உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / த.வெ.க., நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்: விஜய்க்கு பயந்து ஆளுங்கட்சி ரகசிய உத்தரவு

த.வெ.க., நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்: விஜய்க்கு பயந்து ஆளுங்கட்சி ரகசிய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசையும், தி.மு.க., நிர்வாகிகளையும் விமர்சித்து பேசும் த.வெ.க., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, போலீசாருக்கு அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ck9t3ztr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவர்கள், கரூர் உயிர் பலி சம்பவ விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், பழையபடி வெளியே வர துவங்கி உள்ளனர். கடந்த 5ல், மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டனர். இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் பேசிய த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, கரூர் சம்பவம் தொடர்பாக அரசை கடுமையாக விமர்சித்தார். 'கருர் உயிர் பலி சம்பவத்திற்கு, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மகேஷ், கரூர் மாவட்ட தி.மு.க., செயலர் செந்தில் பாலாஜி ஆகியோர் தான் காரணம் என வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்; செந்தில் பாலாஜியை கரூர் ரவுடி பையன் எனவும் ஒருமையில் விமர்சித்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நலம் சரியில்லை; எழுதிக் கொடுத்தால், அதை மட்டும் படிப்பார் எனவும் கூறினார். இதையடுத்து, ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதியப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மீதும், ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் மீதும், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பொதுக் குழுவில் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்று அறிவித்த பின், அ.தி.மு.க.,வோடு த.வெ.க.,வுக்கு கூட்டணி அமைய வாய்ப் பில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தேவையில்லாமல் விஜயை டென்ஷனாக்கி, அவரை அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துவிடக் கூடாது என தி.மு.க., தலைமை நினைக்கிறது. அதனாலேயே, அக்கட்சியினர் மீது நடவடிக்கை எதுவும் இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ஜெய்ஹிந்த்புரம்
நவ 10, 2025 20:29

அதிமுக, பாஜக கட்சிகள் பதறுவதை பார்த்தால் பவர் ஸ்டார், “கட்சி ஆரம்பித்து இருக்கேன்” என்று சொன்னால் கூட உடனே ஓடிப் போய் கூட்டணி பேசணும்ன்னு வீட்டு வாசலில் துண்டை போட்டு படுத்து கொள்வார்கள் போல.


எஸ் எஸ்
நவ 10, 2025 17:49

காமராஜர், இந்திரா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளை எதிர்த்து அரசியல் செய்த திமுகவுக்கு விஜயை பார்த்து பம்மும் நிலை வந்து விட்டதா?


Suresh R
நவ 10, 2025 13:29

சட்டம் ஒழுங்கு சீர்கெடும் ஏனென்றால் அவர்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகியின் மனநிலை


ஜெய்ஹிந்த்புரம்
நவ 10, 2025 12:08

தவெக தேர்தல் அறிக்கையில் “சுரண்டல் லாட்டரி” கொண்டு வரப்படும் என்று சொல்லுவார்கள் என்று அந்த வட்டாரங்கள் சொல்லவில்லையா?


duruvasar
நவ 10, 2025 14:41

அறிவு திருவிழாவில் கலந்துகொண்டது அழகாக தெரிகிறது.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 10, 2025 12:04

ஐயோ பாவம்


Mr Krish Tamilnadu
நவ 10, 2025 11:53

யூடியூப் போல், சமூக வலை தளங்களில் முக்கியமாக எக்ஸ் தளத்தில் கருத்துகள் பதிவிடுவது வரம்பு மீறுகின்றன. அனைத்து கட்சி இளைஞர்களும் தலைவர்களை மரியாதை குறைவாக கூறுவது, கெட்ட வார்த்தை பயன்படுத்துவது, ஊடகங்கள் மட்டுமே சட்ட ஆலோசனை உடன் வெளியீடும் கேலி சித்திரம் போன்று சொந்தமாக வெளியீடுவது, ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகங்களையே தாங்கள் கட்சிக்கு எதிரான கருத்துக்களை வெளியீட்டால் தரக்குறைவாக விமர்சிப்பது என வெறுப்பு அரசியலை கக்குகிறார்கள். இந்த இளைஞர்களின் மேதாவி தனங்களை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், ஒன்று தங்கள் கட்சியின் பெருமைகளை கூறலாம் அல்லது குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் மரியாதையுடன் பதில் அளிக்கலாம் என்பதை புரிய வைத்து அவர்களை நல்வழி படுத்துவது அந்த அந்த கட்சி கலைவர்களின் கடமை. கட்சி தலைமைகள் செய்வார்களா?.இல்லை எனில் சைபர் கிரைம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Barakat Ali
நவ 10, 2025 10:01

இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவர்கள், கரூர் உயிர் பலி சம்பவ விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், பழையபடி வெளியே வர துவங்கி உள்ளனர். சிந்தியுங்கள் மக்கா ..... இந்த டிவிகே யா உங்களை ஆளும் தகுதி படைத்த கட்சி ????


முருகன்
நவ 10, 2025 09:56

இது பரவாயில்லை இங்கே இரண்டு கட்சிகள் தாங்கள் பலத்தை மறந்து விஜய்யை நம்பி கூட்டனிக்கு தவம் இருக்கின்றன


ஜெய்ஹிந்த்புரம்
நவ 10, 2025 20:25

தங்களின் பலத்தை தெரிந்து கொண்டு, இல்லை என்று தெரிந்து கொண்டதால் தான் தூக்குறதுக்கு புதுசா ஆள் தேடுறாங்க.


duruvasar
நவ 10, 2025 09:20

திமுகவின் அரசியல் அறிவு வியபளளிக்கிறது


Ajrjunan
நவ 10, 2025 09:12

தி மு கா விஜயை என்றுமே எதிரியாக பார்க்கவில்லை. எதிரிக்கும் ஓரு தகுதி வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார். தற்குறிகல்தான் பி ஜெ பிஇன் பின் நின்றுகொண்டு கூலிக்கு மாரடிக்கிறார்கள். விஜய்க்கு அமித்ஷா கொடுத்த அசைன்மென்ட் இல் அவர் நடிக்கிறார் அவ்ளவுதாண். 2026 தேர்தல் முடிந்ததும் மீண்டும் நடிக்க பொய் விடுவார். தி மு கா கூட்டணிக்கு இந்தமுறை 210 தொகுதிகள் உறுதி. அ தி மு க 19, பி ஜெ பி 1, தற்குறி 0, மாங்காய் 0, சீமான் 4.


duruvasar
நவ 10, 2025 16:21

கெட்டிக்கார ஜோய்ஸியர். அறிவி திருவிழாவில் கலந்துகொண்ட அலுப்பு தீர்ந்ததா


புதிய வீடியோ