உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தங்க விடுதி வேண்டும்... அதிக சம்பளம் வேண்டும்! உயர்கிறது வடமாநில தொழிலாளர்களின் குரல்

தங்க விடுதி வேண்டும்... அதிக சம்பளம் வேண்டும்! உயர்கிறது வடமாநில தொழிலாளர்களின் குரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை; கோவை மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கூட்டம், பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள கட்டடத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, உ.பி., மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் சிங் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்து, கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு 1100 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டிய தொழிலாளிக்கு, 700 ரூபாய்- மட்டும் வழங்கப்படுகிறது.1030 ரூபாய்- வழங்க வேண்டிய தொழிலாளிக்கு, 360 ரூபாய் - மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, சம வேலைக்கு சம சம்பளம் என்ற சட்டப்படி, வடமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.கோவை ரயில்வே ஸ்டேஷனில் தொழிலாளர் துறையும், காவல்துறையும் இணைந்து வடமாநில தொழிலாளர் பதிவு அலுவலகம் ஒன்றை அமைத்து, ரயில் மூலம் வந்து இறங்கும் தொழிலாளர்களை பதிவு செய்வதுடன், அங்கேயே அடையாள அட்டையும் வழங்கிட வேண்டும்.வெளிமாநில தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின்படி, பணி தரும் நிறுவனங்கள் குடியிருப்பு, உணவு, போக்குவரத்து செலவுகள் வழங்குவதில்லை.கோவை வரும் வடமாநிலதொழிலாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் தங்கும் விடுதிகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபக்குமார் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ethiraj
பிப் 22, 2025 08:57

Dormitory for gents and ladies can be provided Common kitchen,dining hall and toilets can also be provided Exclusive mini bus to carry them to work place will be an addition Govt ,industries and NGO Msust do this in all district HQ Donation from govt in North can extend helping hand Water supply ,electric supply ,taxes can be subsidised for such camps. These labour are backbone of TN


G Raghukumar
பிப் 19, 2025 12:02

நம்ம ஆளுங்க அவங்களும் வேலைக்கு வர மாட்டாங்க. செய்யறவங்களையும் குழப்பம் பண்ணுவாங்க. எப்படியும் நம்ம வேலை காரங்க முதல் நாள் வேலைக்கு வந்து மொத்தமா அட்வான்ஸ் வாங்கி வேலைக்கு வரமாட்டாங்க. 4 இடம் போய் இதே போல அட்வான்ஸ் வாங்கி வேலை முடிச்சி கொடுக்க மாட்டாங்க. இவங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த கூலி கொடுத்தாலும் வேலையை முடித்து கொடுப்பதால் கொடுக்கலாம். இது என் அனுபவம்.


Suresh Kumar. Kutty
பிப் 20, 2025 18:41

இவர்களைப் போன்ற காட்டுமிராண்டிகளின் இந்திய காட்டுமிராண்டிகளின் வருகையால் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழினத்தின் உழைப்பாளர்களுக்கு ஆகப்பெரிய துயரம் ஏற்பட்டுள்ளது


Sakthivel Muthusamy
பிப் 19, 2025 10:55

சங்கமே ஆரம்பிச்டானுக இனிமே நமக்கு சங்குதான்


sankar
பிப் 19, 2025 10:37

நியாயமான விஷயம்


ES
பிப் 18, 2025 16:30

100% true no workers in TN ready to work only wait for evening so they go and drink


Ram pollachi
பிப் 18, 2025 14:29

கிட்டத்தட்ட நம்ம ஆளுங்க வாங்கும் அதே கூலி தான் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. பதினெட்டு வயதுக்கு குறைவான கூலி தொழிலாளர்கள் பெரிய கூட்டமாக பொள்ளாச்சியில் வந்து இறங்கி உள்ளார்கள் ஓடி ஆடி விளையாடும் வயதில் மிச்சர் கம்பெனியில் அடுப்பில் வேலை. தொழிலாளர்நல துறை கவனிக்குமா?


ஜாதுசிங் யாதவ்
பிப் 18, 2025 10:13

நாஷ்டாவுக்கு பானி பூரி வேணும். சப்பாட்டுக்கு சப்பாத்தி வேணும். அதுக்கு மேலே மென்னு துப்ப பான்பீடா வேணும். எல்லோரும் இந்திலதான் பேசணும்.


Haja Kuthubdeen
பிப் 18, 2025 09:33

இந்த சம்பளம் கூட வடமாநிலங்களில் தொழிலாளர்களுக்கு கொடுப்பதில்லை என்பது இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது...


ஆரூர் ரங்
பிப் 18, 2025 09:20

குடிகார டாஸ்மாக் அடிமைகளை வேலைக்கு அழைப்பதை விட வெளிமாநில உழைப்பாளர்கள் தேவலாம். ஆனால் வந்தவர்கள் கம்மி ஆட்களை நம்பி போராட்டம் நடத்தினா உள்ள வேலைக்கும் வேட்டு. பழையபடி சொந்த ஊரில் கையேந்தி திண்டாட வேண்டியதுதான்.


Hari Haran
பிப் 18, 2025 07:11

முதலாளிகள் இப்போது தெரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களை விடுத்து வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது . போக போக தெரியும். இனிமேல் ஆவது விழித்துக் கொள்ளுங்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை