உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 160 தொகுதிகளில் போட்டியிட திட்டம்: கருத்துக்கணிப்பால் அ.தி.மு.க., உற்சாகம்

160 தொகுதிகளில் போட்டியிட திட்டம்: கருத்துக்கணிப்பால் அ.தி.மு.க., உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்ட சபை தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் வகையில், குறைந்தபட்சம் 160 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என, அ.தி.மு.க., தரப்பில் முடிவெடுத்துள்ளனர். மீதமிருக்கும் 74 தொகுதி களை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கும் எண்ணத்தில் அ.தி.மு.க., தலைமை இருப்பதாகக் கூறப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m5jnyrz0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நம்பிக்கை

அடுத்த சட்டசபை தேர்தல், இன்னும் பத்து மாதங்களில் நடக்க உள்ளது. அதையடுத்து, தேர்தலுக்கான முன்னோட்டப் பணிகளை அ.தி.மு.க., துவங்கி விட்டது.வெற்றிக்கு அடிப்படையான பூத் கமிட்டிகளை வலுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை அக்கட்சி மேற்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் சென்னையில், இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பூத் பொறுப்பாளர்கள், 'வாட்ஸாப் குரூப்' ஆரம்பித்து, அதன் வழியாக உறுப்பினர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும்; பூத்திற்கு ஒருவர், தலா 100 வாக்காளர்களை பின்தொடர வேண்டும்.முதன் முறையாக ஓட்டளிக்கும் இளைஞர்களை இணைத்து, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல அறிவுரைகள், அப்போது வழங்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்துள்ளதால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி உறுதி என்றும் கட்சியினருக்கு பழனிசாமி, கூட்டத்தில் நம்பிக்கை வெளிப்படுத்தினார்.

மெஜாரிட்டி

நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மொத்தமுள்ள 234 தொகுதிகளில், குறைந்தபட்சம் 160 தொகுதிகளிலாவது அ.தி.மு.க., போட்டியிட்டால் மட்டுமே, தனி மெஜாரிட்டி பெற முடியும் என அ.தி.மு.க., தலைமை நம்புகிறது. அதனால், 160 தொகுதி களில் அ.தி.மு.க.,வை போட்டியிட வைப்பதோடு, மீதமுள்ள தொகுதிகளை பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுப்பது என, அ.தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்தபின், அ.தி.மு.க., தலைமையால் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில், கூட்டணி 88 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த 2 சதவீதத்திற்கும் கீழ் ஓட்டுகள் பெற்ற 34 தொகுதிகளிலும், 2 முதல் 4 சதவீதத்திற்குள் ஓட்டுகள் பெற்ற 15 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், மொத்தம் 137 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதால், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, அடுத்து அ.தி.மு.க., ஆட்சிதான் என்ற தெம்பில் உள்ளார். தன்னை சந்திக்கும் கட்சியின் தலைவர்களிடம் இதை வலியுறுத்திச் சொல்கிறார். இதனால், கட்சியினர் உற்சாகம் அடைந்து, இப்போதே தேர்தல் பணிகளை பல இடங்களில் துவங்கி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார் -நமது நிருபர்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Nagarajan
மே 01, 2025 15:36

நோ சான்ஸ்


Priyan
ஏப் 30, 2025 10:51

160 தொகுதிகள் என்ன 234 தொகுதிகளிலும் கூட அதிமுக போட்டியிடட்டும், ஆனால் பாஜக இவர்கள் அணியில் இருக்கிறார்கள் என்றாலே தோல்வி நிச்சயம். பாஜக தொடர்ந்து தமிழ் நாட்டிற்கு எதிராக செயல் படுகிறது. அதை துணிச்சலோடு மத்திய தலைமையிடம் சொல்ல கூட இங்கு உறுதியான மாநில தலைவர்கள் இல்லை. மும்மொழி திட்டம் தமிழ் நாட்டு மக்களால் புறக்கணிக்க பட்ட திட்டம், அதை இங்கு அமல் படுத்தியே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் பாஜக மத்திய தலைமை இருக்கிறது கூட்டணியில் உள்ள அதிமுக கூட இதை எதிர்த்து கொண்டு தான் இருக்கிறது. தொகுதி மறு சீரமைப்பின் மூலம் தமிழ் நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என்கிற உண்மையை சொல்லாமல் நாடகம் ஆடுகிறார்கள். அதிமுகவை பொறுத்த வரை பாமக, தேமுதிக, தவக என்கிற பலமான கூட்டணி அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் போது நிறைய புலம்பல்கள் அதிமுக தரப்பில் இருந்து கேக்கலாம்


பா மாதவன்
ஏப் 29, 2025 17:26

"பூவோடு தாமரை என்கிற சேர்ந்த நாரும் மணக்கும்" என்று பழமொழி உண்டு.


Nallavan
ஏப் 29, 2025 13:25

நீங்கள் போட்டியிடும் தொகுதிகளை முதலில் சொல்ல முடியுமா? ஒவொரு தொகுதியிலும் எவ்வளவு ஓட்டுகள் வாங்குவீர்கள் சொல்லுங்களேன்


Udayasuryan
ஏப் 29, 2025 12:51

டாஸ்மாக்கில் எக்ஸ்ட்ரா 10 ரூ வாங்காமல் ஒழுங்காக செயல்பட்டாலே அதிமுக வெற்றி நிச்சயம்


தத்வமசி
ஏப் 27, 2025 09:09

இந்த கருத்துக் கணிப்பு எடப்பாடிக்காக கிடைத்தது அல்ல. திமுகவின் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு. பிஜேபி கூட்டணி. பிஜேபி கூட்டணி இல்லாமல் விஜய் கூட்டணியாக இருந்தால் இந்த அளவுக்கு ஓட்டு கிடைக்காது. பொதுவாக அரசியல் சார்ந்த மக்கள் ஓட்டு போட்டு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது கிடையாது. எந்த கட்சியும் சாராத மக்கள் சுமார் பதினைந்து சதவிகிதம் உள்ளனர். இவர்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ அவர்கள் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை பெறுவார்கள். அல்லது இந்த பதினைந்து சதவிகித மக்கள் எல்லார் மேலும் வெறுத்து போய் ஓட்டே போடாமல் இருந்தால் அப்போது கட்சி சார்ந்த ஓட்டுக்களின் பலத்தினாலும், பணபலம், ஆள் பலம், ஆள் மாறாட்டம், இலவச அறிவிப்பு என்று புறக்கடை வழியாக உள்ளே வருவார்கள். இது தான் தமிழக அரசியலில் உள்ள தேர்தலின் வெற்றி முறை.


முருகன்
ஏப் 26, 2025 22:33

இந்த தேர்தலில் கிடைக்கும் அடி இவருக்கு அரசியல் முடிவுரை எழுதப்படும்


thehindu
ஏப் 26, 2025 21:43

பாஜவை நிராகரித்துவிட்டதால் அதிமுக வென்றுவிடும் என்றுஅர்த்தமில்லை. பஜாவும் அதிமுகவும் மாட் தேர்தலில் போட்டியிடும்போதுதான் இதெல்லாம் நடக்கும் . பஜாவுடன் கூட்டணி சேர்ந்ததால் இனியும் 25 ஆண்டுகளுக்கு சட்டசபை பக்கம் வரமுடியாது


thehindu
ஏப் 26, 2025 21:34

தாங்களே தம்பட்டம் அடித்துக்கொள்வது முதல் முறையல்ல


M Ramachandran
ஏப் 26, 2025 21:06

ஆதாய பழனி அண்ட் கம்பெனி 240 தொகூதிகளில் போட்டி. அண்டர் டிலிங் பிரகாரம் தீ மு காவிற்கு தாரை வார்த்து கொடுக்க படும். பிரிதி உபகாரமாக கொடநாடு கேசு மறக்கப்படும். வடக்கனை ஏமாற்றி குதிரை ஏறலாம் என்ற எண்ணம். மேடையில் மேசை கீழ் ஊர்ந்து என்ற காட்சியை தீ முக்க மறு ஒளி பரப்பு செய்ததை மறந்தாச்சி போல.


சமீபத்திய செய்தி