உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ம.க., சட்டசபை குழு தலைவர் மணி நீக்கம்?

பா.ம.க., சட்டசபை குழு தலைவர் மணி நீக்கம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பா.ம.க., -- எம்.எல்.ஏ., அருள் நீக்கப்பட்டதை, சட்டசபை ஆவணங்களில் பதிவு செய்து உத்தரவிட வேண்டும்' என, சட்டசபை செயலர் சீனிவாசனிடம் அன்புமணி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, பா.ம.க., தலைவர் அன்புமணி எழுதிய கடிதத்தை, அக்கட்சி செய்தி தொடர்பாளர் பாலு சட்டசபை செயலரிடம் நேற்று வழங்கினார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், என் முன்னிலையில் நடந்தது. அதில், பா.ம.க., சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து, ஜி.கே.மணி விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, என் தலைமையில் நடந்த பா.ம.க., அரசியல் தலைமை குழு கூட்டத்தில், பா.ம.க., சட்டசபை குழு புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுவரை, பா.ம.க., கொறடாவாக செயல்பட்ட எம்.எல்.ஏ., அருள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கடந்த ஜூலை 2ம் தேதி நீக்கப்பட்டார். இது குறித்து, ஜூலை 3ம் தேதி, சபாநாயகருக்கு கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை, சட்டசபை ஆவணங்களில் பதிவு செய்து உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பா.ம.க., - எம்.எல்.ஏ., என்ற பெயரில், அருள் பொதுவெளியில் செயல்படுவதால் வீண் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, தாமதிக்காமல், அருள் நீக்கப்பட்டதை சட்டசபை ஆவணங்களில் பதிவு செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வழங்க கோரி மனு

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு, தலைமை செயலர் முருகானந்தத்திடம், எம்.எல்.ஏ., அருள் அளித்த மனு: பா.ம.க.,வை துவங்கிய டாக்டர் ராமதாஸ், கடந்த 46 ஆண்டுகளாக கட்சியை நடத்தி வருகிறார்; கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் அவர் செயல்படுகிறார். பா.ம.க.,வில் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், ராமதாஸ் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார். அவருடைய பாதுகாப்பு கருதி, முழு நேரமும் ராமதாஸ் வசித்து வரும் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கும், அவர் நிகழ்ச்சிக்கு செல்லும் இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாசை சந்திக்க வருவோரை பரிசோதிக்க, நுழைவாயிலில், 'மெட்டல் டிடெக்டர்' அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
செப் 26, 2025 15:26

அன்புமணி கோஷ்டி தான் பாமக என்று தேர்தல் ஆணையம் ஒத்துக்கொண்டுள்ளது. எனவே ராம்தாஸ் வேண்டுமென்றால் பணம் கட்டி பாதுகாப்பு செய்து கொள்ளட்டும். ஓசியில் பாதுகாப்புதரக்கூடாது.


pmsamy
செப் 26, 2025 07:46

பாமக வா அப்படின்னா என்னன்னு முக்காவாசி தமிழர்களுக்கு தெரியாது. போய் வேற வேலை இருந்தா பாருங்கடா


Moorthy
செப் 26, 2025 07:36

அன்புமணி ,, ஜி கே மணி , ராமதாஸ் மனதுக்குள் மகனுக்கே ஆதரவு , ஆனாலும் .? பிளட் இஸ் திக்கர் தன் வாட்டர்


Raj
செப் 26, 2025 05:57

தந்தை மகன் நடத்தும் சூரசம்ஹாரத்தில் கட்சி கதவே மூடப்போகிறது, தொண்டர்கள் எல்லாம் 2026 க்கு முன்பே நல்ல கட்சியில் சேர்ந்து விடுங்கள். தந்தை சொல்லகிறார் மகன் கட்சி தலைவரே இல்லையென்று. காமெடியான கட்சி தான்.


சமீபத்திய செய்தி