வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நம் பக்கத்து மாநிலங்களை பார்த்தாவது நமக்கு புத்தி வரவேண்டும். கேரளம், கர்நாடகம் இரண்டு மாநிலங்களையும் போய் பாருங்கள் அறநிலையத் துறை அமைச்சர் அவர்களே. நம்பிக்கை இல்லாதவர் அமைச்சரானாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் நிர்வாகம் என்பதை ஒழுக்கமாக பார்த்திருந்தால் கூட 40000 கோவில்களுக்கு மேல் இருக்கும் நம் தமிழகத்தில் இப்படி ஒரு அவல நிலைக்கு கோவில்கள் தள்ளப்பட்டிருக்காது. ஆயிரம் வருடம் பழமையான கோவில்கள் பராமரிப்பின்றி பாழ்பட்டு கிடப்பது, விலை மதிப்பற்ற சொத்துகள், நிவந்தங்கள், செப்புத் திருமேனிகள், என ஒவ்வொரு கோவிலுக்கும் தேவையான வருவாய்க்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் கட்டிய காலத்திலேயே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். நாம் எதையும் புதிதாக சிந்திக்கத் தேவையில்லை, அவர்கள் செய்ததை முறைப்படி பின்பற்றினாலே போது, கோவில்கள் எல்லாம் நலமாக இருக்கும். கோவில் என்பது காசு பார்க்கும் இடமில்லை, அது நம் பண்பாடு, கலாச்சாரம், தொன்மை, ஒழுக்கம் இதற்கும் மேலாக நம் சமூகத்தின் ஒழுகக்ததிற்கான ஒரு அளவுகோள். கட்டுக்கடங்காத கூட்டம் வந்தாலும் மன்னர்கள் காலத்தில் எந்த கோவிலிரும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இல்லை, கடவுள் சிலைகளை பூட்டி வைக்க இரும்பு பரள்கள் கிரில், ஆனாலும் திருவிழாக்களும், தினமும் நித்திய வழிபாடு, வார வழிபாடு, மாத வழிபாடு, ஆண்டு வழிபாடு, உற்சவங்கள், திருக்கட்டளை உபயம், முதலானவை எந்த இடையூறும் இன்றி நடந்தேறின. ஆனால், இன்று அவ்வாறு இல்லை என்றால் பிரச்சனை நம் மக்களிடம் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். உங்கள் ஒரு கோவில் இருந்தால், அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று கடந்து போவது மிகப்பெரிய அயோக்கயத் தனம். அந்த கோவில் பராமரிப்பிலும், நிர்வாகத்திலும், பாதுகாப்பிலும், உள்ளுரில் உள்ள அனைவருக்கும் சம்பந்தம் உண்டு. ஏதாவது பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காண்பதற்கும், ஆபத்து என்றால் கூடி நின்று உதவுதற்கும், ஒவ்வொரு மனிதரும் கடமைப் பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். கோவில் என்பது தனிப்பட்டு ஒரு விஷயம் அல்ல, அது சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவருடனும் சம்பந்தப்பட்டது என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். கோவில்களின் சீரழிவு என்பது சமூகத்தின் அழிவுக்கு அறிகுறி என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இல்லாவிடில் காலம் கைமீறி போய்விடும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோவில்களிலும் சிறப்பு தரிசனமுறை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். எல்லாவித மக்களும், அதாவது ஏழை, பரம ஏழை, பணக்காரன், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்று எல்லோரும் ஒரே பொதுவரிசையில் வந்து சாமி கும்பிடவேனெடும் என்று அரசு ஆணை இடவேண்டும். முதல்வரே வந்தாலும் பொதுவரிசையில்தான் வந்து சாமி கும்பிடவேண்டும்.
வயதானவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக விரைவு தரிசனம் இருக்க வேண்டும்.
