உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அர்த்த மண்டபமும் அர்த்தமில்லாத அவதுாறுகளும்

அர்த்த மண்டபமும் அர்த்தமில்லாத அவதுாறுகளும்

இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு போனாலும், போனார், தமிழகத்தில் பலருக்கும் பொறுக்கவில்லை. இதுதான் நேரம் என்று, நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி மேலேயும், கீழேயும் குதிக்கின்றனர். இதன் பின்னால் ஹிந்து மதத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலும், ஆன்மிகவாதிகள் மீதான வன்மமும் தான் மறைந்து கிடக்கிறது.ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலுக்கு சென்ற இளையராஜாவுக்கு, மற்ற முக்கியஸ்தர்களுக்கு செய்யப்படுவது போன்ற வரவேற்பும், மரியாதையும் செய்யப்பட்டன. கோவில் பட்டர்களும், அவருக்கு தர வேண்டிய மரியாதையில் இம்மி அளவும் குறை வைக்கவில்லை. ஆனால், அர்த்த மண்டபத்துடன் அவர் நிறுத்தப்பட்டதை சாக்காக வைத்து, தமிழகத்தில் திராவிடம் பேசுவோரின், ஆன்மிகம் மீதான வெறுப்பு அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டது.அர்த்த மண்டபத்திற்கு பின், கர்ப்ப கிரகத்தில் பூஜை செய்வோரை தவிர யாரும் செல்ல முடியாது என்று தெளிவாக திராவிட ஆட்சியின் கீழ் உள்ள அறநிலையத் துறை கூட விளக்கம் சொல்லிவிட்டது. அதன் பிறகும், இளையராஜாவை குறி வைக்கும் பாவனையில் ஹிந்து மதம் குறி வைக்கப்படுகிறது.

வன்மம்

இளையராஜாவுக்கு, மத்தியில் ஆளும் மோடி அரசு ராஜ்யசபா எம்.பி., சீட் தந்தபோதே, இந்த வன்மம் துவங்கி விட்டது. இளையராஜா ஒரு அரசியல்வாதி அல்ல; அவர் எப்போதும் அரசியல் பேசியதில்லை. அவர் எம்.பி.,யாக்கப்பட்டதே அவரது இசை ஞானத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் மட்டுமே. ஆனால், இளையராஜா என்னவோ பா.ஜ., கட்சியின் பெரிய நிர்வாகி போலவும், அதனாலேயே அவர் எம்.பி.,யாக்கப்பட்டது போலவும் அவர் ஒரு 'சங்கி' எனவும், ஒரு பெரிய கோஷ்டி, அவதுாறுகளை கட்டவிழ்த்துவிட்டது.அப்போது இருந்தே தொடர்ந்து கருத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளையராஜா, இப்போது புதிதாக ஆண்டாள் கோவில் விவகாரம் வாயிலாக மீண்டும் இலக்கு வைக்கப்படுகிறார். உண்மையில் இந்த தாக்குதல் இளையராஜா மீதானது மட்டும் அல்ல; ஒட்டுமொத்த ஹிந்து மதத்தின் மீதானது. ஹிந்து மதத்தை பக்தி சிரத்தையுடன் பின்பற்றுவோர் எல்லாமே சமூகநீதிக்கு எதிரானவர்கள் என்ற பொய்யான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.சமூக வலைதளங்களில் இந்த சமூகவிரோதிகள் வெளியிடும் கருத்துக்கள், முழுக்க முழுக்க அவதுாறுகளாக தான் இருக்கின்றன. தனிமனித விமர்சனங்களும், ஜாதிய வன்மங்களும் கொப்பளிக்கின்றன. சமூகநீதி பேசும் இவர்கள் மட்டும் சமூகத்திற்கு எதிராகவே இருக்கின்றனர். அன்பும், இரக்கமும் இவர்களிடம் துளி அளவும் இல்லை.பகவான் ஸ்ரீசத்யசாய் மனித குலம் பற்றி என்ன போதிக்கிறார் எனில், ''கடவுளின் குரலை மவுனத்தின் ஆழத்தில் மட்டுமே கேட்க முடியும். மவுனம் என்பது ஆன்மிகம் தேடுபவரின் பேச்சு.நீங்கள் முழுமையான அமைதியில் மட்டுமே தெய்வீக பேரின்பத்தை அனுபவிக்க முடியும்.''நாக்கு சில பெரிய தவறுகளுக்கு பொறுப்பாகும்; பொய்யை பேசுதல், அவதுாறு செய்தல், மற்றவர்களின் குறைகளை கண்டறிதல், தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் அமைதி ஏற்பட வேண்டுமானால், இவை தவிர்க்கப்பட வேண்டும்,'' என அவர் போதிக்கிறார். ஆனால், நாம் என்ன செய்கிறோம். ஆன்மிகம் பேசுவோரை வெறுக்கிறோம். அன்பை போதிப்போர் மீது சேற்றை வாரி இறைக்கிறோம்.இசை மூலம் தெய்வீகத்தை கண்டடைய வழி செய்த இசையமைப்பாளரை கண்மூடித்தனமாக வசை பாடுகிறோம். ஜாதிக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக்கொண்டே ஜாதி வெறியர்களாக வலம் வருகிறோம்.

