உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறதா இண்டிகோ? விமான சேவைகள் படிப்படியாக குறைப்பு

தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறதா இண்டிகோ? விமான சேவைகள் படிப்படியாக குறைப்பு

சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களில், 'இண்டிகோ' விமான சேவைகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன. நம் நாட்டின் விமான போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் இண்டிகோ நிறுவனம், மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை, கடந்த 1 முதல் நிறுத்தியது. இதனால், விமான நிலையங்களில் பயணியர் தவித்தனர். 'புக்கிங்' செய்தவர்களுக்கு விமானங்கள் கிடைக்காமல் திண்டாடினர். இதற்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு பேச்சு நடத்தி, விதிகளை திரும்ப பெற்றது. இருப்பினும், பெரும்பாலான விமான நிலையங்களில், இந்நிறுவன விமானங்கள் ரத்து செய்யப்படுவது இன்றும் தொடர்கிறது. இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிப்பதாக இண்டிகோ தெரிவித்தாலும், நிலைமையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களில் இருந்து பிற நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், இண்டிகோ நிறுவனம் தினசரி விமானங்களை இயக்கி வந்தது. தற்போது, எந்த காரணமும் இல்லாமல், விமான எண்ணிக்கையை, இந்நிறுவனம் குறைத்துள்ளது. இந்நிறுவனம், தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களை முழுதும் நிறுத்த போகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக, 'ஏவியேஷன்' வல்லுனர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறியதாவது: மாநிலங்களுக்கு இடையேயான விமான போக்குவரத்தில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இங்குள்ள அனைத்து நகரங்களில் இருந்தும், சென்னைக்கு தினசரி சேவை உள்ளது. இதை வழங்கி வந்த இண்டிகோ நிறுவனம், உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகளை குறைத்திருப்பது மர்மமாக இருக்கிறது. அதே நேரத்தில், மற்ற விமான நிறுவனங்களும் சேவை வழங்க முன்வரவில்லை; இதற்கு என்ன காரணம் என்பதும் புரியாத புதிராக உள்ளது. தமிழத்தின் இரண்டாம் நிலை நகரங்களில், விமான சேவை நன்றாக வளர்ந்து வருகிறது. இந்த மார்க்கத்தில் பெரும்பாலும், இண்டிகோ மட்டுமே விமானங்களை இயக்குகிறது. இப்போது இந்த திடீர் குறைப்பு, விமான டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்க வழிவகுக்கும். இதற்கு மாற்று வழியை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Palanisamy Narayanasamy
டிச 21, 2025 20:49

விமான வசதிக்கான எண்ணிக்கையை குறைத்து, தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க எண்ணினால் ஏமாந்தே போவார்கள்.... மாநில அரசு ஒரு விமான நிறுவனத்தை துவங்கினாலும் ஆச்சர்யமில்லை.... பார்க்கலாம்..


K r Madheshwaran
டிச 19, 2025 05:03

இதுல்ல திராவிட மாடல் ஏதும் தலையிட்டு பங்கு கேட்டாங்களோ என்னவோ


Suresh R
டிச 18, 2025 22:25

தி short haul flights are reduced to give long haul flights. Happens to all flights all over India. No way connected Tamils


VANAMOORTHY N
டிச 17, 2025 20:30

As per new norms on utilisation of pilot service and considering safety flying, every pilot has to avail 45 hours rest after a redeem of 2000 kms. Hence acute shortage of pilots in Indigo air service


சேகர்
டிச 17, 2025 18:28

விமானிகள் சிறிய விமானம் ஓட்டினாலும் , பெரிய விமானம் ஓட்டினாலும் அதே சம்பளம் தான் .. எனவே பெரிய விமானமாக மாற்றி இருக்கிறார்கள் ... அவ்வளவு தான். demand அதிகமானால் போட்டி போட்டு கொண்டு விடுவார்கள்... .. பெங்களுருவில் வளர்ச்சி ... அதிகப்படியான IT நிறுவன வளர்ச்சியால் வந்தது. அதை மற்ற நகரங்களோடு ஒப்பிட முடியாது. தமிழ் நாடு always conservative and balanced state... எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் ஆட்கள் இங்கே....


