உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மத்திய அரசுக்கு பிச்சை போடுவேன் என்பதா?: எம்.எல்.ஏ., பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்

மத்திய அரசுக்கு பிச்சை போடுவேன் என்பதா?: எம்.எல்.ஏ., பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்

திருச்சி: “வரி செலுத்தியதை, மத்திய அரசுக்கு நான் போட்ட பிச்சை என்று சொன்ன தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி, தன் கருத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,” என பா.ஜ., நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வான பழனியாண்டி அலுவலகத்தை, பிரியாணி கடை நடத்த வாடகைக்கு விட்டு இருப்பதாக, அ.தி.மு.க.,வின் திருச்சி மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசன், சமீபத்தில் குற்றஞ்சாட்டி பேசினார். அதன்பின், திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி, சீனிவாசன் கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசினார். அப்போது, “நான், நான்கு தலைமுறைக்கு முன்பே பணக்காரன்; அப்படியென்றால் பரம்பரை பணக்காரன். ஆண்டுதோறும், மத்திய அரசுக்கு, ஜி.எஸ்.டி.,யாக மட்டும் 2 கோடி ரூபாயும், இதர வரி வகையில் 1 கோடியே 5 லட்சம் ரூபாயும் கட்டுகிறேன். ''இப்படித்தான், மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் பிச்சை போட்டுக் கொண்டு இருக்கிறேன். அதனால், அ.தி.மு.க., மாநகர் மாவட்டச் செயலர் சீனிவாசனுக்கு நாவடக்கம் தேவை,'' என்றார்.இந்நிலையில், சமீபத்திய மத்திய பட்ஜெட் தொடர்பாக, தேசிய மின் நுாலகம் மற்றும் ஆவணப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் ஆகியோர் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:வரி செலுத்துவதை பிச்சை என ஒரு எம்.எல்.ஏ., பேசினால், அது வாய்க்கொழுப்பு. சமூக விரோதி போல ஒரு எம்.எல்.ஏ., பேசியுள்ளார். அதனால், அவருடைய பேச்சை வைத்து, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், எம்.எல்.ஏ., குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். கிடைக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.நான்கு தலைமுறையாக, தான் பணக்காரராக இருப்பதாகவும் எம்.எல்.ஏ., சொல்லி இருக்கிறார். அப்படியென்றால், அவருடைய அப்பா, தாத்தாவெல்லாம் ஜமீன்தாரராக இருந்தனரா; பல கோடிகளை வரியாக செலுத்தும் அளவுக்கு எம்.எல்.ஏ.,வின் சம்பாத்தியத்துக்கான வழி என்ன?'எம்.எல்.ஏ., மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனாலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்.நான் செலுத்தும் வரி, மத்திய அரசுக்கு போட்ட பிச்சை என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு எங்கிருந்து வந்தது தைரியம்? விமர்சனம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பேசலாமா? வாய்க்கொழுப்பு எம்.எல்.ஏ., தான் சொன்ன கருத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், பா.ஜ., சார்பில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு ஆசிர்வாதமும், கவிதாசனும் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

ES
பிப் 17, 2025 22:37

I pay taxes so I should not demand anything? shameless idiots in this post


பல்லவி
பிப் 17, 2025 21:52

பிச்சை போடுவதே நல்லது பிச்சையை பெற்றுக்கொள்ளுதலும் நல்லது கௌரவம் பார்க்க கூடாது


venugopal s
பிப் 17, 2025 21:24

மத்திய பாஜக அரசுக்கு பிச்சை எடுப்பது கேவலமாகத் தெரியவில்லை.ஆனால் யாராவது பிச்சைக்காரன் என்று சொன்னால் மட்டும் ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது?


Rangarajan Cv
பிப் 17, 2025 19:56

Very low level of political discourse. If he considers paying taxes is alms to beggars, then all govt institutions including SC ,


sankaranarayanan
பிப் 17, 2025 19:05

இப்படித்தான், மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் பிச்சை போட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று கூறிய அசெம்பிலி எமெலேக்கு நாவடக்கம் தேவை இதுபோன்று அவர் அவையில் பேசுவாரா இதை கூறிய இவரே தன்னை பிச்சைக்காரன் என்று சொல்லாமலே சொல்கிறாரா அதை யாருமே மறுக்க முடியாது பிச்சைகாரகளில் இருவிதம் உண்டு ஒன்று கையேந்தும் பிச்சைக்காரர் மற்றோரோருவர் கையேந்துபர்களுக்கு கைகொடுக்கும் பிச்சைக்காரர் இதில் இவர் எந்த விதம் என்று மக்களே நீங்களே தீர்மானியுங்கள்


என்றும் இந்தியன்
பிப் 17, 2025 16:06

பிச்சை போடுவேன் என்பதா?: எம்.எல்.ஏ., இதில் என்ன தவறு???நாய் குலைக்கும் யார் வர என்று வித்தியாசம் பாராமல் . பன்றி மனிதனின் உடல் கழிவை தின்னும் அதைப்போலத்தான் திருடர்கள் முரடர்கள் கயவர்கள் கட்சி M-மு....டாள் L- Low level எ-அசிங்கமான எண்ணம் உடையவன். இப்போ சரியா வருதா


ப.சாமி
பிப் 17, 2025 15:06

இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது.மத்திய அரசுக்கே பிச்சை போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் பிச்சை, தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பிச்சை இப்படி பல பிச்சை போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது


Ramesh Sargam
பிப் 17, 2025 12:36

ஒவ்வொருமுறை தமிழக திட்டங்களுக்கு நிதி தேவைப்படும்போது தமிழக முதல்வர்தான் டெல்லி சென்று மத்திய அரசிடம் யாசகம் கேட்கிறார் என்பதை இந்த மூளையற்ற எம் எல் ஏ எப்படி மறந்தான்? அப்படி என்றால் தமிழக மக்களிடம் மாநில வரி வசூலிப்பது, மக்கள் போடும் பிச்சை என்று நான் கூறவா?


krishna
பிப் 17, 2025 12:09

ADA NEENGA VERA


பல்லவி
பிப் 17, 2025 11:26

ஒரு பழஞ்சொல் ஞாபகம் வருகிறது பிச்சை எடுத்தானாம் ஒருவன் …. அதைப்புடுங்கித்தின்னானாம் ….இன்னொருவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை