உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கரூரில் இ.எம்.ஐ., நிவாரணம்; மக்கள் நீதி மய்யம் புதுமை

கரூரில் இ.எம்.ஐ., நிவாரணம்; மக்கள் நீதி மய்யம் புதுமை

சென்னை : கரூரில் உயிரிழந்த, 41 பேரில் எட்டு குடும்பத்தினருக்கு, நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நிவாரண உதவி வழங்கினார். மீதமுள்ள 33 குடும்பத்தினருக்கு, கட்சி நிர்வாகிகள் நேற்று நிவாரண நிதி வழங்கினர். த.வெ.க., தலைவர் விஜய், செப்., 27ம் தேதி, கரூரில் பிரசாரம் செய்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். உயிரிழந்தோர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் அரசு தரப்பில் பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. அதே போல, நடிகர் விஜய், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் இருபது லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். காங்., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும் இழப்பீடு அறிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்க, கமல், நேற்று முன்தினம் கரூர் சென்றார். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில், எட்டு பேர் குடும்பத்தினரை, கமல் சந்தித்து ஆறுதல் கூறினார். கூடவே, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். மீதமுள்ள 33 குடும்பத்தினர், வெவ்வேறு இடங்களில் வசிப்பதால், கமல் அங்கு செல்லவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் தங்கவேலு தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் வழங்குவர் என அறிவித்து விட்டுத் திரும்பினார். இதனால், 'உயிரிழந்தோர் குடும்பத்தினரில் எட்டுப் பேருக்கு மட்டும் தான் வழங்கி விட்டு, மீதமுள்ள குடும்பங்களுக்கு கட்சி நிர்வாகிகள் வழங்குவர்' என நடிகர் கமல் தெரிவித்தது, 'இழப்பீட்டுத் தொகையை இ.எம்.ஐ., போல தவணை முறையில் வழங்குகிறாரா?' என பலரும் கிண்டல் செய்தனர். இதையடுத்து, மீதமுள்ள 33 குடும்பத்தினருக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

K SRINIVASAN
அக் 08, 2025 16:39

கமல் மாதிரி ஒரு நடிகர் இனி தமிழ் சினிமாவுக்கு கிடைக்க மாட்டார்.


vivek
அக் 08, 2025 17:37

ஆமாம் சினிமா உலகம் தப்பித்து விட்டது சீனு


Gokula Krishnan, Atlanta
அக் 08, 2025 16:06

என்ன இருந்தாலும் இவர் நாத்திகர் என்று அவரே சொல்லிக்கொண்டாலும், பிறப்பால் உயரிய இரத்தம், தன் சம்பாதிய சொத்தில் நிவாரணம் வழங்குகிறார். வாழ்த்துக்கள் கமல் அவர்களுக்கு.


Raj Kamal
அக் 08, 2025 15:22

தான் உழைச்ச காசில் கொடுப்பதை பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை, ஆனால் இங்கு நக்கல் அடிக்கும் எத்தனை பேர் குறை சொல்வதை விட்டு வேறு என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா?


Indian
அக் 08, 2025 10:14

பா ஜ கட்சி ஏன் நிவாரணம் கொடுக்க வில்லை ??


vivek
அக் 08, 2025 12:32

கொடுத்தால் அதை ஆட்டை போடுவாய் .அதனால் தரவில்லை


Arul. K
அக் 08, 2025 09:35

மய்யம் என்பது சரியான தமிழ் வார்த்தையா?


Ajrjunan
அக் 08, 2025 09:09

நாகரீமாக பேசுவது எப்படி என்பதில் இந்தியாவிற்கு முன்னுதாரணம் இவர்தான். இவரின் அருமை பெருமை விஜயகாந்த எப்படி இறந்தபின் எல்லோரும் உணர்த்தார்களோ அதுபோல் அல்லாமல் ஓரு நல்ல மனிதநேய நடிகரை வாழும்போதே கொண்டாடுங்கள். இவரின் அரசியல் பண்பு புதியவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்.


vivek
அக் 08, 2025 09:28

எப்படி எப்படி. ஒண்ணு ஒண்ணா சொல்லேன்


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 08, 2025 10:19

இவரது அரசியல் பண்பு நாடறிந்தது உலகறிந்தது டார்ச் லைட் கொண்டு டிவி உடைத்தார் குடும்ப ஆட்சி என்று சொன்னார் கடைசியில் அந்த குடும்பத்திடமே ஐக்கியமாகி நல்ல பதவி வேறு அந்த குடும்பத்திடம் இருந்து பெற்று இந்திய வரலாற்றில் இடம் பிடித்து விட்டார். இந்த அரசியல் பண்பை புதியவர் ஜோசப் விஜய் கற்றுக் கொண்டு தான் யாரை எதிர்க்கிறோமோ அந்த திமுக கட்சியின் நிறுவனத் தலைவர் அண்ணாதுரையை ஒரு பக்கமும் அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் ஒரு பக்கமும் அணைத்துக்கொண்டு களமிறங்கி உள்ளார். கமல்ஹாசன் டிவியை உடைத்தார் ஆனால் ஜோசப் விஜய் எதிரி கட்சிகளின் நிறுவனத் தலைவர்களை அணைத்து கொண்டு வந்திருக்கிறார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் அரசியல் பண்பு நன்றாக கற்று கொண்டு வந்துள்ளார்.


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
அக் 08, 2025 09:00

நான் பார்த்த வடிகட்டிய...... மனிதர் இவர்.


Renga Rajan Viswanathan
அக் 08, 2025 08:39

கமலஹாசனை உங்களுக்கு எப்பொழுதுமே பிடிக்காது. ரஜினியைத் தான் தூக்கிவைத்து கொண்டாடுவீர்கள். கமலஹாசன் தமிழ் நாட்டில் பிறந்து விட்டார் அல்லவா


vivek
அக் 08, 2025 09:26

பிறந்த இடத்திற்கும் அறிவுக்கும் சம்பந்தம் இருக்கா


Sun
அக் 08, 2025 05:40

மனிதாபிமானமே இல்லாமல் எங்களுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை என கூறிக்கொண்டு ஒளிந்து திரியும் உடையவனை நம்ம ஆட்கள் விட்டு விடுவார்கள். மனிதாபிமானமாக நேரில் போய் உதவியவனைத்தான் கிண்டல் செய்வார்கள்.


vivek
அக் 08, 2025 06:54

ஆண்டவருக்கே சொம்பு தூக்கும் sun


Mani . V
அக் 08, 2025 05:36

போட்டோ ஷூட். உதவி செய்யவேண்டும் என்றால் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் கொடுத்து விட்டு வரலாமே விசரன் சார்?


Ajrjunan
அக் 08, 2025 08:59

அடுத்தவருக்கு தெரியாம யூனிவேர்சல் சிறந்த நடிகரை போக மீடியாவும் மக்களும் விடுவார்களா ?


சமீபத்திய செய்தி