உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அம்மா குடிநீர் போச்சு; அப்பா குடிநீர் வருது!

அம்மா குடிநீர் போச்சு; அப்பா குடிநீர் வருது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில், பயணியர் வசதிக்காக மீண்டும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட உள்ளன; இது, அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். இதற்கு 'அப்பா' குடிநீர் என பெயர் வைக்க, ஆலோசனை நடந்து வருகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

நல்ல வரவேற்பு

தமிழக போக்குவரத்து துறை சார்பில், அம்மா குடிநீர் திட்டம், 2013ல் துவக்கப்பட்டது. இதற்காக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், 2.47 ஏக்கரில் , 10.5 கோடி ரூபாயில், குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. பஸ் நிலையங்களில், 10 ரூபாய்க்கு, 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 'அம்மா குடிநீர்' என்ற பெயரில் விற்கப்பட்டது. இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தினசரி, 2 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டது.குடிநீர் உற்பத்தி நிலையத்தை முறையாக பராமரிக்காததாலும், புதிய இயந்திரங்கள் வாங்காததாலும், திட்டம் முடங்கியது. இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழகங்களில் மீண்டும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, டெண்டர் வெளியிடப்பட உள்ளது. முதல்கட்டமாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில், இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது. பின்னர், தேவை அடிப்படையில் மற்ற அரசு போக்குவரத்து கழகங்களிலும், இத்திட்டத்தை விரிவுபடுத்த, தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 300 கி.மீ., துாரத்திற்கு மேல் செல்லும் தடத்தில், 1,080க்கும் அதிகமான 'டீலக்ஸ், ஏசி' விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புகார் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். அவர்கள் பயணத்தின்போது, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என, புகார் தெரிவித்துள்ளனர்.எனவே, முதல் கட்டமாக அரசு விரைவு பஸ்களில் மட்டும், கண்டக்டர்கள் உதவியுடன் குடிநீர் பாட்டில்களை விற்க முடிவு செய்யப் பட்டுள்ளது. ஒரு லிட்டர் குடிநீரை, 10 ரூபாய்க்கு விற்கவும், அதற்கு 'அப்பா' குடிநீர் என பெயர் சூட்டவும், ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழக அரசு பெயரை முடிவு செய்யும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக திட்டத்தை துவக்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Ananthakrishnan N
செப் 29, 2025 13:02

சுட்ட மண்பாண்டங்களும் சுற்றுச்சூழலுக்கு கேடானவையே


Jayamkondan
செப் 26, 2025 04:57

வாங்கடா வாங்க... 4.5 வருஷம் கழித்து.... ஞானோதயம் வருதா. பொங்கலுக்கு மட்டும் குடுப்பீங்க.. அப்புறம்..... மக்கள் உங்களுக்கு தண்ணி காட்டுவாங்க..


Ramesh Sargam
செப் 25, 2025 02:05

யாருடைய அப்பா?


raghavan
செப் 24, 2025 23:49

தேர்தல் வருது..அப்பா குடிநீர் என்ன இன்பா இளநீர்னு ஓசியில கூட கொடுப்பாங்க.


Vasan
செப் 24, 2025 21:57

நல்ல, வரவேற்க வேண்டிய திட்டம். இந்த குடிநீர் ஐ மண்பாண்டங்களில் கொடுத்தால் நன்றாக இருக்கும். பிளாஸ்டிக் பாட்டில் சுற்று புற சூழலுக்கு கேடு விளைவிக்கும். வேலும் ஒரு லிட்டர் குடிநீர் 5 ரூபாய்க்குள் விற்றால் நன்றாக இருக்கும்.


Padmasridharan
செப் 24, 2025 21:38

அப்பா உணவகம் கூட தயாராகி வருகிறதில்லையா சாமி. . மக்களிடையே அம்மா பெயர் வாங்கின மாதிரி வாங்கணும்னு நினைக்கிறாங்க ஆனா மக்கள் குடியும் லஞ்சமுமாய் எவ்வாறு இருக்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியும்.


Venugopal S
செப் 24, 2025 20:19

எந்த பேர் வைத்தால் என்ன? நல்ல குடிநீர் கொடுத்தால் சரிதான்!


sankaranarayanan
செப் 24, 2025 17:55

அப்பா குடிநீர் என பெயர் வைக்க, ஆலோசனை நடந்து வருகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏற்கனவே அப்பா குடிநீர்தான் கடைகளில் அமோகமாக விற்பனை ஆகிக்கொண்டே இருக்கின்றனவே தள்ளாடி தள்ளாடி தெருக்களில் பலர் கிஇழே கிடக்கின்றனரே அது போதாதா இப்போது புதியது என்ன ஓ ஹோ அது புள்ளை குடிநீர் என்றே பெயர் வைக்கலாமே


தமிழன்
செப் 24, 2025 16:10

பேரன் குடி நீர் அல்லது கொள்ளு பேரன் குடி நீர்னு வைங்க அப்ப தான் அடுத்த தலை முறை வரைக்கும் தொடரும்


Vasan
செப் 24, 2025 15:41

வரவேற்கிறோம். வாழ்க தமிழக முதல்வர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை