உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு

வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடந்த 2011 -- 15 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியின் போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.அதன் பேரில், செந்தில் பாலாஜி மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் சமரசமாக போக விரும்புவதாக கூறியதை ஏற்று வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தர்மராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும், 'சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பத்தி 45 மற்றும் 46ல் தனக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் விசாரணை நீதிமன்ற நடைமுறைகளை பாதிக்கும் வகையில் உள்ளது.மேலும், அரசியல்சாசனப் பிரிவு 21ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாகவும் அவற்றை நீக்கி உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது -டில்லி சிறப்பு நிருபர்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V RAMASWAMY
ஜூலை 11, 2025 14:54

காஷ்மீர், உக்ரைன் ரஷிய இஸ்ரேல் பால்ஸ்தீன பிரச்சினைகள் கூட முடிந்து தீர்ந்துவிடும் ஆனால் செந்தில் பாலாஜி அவர்களின் லஞ்ச வழக்கு அவர் பேரன் பேத்தி காலம் வரை நீட்டப்படும் போல் தெரிகிறது. அடேயப்பா என்னே திகிடுதத்தம்.


Sudha
ஜூலை 11, 2025 11:17

ஆக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவுரை கூறுகிறார்கள். இதை விட கேவலமாக நீதியை கையாள முடியாது. தெரியாம கேட்கிறேன், சமரசம் என்றாலே தவறு நடந்ததாக தான் அர்த்தம். அதற்கு ஏதாவது ஒரு தண்டனை கொடுத்து கேஸை முடிப்பீர்களா? யாருடைய நலனுக்காக ஒரு உயர் பிறவியின் வழக்கை இழுத்தடிப்பீர்கள்? செலவுகள் யாருடையவை?


Mani . V
ஜூலை 11, 2025 11:13

மாமியார் பெயரில் 300 கோடியில் கட்டிய குடிசை கிரகப்பிரவேஷம் முடிந்ததா? எது 200 கோடி செலவு செய்து விழா நடத்திதான் செய்யணுமா?


Mani . V
ஜூலை 11, 2025 11:11

நீ எதுக்கும் கலங்காதே ஐந்து கட்சி அமாவாசை. குபேரன் உன்பக்கம் இருக்கிறான். வெற்றி உனக்குத்தான்.


theruvasagan
ஜூலை 11, 2025 10:24

திருட்டுத்தனம் கூட அடிப்படை உரிமைகளின் கீழே வருமா.


Subburamu Krishnasamy
ஜூலை 11, 2025 09:32

No problem, Supreme Court will give relief for all the misadventures of the political netas.Many universities in the state is not VCs, Registrats, Deans Directors and other heads, because of legal issues in the high and Supreme Courts. Learned judges have failed to give the judgements as per the law of the land by their inordinate delays. Delayed justice is denied justice too. In many cases they have heard the cases in midnights, but not importance to education and students interests.


Ramona
ஜூலை 11, 2025 06:42

சு கோ வுக்கு போனால், தள்ளுபடி உறுதி, மீண்டும் வேற கட்சியில் இணைந்து தீவிர மக்கள் பணி தான் இவரது உயிர் மூச்சு, மீண்டும் அந்த கட்சியில் கலால் துறை, பதிவு துறை, போக்குவரத்து துறை, மின்துறை போன்ற தங்கமான துறைகள் இவருக்காக காத்திருக்கிறது.


Palanisamy Sekar
ஜூலை 11, 2025 03:44

அப்போ சுப்ரீம் கோர்ட்டில் டீலிங் ஓவெர்ன்னு அர்த்தமா என்று பொதுமக்களிடையே சந்தேகம் வருமே. ஏற்கனவே உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு நீதிமன்த்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு குறைந்த தண்டனையை கேட்டுவாங்கிய முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை சுப்ரீம் கோர்ட் இதுநாள் வரை தேதி குறிப்பிடாமல் தண்டனை பற்றி மௌனமாக இருக்கும் சூழலில் இன்னோர் அமைச்சரின் வேண்டுகோளை நிச்சயம் கவனத்தில் கொண்டு தடை விதிக்கலாம். டெல்லியில் 100 கோடி ரூபாய் அளவுக்கு நிரம்பியிருந்த சாக்குப்பை எறிந்த நிலையில் அந்த நீதிபதியின் பதவியை கூட பறிக்க முடியவில்லை என்பது கூடுதல் நினைவுக்கு