வாசகர்கள் கருத்துகள் ( 31 )
நான் கடந்த 25 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் சிம் கார்டு பயன்படுத்து வருகிறேன் கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக இதே பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தனியார் தொலைத்தொடர்பு சேவைகள் ஏராளமாக வந்தும் கூட நான் நமது தேசத்தின் நிறுவனம் என்ற எண்ணத்தில் இன்னமும் அதை பயன்படுத்தி வருகிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் 4ஜி சேவை காரைக்காலுக்கு வழங்கப்பட்டது. அதுவும் திருப்திகரமாக இல்லை. அது இஷ்டப்பட்ட நேரத்தில் வருகிறது நாம் இஷ்டப்படும் நேரத்தில் ஓடி விடுகிறது கிடைப்பதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் காரைக்காலில் கடற்கரை ஓரத்தில் bsnl அலுவலக வாசலில் கூட நெட்வொர்க் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது...
Nowadays the efficiency with working class is decreasing because of work load. If higher payments given they show some interest. Competition is very high with companies. So that AI is introduced in all companies.
பதினொரு வருடங்களாக ஆட்சி செய்து கொண்டு இருக்கும் இப்போதைய அரசு பிஸ்னல் 4ஜி லைசென்ஸ் வழங்க ஏன் இத்தனை காலம் தாமதம் செய்தது . மேலும் பெரும்பாலான ஜியோ ப்ரீபெய்ட் மாத கட்டணங்கள் 28 அல்லது 23 நாட்கள் மாறும் ஏன் 30 நாட்கள் இல்லை.
பிஎஸ்என்எல் மட்டுமில்லை.ஏர்டெல் ஜியோ போன்ற தனியார் நிறுவன சேவைகளிலும் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை. 10 -15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல இப்போது தொலை தொடர்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி இல்லை. ஆகையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும புது வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் இவர்கள் பெரிதாக முனைப்பு காட்டுவது இல்லை. உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த முயல்வதில்லை. முக்கியமாக பல ஏரியாக்களில் இணையசேவை தொடர்பு வேகம் குறைவாகவோ அல்லது முற்றிலும் வராமலோ இருக்கிறது. அதிலும் பிஎஸ்என்எல் சேவை 2ஜி லெவலுக்கு மேல் கிடைப்பதில்லை. சேவை தரமில்லை. ஆனால் கட்டணத்தை மாத்திரம் ஏற்றி விடுவார்கள். மீண்டும் ஒரு நவீனமான தொலை தொடர்பு தொழில்நுட்ப புரட்சி வந்தால்தான் சரியாகும் போல உள்ளது. அதே சமயத்தில் கேபிள் மூலமாக வீடுகளுக்கு மற்றும் அலுவலகங்களுக்கு வரும் ப்ராட் பேண்ட் சேவைகளின் தரம் படிப்படியாக உயர்ந்து தற்போது திருப்திகரமாக உள்ளது.
பிஸ்னல் நிறுவனத்தை முதல்ல வித்துடணும். தனக்கு மிஞ்சி தானதர்மம்னு அரசு எல்லாத்துறையிலும் இருக்க வேண்டும். ஆனால் நேர்மாறக உள்ளது. தனியாரால் முடியும் என்பது என்ன வானத்திலிருந்து வந்தவர்களால் நடத்தப்படுகிறதா. பொறுப்பற்ற நிர்வாகம்.
Even in pondicherry the same issue arises.
தெண்ட சம்பளம் கொடுத்து தெண்ட பயல்களை வேலைக்கு வைத்தால் ,தெண்டமான சேவை தான் கிடைக்கும் நம்ம பணம் தான் வேஸ்ட்
அருப்புக்கோட்டை நகரில் இதே தொல்லை தான் நீடிக்கிறது. நானும் தனியார் சிம் பயன்படுத்தி வந்தேன்.பிஎஸ்என்எல் நன்றாக இருக்கும் என்று நம்பி ரீசார்ஜ் செய்து தினமும் அழுது புலம்ப வேண்டியுள்ளது. டவரும் சிக்னலும் கிடைக்கவில்லை.நம்பி ஏமாந்துள்ளேன்.
நமது இந்திய நிறுவனம் இப்படி இருக்கே நினைத்தால் அசிங்கம் 4Gசிம் கூவி கூவி வித்துட்டாங்க. ஒரு அழைப்பு ஒழுங்கா பேச முடியல
நமது இந்திய அரசு நிறுவனம் இப்படியா? என நினைத்தால் அசிங்கமாக இருக்கிரது இதுலவேர 4கிசிம் கூவி கூவி வித்துட்டாங்க கேவலம்