உங்களுடைய கருத்து மக்களின் எதிர்பார்ப்பாகும். அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
விஐபி தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும். மற்ற நேரங்களில் வரிசை முறை விரைவாக செல்லும் வகையில் தரிசன முறை அமைக்கப்பட வேண்டும். சந்நிதியில் விபூதி பிரசாதம் தாமதத்துக்கு இடமின்றி வழங்கப்பட வேண்டும். பல இடங்களில் தாமதத்தை உருவாக்கி, வசூல் வேட்டை பலமாக நடைபெறுவது கண்கூடு. இதற்கு அதிகாரிகள் பலர் உடந்தையாக உள்ளதும் உண்மை. சந்நிதிக்கு எதிரில் இடையூறாக உள்ள உண்டியல்களை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும். அர்ச்சகர்கள் தட்டுக்களில் காணிக்கை பெறுவது தடை செய்யப்பட வேண்டும். அர்ச்சகர்களுக்கு அவர்களது வாழ்க்கைக்கு ஏற்ப, நியாயமான நல்ல ஊதியம் வழங்குவதோடு, சந்நிதியில் சுழற்சி முறையில் அர்ச்சகர்கள் பணிபுரிவதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் பக்தர்களின் வரிசை சுறுசுறுப்பாக நகரும். அறநிலையத்துறை இதனை கவனத்தில் கொள்ளுமா?
5000 கொடுத்து கர்பக்கிரகம் அருகில் அர்த்த மண்டபம் செல்லலாம். ஆனால் ஆண்டவனை கண்களால் காணமுடியாது. இறைவன் நம்மைக் காண்பதுதான் தரிசனம். அது நமது பக்தியைப் பொருத்தது. இதைப் புரிந்து கொண்டால் சரி
உண்டியலில் பணம் தங்கம் போடுவது நிறுத்தவேண்டும் அதற்கு பதிலாக ஹிந்து மத பாதுகாப்பு நிதி தொடங்க வேண்டும். தன்னார்வ தொண்டர்களை மதிக்கவேண்டும் விரைவு தரிசனம் வேண்டும். மத தலைவர்கள் ஒன்று கூடவேண்டும்
நல்ல யோசனை. அதோடு மட்டும் இல்லாமல் அந்த நிதி இந்து மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
விசேஷ நாட்களில் குழந்தை குட்டிகளுடன் கோவிலுக்கு செல்லாமல், சாதா நாட்களில் செல்லும் பழக்கம் வரவேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா
கடவுள் இல்லை என்ற கொள்கையுடன் உள்ள நபர்களால் அல்லது வேறு சமூகங்களை சேர்ந்த நபர்களால் கோவில்கள் நிர்வகிக்க படுகிறது. இவர்கள் எப்படி, கோவில்களை ஒழுங்காக நிர்வாகம் செய்வார்கள்.
பொதுமக்கள் மட்டுமே இறைவனுக்கு பயப்படுகிறார்கள். கோவில் ஊழியர்களை பார்த்து இறைவன் தான் பயப்படுகிறார். ரயில்வே புக்கிங் போல பணம் கட்டிவிட்டு தரிசனம் செய்யலாம். குறிப்பாக திருவண்ணாமலை மலையை சுற்றி தனியார் ஆக்கிரமித்துள்ளனர் அவர்களை அகரற்றவேண்டும் அங்கெ திருப்பதி போல பக்தர்கள் தங்கவைக்கப்பட்டு ஒரு தானியங்கி நடைமேடை வழியாக கோவில் கருவறை வரை செல்லவேண்டும் . கோவிலை சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தூய்மை படுத்தவேண்டும், இறைச்சி மற்றும் மதுக்கடைகளை மூடவேண்டும்.
குருவாயூர் போல் சிறப்பு கட்டண தொகை ஒரு நபருக்கு 1000 அடுத்து கட்டணமில்லா பொது தரிசனம்.
15 செகண்ட் தரிசிக்க 1000 ரூபாய் கொடுத்தேன். எங்க ஊரு கிருஷ்னன் கோவிலில் காசு கொடுக்காமல் மனசார தரி சித்தேன். மனம் நிம்மதி அடைந்தது.