்ட செயலர் அனிஷ்டன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், குவாரி உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர். நான்கு ஆண்டுகளில், 75 லட்சம் ரூபாய் வரை, குவாரி உரிமையாளர்களிடம் இருந்து, தி.மு.க., வட்ட செயலர் வசூலித்திருப்பது தெரிகிறது. தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால் தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் என்று எழுதப்படாத விதி இருக்கிறது. விசாரணை வளையத்தில் இருந்து, ஊழல்வாதிகளை காப்பாற்ற, மக்கள் வரிப் பணத்தில், உச்ச நீதிமன்றம் வரை செல்லும், முதல்வர் ஸ்டாலின், தனது கட்சிக்காரர்களிடம் இருந்து, மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. அனைத்து துறைகளிலும், ஊழல், கனிம வளங்கள் கொள்ளை, தி.மு.க., குறுநில மன்னர்களின் கட்டாய வசூல், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு என, இருண்ட காலத்தில் தமிழகம் தள்ளாடுகிறது. ஆனால், இவை குறித்து, எந்த கவலையும் இன்றி, கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

S Srinivasan
மே 24, 2025 12:46

that is why some big industry is not staying in TN even after mom people are rushing to UP, Gujarat and MP.


Kumaran
மே 24, 2025 12:01

சாக்கடைக்கும் சந்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாதவனிடம் சந்தனத்தின் அருமையை எவ்வளவு சொன்னாலும் புரியாது, தவறு செய்பவனை தட்டி கேட்பது தர்மம், அதற்கு வக்காலத்து வாங்குவது அதர்மம். எங்கோ ஓரிடத்தில் தானே நடக்கிறது நமக்கு என்ன என்று இருந்தால் நாளை நமக்கும் நடக்கும்.


Gopalan
மே 24, 2025 09:36

ஏற்கனவே டாஸ்மாக் விவகாரத்தில் அதிகாரிகள் நடுங்கி ஆட்டோவில் பதுங்கி விழித்தார்கள் சமீபத்தில். மக்களின் நலனை கவனித்து மாற வேண்டும்.


pmsamy
மே 24, 2025 08:24

இந்தியாவிலேயே அதிக அளவு தேர்தல் பிரமாண பத்திரங்கள் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதற்கு பெயர் தான் கப்பம்


Padmasridharan
மே 24, 2025 06:39

பீச் போன்ற பொது இடத்துல மக்கள் மது_மாது வோட போறதுக்கு காவலர்கள் கப்பம், பயமுறுத்தி கேட்டு வாங்குறாங்களே இதுக்கு அண்ணா என்ன சொல்வாரு. எல்லா கட்சிகளும், சூரியனை அஸ்தமிக்கனும்னு நினைச்சு பேசிக்கிட்டே இருக்காங்க. ஆனா 5 வருஷம் நடுவுல இறக்க முடியல பார்த்திங்களா அதுதான் சூரியனோட பலம். பிறகு விஜயம் செய்யும் கட்சியும் 5 வருஷம் முழுசா தொடரும்


மணி
மே 24, 2025 05:22

தி.மு.க.விடம் நீ வாங்கவே இல்லயா ( கப்பம் சும்மா இப்பதா


vivek
மே 24, 2025 07:30

200 ரூவா மணி பேசலாம்....


புதிய வீடியோ