வேடிக்கை

மனிதநேயர்கள் என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு உள்ளுக்குள் கோர முகத்தை கொண்டிருக்கிறோம். வெறுப்பை விதைக்கிறோம், சமூக ஒற்றுமையை சிதைக்கிறோம்.இளையராஜா விவகாரத்தை வைத்து சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும், 'டிவி' விவாதங்களிலும் ஆன்மிகத்திற்கு விரோதமாக கருத்து சொல்லும் கந்தசாமிகளில் பலர், ஹிந்துக்களே அல்ல என்பதுதான் இன்னும் வேடிக்கை. இந்த பகல் வேஷம் என்று மாறும்...? உண்மை மனித நேயம் என்று தழைக்கும்? அடுத்து வரும் தலைமுறைக்காவது அன்பையும், இரக்கத்தையும் கற்றுத் தாருங்கள். வன்மத்திற்கு விடை கொடுங்கள்.

- எம்.எஸ். தண்டபாணி -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Sampath Kumar
டிச 18, 2024 16:26

சொரணை கேட்ட ராஜா


RAAJ68
டிச 18, 2024 12:36

அதெல்லாம் இருக்கட்டும் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் நிலை என்ன எந்த சிறையில் இருக்கிறார் அதேபோல் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் எந்த சிறையில் இருக்கிறார். இதைப் பற்றி தகவலே இல்லையே மூச்சு விடக்கூடாது என்ற உத்தரவோ?


ஆரூர் ரங்
டிச 18, 2024 12:12

ரயில் டிக்கெட் வாங்கிவிட்டால் எஞ்சினுக்குள்ளே செல்லும் உரிமை கிடைக்குமா? அது ஓட்டுநர் மட்டுமே பயணிக்கும் இடம். அது போல ஆலயத்திலும் அவரவர்களுக்கென தனியிடம் உண்டு. அடியார்க்கு அடிய எளியவராக வாழும் இளையராஜா அவ‌ர்கள் தனக்கான இடம் அறிந்தவர். அறநிலையத்துறை மேற்பார்வையில் நடத்தப்படும் ஆலயத்தில் தவறு நடந்தால் விடியா அரசுதான் பொறுப்பு.


கிஜன்
டிச 18, 2024 11:36

நல்ல நாளும் அதுவுமா எந்த கோவிலுக்குள்ளேயாவது நுழையமுடிகிறதா .... எள்ளு போட இடமில்லாத அளவு கூட்டம் ... பக்தி மான்கள் எல்லாம் பக்தி புலிகளாக மாறிவிட்டன .... இதற்கு உறுதுணையாக இருக்கும் திராவிட மாடல் அரசு 1000 கும்பாபிஷேகங்கள் நடத்தி ஆன்மீக அன்பர்களின் மனங்களை குளிர்வித்திருக்கிறது ..... நவகிரக தரிசனத்திற்கு குளிர்சாதன மற்றும் சாதா 2 சிறப்பு பேரூந்துகள் .... காசியாத்திரைக்கு நிதி உதவி ... மீனாக்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் .... திருவண்ணாமலை சிறப்பு ஏற்பாடுகள் .... பக்தர்களுக்கு என்ன குறை சொல்லுங்க ....நிவர்த்தி செய்கிறோம் என ஓடோடி வரும் அரசை பற்றி ஒரு கட்டுரை காணோம் ....


பேசும் தமிழன்
டிச 18, 2024 12:50

உண்டியல் பணத்தை எல்லாம் ஆட்டையை போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று கூறுகிறார்களே.. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ???


ஆரூர் ரங்
டிச 18, 2024 14:02

ஆலயத்தில் வழிபட முயன்ற தாழ்த்தப்பட்ட இளைஞனை திமுக நிர்வாகி ஆபாச வார்த்தைகளால் திட்டி விரட்டியது இதே ஊடகத்தில் சென்ற ஆண்டு வெளிவந்தது. அது திராவிட மாடல் சமூக நீதிதான். ஸ்ரீஇளையராஜா அவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் வரவேற்றது முதல் வழியனுப்பி வைத்ததுவரை அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனராம். அவர்கள் மீது நடவடிக்கையுண்டா?.


kulandai kannan
டிச 18, 2024 09:28

BKP, RSS, இந்து முன்னணி போன்றவையின் விடா முயற்சியால் ஏற்பட்டுவரும் இந்து மக்களின் ஒற்றுமைக்கு, மடாதிபதிகளின் முதிர்ச்சியற்ற செயல்கள் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. ஜீயரும் இளையராஜாவோடு நின்றிருக்கலாமே. வெறும் வாயை மெல்வோருக்கு அவல் கொடுத்த கதையாகி விட்டது.


அவினேஷ்
டிச 18, 2024 08:44

கேரளா கோவில்களூக்குள் நுழையப் பாருங்க.


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
டிச 18, 2024 06:48

இத்தகைய அவதூறுகளை பரப்புவர்களை அடையாளம் கண்டு வேரோடு அகற்ற வேண்டும்.சம்பந்தப்பட்ட நபரே விளக்கம் அளித்த பின்பும் இதை மென்மேலும் ஊதி பெரிதாக்குவதென்பது தேவையற்றது. மத த்வேஷத்தை வளர்க்காமல் இது போன்ற தேவையற்ற பேச்சுகளில் கவனம் செலுத்தாமல் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேவையான ஆக்கமான முயற்சியில் இறங்கினால் அனைவரும் பயன் பெறுவர்


முக்கிய வீடியோ