உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்டாலினிடம் அனுமதி பெறும் நிலையில் ராகுல் இருக்கிறாரா: காங்கிரசார் காட்டம்

ஸ்டாலினிடம் அனுமதி பெறும் நிலையில் ராகுல் இருக்கிறாரா: காங்கிரசார் காட்டம்

முதல்வர் ஸ்டாலினிடம் கூறிவிட்டு தான், த.வெ.க., தலைவர் விஜயிடம் ராகுல் பேசியதாக, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு, அக்கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கரூர் துயர சம்பவத்தையொட்டி, விஜயை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதை, தமிழக காங்கிரசில் ஒரு கோஷ்டியினர் வரவேற்றனர். ஆனால், தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி கூறுகையில், ' ராகுல் தேசிய தலைவர். விஜயுடன் தனிப்பட்ட முறையில் நட்பு வைத்துள்ளார். அதன் அடிப்படையில், பேசினார். இதனால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உடையாது' என்றார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், 'கரூர் சம்பவம் நடந்தபோது, அங்கு இருந்தவர் விஜய். எனவே, அவரிடமும் எப்படி நடந்தது என ராகுல் கேட்டிருக்கலாம்' என்றார். இந்நிலையில், 'முதல்வர் ஸ்டாலினிடம் கூறிவிட்டு தான், விஜயிடம் ராகுல் பேசினார்' என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார். அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து விஜய் ஆதரவு கோஷ்டி காங்., நிர்வாகிகள் சமூக வலைதளங்களில், வெளியிட்ட பதிவுகள்: அனுமதி வாங்கி பேசும் நிலையில் ராகுல் இல்லை. அவரின் செல்வாக்கு தெரியாமல், காங்., தலைவர்கள் பேசக்கூடாது ஸ்டாலின் அனுமதி தந்து தான், விஜயிடம் ராகுல் பேச வேண்டிய அவசியமில்லை. கடந்த 2009 முதல் ராகுல் - விஜய் நட்பு தொடருகிறது தி.மு.க.,வின் ஊதுகுழலாக செல்வப்பெருந்தகை மாறிவிட்டாரா; ராகுலுக்கு தனித்து முடிவெடுக்க அதிகாரம் இல்லையா? இவ்வாறு கூறியுள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balasubramanian
அக் 07, 2025 13:23

ஸ்டாலின் அனுமதி இல்லாமல் காங்கிரஸ் அல்லது ராகுல் தொகுதிகளை அறிவிக்க முடியாது! அது போலத்தான் இதுவும்! கூட்டணி தலைவர் அனுமதி இல்லாமல் மாற்றுக் கட்சியிடம் பேச முடியாது!


Subburamu K
அக் 07, 2025 10:58

Ragul the great international leader, he can be the President or PM to anybody other countries easily Ragul is the friend runner for Nobel prize and the competitor for Trump


ஆரூர் ரங்
அக் 07, 2025 10:55

சரி ராகுல் செல்வப் பெருந்தலைவருடன் பேச ஸ்டாலினிடம் அனுமதி வாங்கி அவரது அனுமதியுடன் புஸ்சியிடம் ஒப்புதல் பெற்று விஜய்யிடம் விசாரித்தார். அதனை கமல் மொழி பெயர்த்து விளக்கமளித்தார். போதுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை