வாசகர்கள் கருத்துகள் ( 26 )
கோத்ரா சம்பவம் இது வரை பாடம் கற்பிக்க வில்லை இதெல்லாம் ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை
விழித்துக் கொள்ள வேண்டியது ரயில்வேத்துறை மட்டும் அல்ல. குடும்பக்கட்டுப்பாடு துறையும் தான்.
ஒரே சிரிப்பா இருக்கு
விழிக்குமா? எம்.பி.ஏ அமைச்சர் தலைமையில் முழிக்கும்.
கடந்த வாரம் சபரிமலை சென்றுவிட்டு பம்பையிலிருந்து நிலக்கல் செல்வதற்காக பேருந்தில் ஏற முடியவில்லை. சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை நிலக்கல்லிலேயே நிறுத்திவிட்டு பேருந்தில் செல்ல வேண்டும். ஜனத்திரள். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பேருந்துகள் வந்தவுடன் மக்கள் முண்டியடித்து ஏற முயற்சிக்கின்றனர். கேரள அரசுக்கு பக்தர்களின் பணம் மட்டும் வேண்டும், ஆனால் சன்னிதானத்திலிருந்து பம்பை வரை கழிப்பிடங்களோ அல்லது அடிப்படை வசதிகளோ பேருந்தில் சிரமமின்றி ஏறுவதற்குள்ள சௌகரியங்களோ எதுவுமில்லை. கேரள அரசின் கேவலமான நிர்வாகம்.
வி ஐ பி தரிசனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்தில் ,சிறிதும் அடித்தட்டு பக்தர்களுக்கு கொடுப்பதில்லை.
மும்மொழி படிக்கிற மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.
கோவிட்டில் பாதிப்பையும் தாண்டி மிச்சம், சொச்சமே இத்தனை உயிரிழப்புக்களை ஏற்படுத்த முடிந்தால் ????
இது போன்ற விபத்து நடப்பது இது முதல் முறை அல்ல. 2014-இல் கும்பமேளா நடந்தபோது, இதே போன்ற விபத்து பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் நடந்தது என்பதை நினைவுகூறத் தோன்றுகிறது. அப்போது 42 பக்தா்கள் உயிரிழந்தனா் 45 போ் படுகாயம் அடைந்தனா். அதிலிருந்து ரயில்வே நிா்வாகம் எதுவும் கற்கவில்லை என்பதைத்தான் இப்போதைய விபத்து உணா்த்துகிறது ..... 14, 15 நடை மேடைகளுக்கு இடையே கட்டுக்கடங்காத அளவில் நெரிசல் காணப்பட்டதற்கு முக்கியமான காரணம், மிக அதிக அளவில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஒரு மணி நேரத்துக்கு 1,500 பயணச் சீட்டுகள் வீதம் ரயில்வே நிா்வாகம் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் வழங்கி வந்திருக்கிறது. பயணச் சீட்டுக்கு ஏற்ப போதிய ரயில்கள் இருக்கின்றனவா, இடம் இருக்கின்றனவா என்பது குறித்த சிந்தனை ரயில்வே நிர்வாகத்துக்கு இல்லாமல் போனது விபத்து ஏற்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் ..... பண்டிகைக் காலங்களிலும் கும்பமேளா போன்ற திருவிழாக் காலங்களிலும் ரயில்வே நிா்வாகம் நெகிழ்வுக் கட்டண முறையை பிளெக்ஸி கட்டண முறையை கையாளுவது தவறு மட்டுமல்ல, கண்டனத் திற்குரியதும்கூட. முன்பதிவு செய்வதற்கு வசதி இல்லாதவா்களும், மிக அதிகமான கட்டணம் செலுத்த முடியாதவா்களும் சாதாரண வகுப்பில் பயணிக்க முற்படுகிறாா்கள். மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விழையும் பக்தா்கள் வேறு வழியில்லாமல் கிடைத்த ரயிலைப் பிடித்து பிரயாக்ராஜ் செல்ல முனைப்புக் காட்டுவதை புரிந்துகொள்ள முடிகிறது. அது ஏன் ரயில்வே நிா்வாகத்தின் கவனத்தை ஈா்க்கவில்லை ?? .... விபத்து சில முக்கியமான குறைபாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அதிக அளவில் எல்லா ரயில்களிலும் முன்பதிவு இல்லாமல் பயணிப்பதற்கான இடங்கள் அல்லது பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த நடைமேடைகள் பெரிதாக்கப்பட வேண்டும். கூடுதல் நடைமேடைகள் எல்லா ரயில் நிலையங்களிலும் அமைக்கப்பட வேண்டும் .... ரயில் நிா்வாகம் தேவையில்லாமல் தனியாக ரயில்வே காவல் படை வைத்திருப்பதைக் கைவிட்டு, விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ளது போல உள்துறை அமைச்சகத்தின் கீழான காவல் படையினரிடம் பாதுகாப்பை ஒப்படைக்க வேண்டும். புது தில்லி ரயில் நிலைய விபத்துக்கு மிக முக்கியமான காரணங்கள் ரயில்வே நிா்வாகத்தின் முறையான திட்டமிடலின்மையும், ரயில்வே பாதுகாப்பு படையினா் போதிய அளவில் இல்லாமல் இருந்து கூட்டத்தை முறையாகக் கட்டுப்படுத்தாமையும்தான் ....
ரயில்வே பாதுகாப்பு படை RAILWAY PROTECTION FORCE RPF பயணிகள் பாதுகாப்பில் ஈடுபடுவதில்லை ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பவர்கள் ரயில்வே போலீஸ் என்பது மாநில போலீஸ் படையிலிருந்து ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக டெபுடேஷனில் நியமிக்கப் படுவோர். டில்லியை பொறுத்தவரை டில்லி போலீஸ் மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளதுதான். அவர்கள் RIOT CONTROL இல் ஜாம்பவான்கள் தண்ணீரை பீச்சியடித்து / கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தலில் விற்பன்னர்கள் டில்லி ஆச்சி அமைப்பதில் அமீத் பிசி
இது எல்லாமே செவிடன் காதில ஊதிய சங்காகவே இருக்கும்.
மெரினாவுல நடந்தது மக்கள் தவறு..... டெல்லியில் நடந்தது மோடி தவறு...... இந்த உபி களுக்கு கூச்சமே இருக்காதா.....