சேகர்
டிச 17, 2025 18:21

MP க்கள் தனியார் கம்பெனி சீட்டு அதிகம் பண்றது தான் வேலையா ?.. லாபம் அதிகம் இருந்தால், பயணிகள் வரத்து அதிகம் இருந்தால் போட்டி போட்டு கொண்டு விடுவார்கள்... உனக்கு என்ன பெருமைக்கு விமானம் விட வேண்டுமா ?


என்னத்த சொல்ல
டிச 17, 2025 18:12

சொந்தமாக airline இல்லாத ஒரே நாடு இந்தியா தான்.


karthik
டிச 17, 2025 18:46

உலகில் வளர்ந்த நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் அரசாங்கத்திற்கு என்று எதுவுமே இல்லை தெரியுமா? அரசாங்கத்தின் வேலை தொழில் செய்வது இல்லை.. மற்றவர்கள் செய்யும் தொழிலை கண்கணிப்பது மட்டுமே அரசு செய்யவேண்டும்


rama adhavan
டிச 17, 2025 22:18

வேண்டுமானால் தமிழக அரசை ஒரு அரசு விமான கம்பெனி ஆரம்பித்து நிறைய விமானங்கள் வாங்கி தனியாருக்குப் போட்டியாக ஓட்ட செய்யுங்களேன். ஓசூர், ராமேஸ்வரம் உட்பட எல்லா தமிழக இடங்களிலும் விமான நிலையம் தேவை என்று கூறுகிறார்களே.


Balaji
டிச 18, 2025 00:37

அண்ணாத்த எத்தநீ நாட்ட பாத்திருக்கீய இந்த கருத்த சொல்ல? அமெரிக்காவும் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளும் எதுவுமே அரசு நடத்தும் ஏர்லயின் வைத்திருக்கவில்லை..


S S
டிச 17, 2025 15:37

பகுத்தறிவை பயன் படுத்தினால் நலம். எவ்வாறு தமிழக நலன்களுக்கு எதிராக செயல்கள் செய்யப்படுகின்றன? ? புரியவில்லை


S S
டிச 17, 2025 15:37

பகுத்தறிவை பயன் படுத்தினால் நலம். எவ்வாறு தமிழக நலன்களுக்கு எதிராக செயல்கள் செய்யப்படுகின்றன? ? புரியவில்லை


KR india
டிச 17, 2025 12:57

பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக, விமானிகளின் உடல் தகுதி, அவர்கள் மேற்கொண்ட ஓய்வுநேரம், விமானத்தின் என்ஜீன் நிலை, கடைசியாக மாற்றப்பட்ட உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களை வைத்து, விமானி மற்றும் விமானம் பிரயாணத்திற்கு ஏற்றது என்று சான்றிதழ் கொடுக்கும் வரை, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், பல்வேறு புது விதிகளை புதுப்பித்து, உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அவற்றில், விமானிகள் கட்டாயமாக ஓய்வு எடுக்க வேண்டிய நேரமும் அடக்கம். ஆனால், விமானிகள் பற்றாக்குறை காரணமாக, இந்த விதியை, சில விமான நிறுவனங்கள் ஏற்க மறுப்பதாக தெரிகிறது. தகுதியான, கூடுதல், விமானிகளை, தேர்வு செய்து, பணியமர்த்த , விமான நிறுவனங்களுக்கு, கூடுதல் அவகாசம் கொடுக்கலாமே தவிர, ஒட்டு மொத்தமாக புதிய விதிகளை, மத்திய அரசு திரும்ப பெற்றது என்பது ஏற்கத்தக்கதல்ல. பயணிகளின் பாதுகாப்பிலும், விமானப் பராமரிப்பிலும் மட்டுமல்லாது, விமானிகளுக்கு வழங்கப்படும் ஓய்வு நேரத்திலும் சமரசம் கூடாது ஏர்-இந்தியா விபத்தில், இரண்டு என்ஜினும், மேலெழும்ப முடியாமல், விபத்து நேர்ந்ததற்கு, என்ஜினுக்கு கட்டளை பிறப்பிக்கும் சாப்ட்வேர் வேலை செய்யாமல் போனதா என்றும் அதன் பின்னணியில், வெளிநாட்டு சதி எதுவும் உண்டா ? இல்லையா ? என்ன காரணம் என்பதை, தீர ஆய்வு செய்து, உறுதிப்படுத்த, மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் கடமைப் பட்டுள்ளது.