உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நிறைவேற்றப்படாத வாக்குறுதி; அரசு மீது அதிருப்தியில் போலீசார்

நிறைவேற்றப்படாத வாக்குறுதி; அரசு மீது அதிருப்தியில் போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இரண்டாம் நிலை காவலர்கள் பதவி உயர்வு காலத்தை குறைப்பதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்த நிலையில், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும், வாக்குறுதி நிறைவேற்றப்படாதது, போலீசாரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e2awmvpk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக காவல் துறையில், டி.ஜி.பி., முதல் காவலர்கள் வரை, ஒரு லட்சத்து, 24,939 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் இரண்டாம் நிலை, முதல் நிலை மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்கள், 96,147 உள்ளன.

பதவி உயர்வு

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், முதல் நிலை காவலர்களாக, பதவி உயர்வு கிடைக்கும். அதுவும், பணிக்கு சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகளில், ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்திருக்க வேண்டும். கூடுதலாக விடுப்பு எடுத்தால் பதவி உயர்வுதள்ளிப்போகும். முதல் நிலை காவலர்,15 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், தலைமைக் காவலராகவும், தலைமைக் காவலர்கள், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், சிறப்பு எஸ்.ஐ., ஆகவும் பதவி உயர்வு வழங்கப்படும்.பெரும்பாலான காவலர்கள், எஸ்.ஐ., நிலையை கூட அடைய முடியாமல், ஓய்வு பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே, தங்கள் பதவி உயர்வுகான கால அளவை குறைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2021ல் சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'இரண்டாம் நிலை காவலர்களாக, ஏழு ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், முதல் நிலை காவலராகவும், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், தலைமைக் காவலராகவும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு, சிறப்பு எஸ்.ஐ.,யாகவும் பதவி உயர்வு அளிக்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டது.

ஏமாற்றம்

ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டுகளைக் கடந்தும், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது, போலீசாரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'காவல் துறையில், இரண்டாம் நிலை துவங்கி, சிறப்பு எஸ்.ஐ., வரை, 80 சதவீதம் பேர் பணிபுரிகிறோம். 'எங்களின் ஓட்டுகளை பெறும் விதமாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பதவி உயர்வுக்கான கால அளவு குறைக்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பி குடும்பத்தாருடன் ஓட்டுப் போட்டோம். தற்போது, ஏமாற்றத்துடன் அரசு அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Kumar
டிச 20, 2024 21:13

If I do not read Dinamalar, I feel.unhappy. Daily I read Dinamalar with immense Pleasure


Ramesh Kumar
டிச 20, 2024 21:12

I have been reading Dinamalar since my childhood. Dinamalar projects the 100% correct Information


Ramesh Kumar
டிச 20, 2024 21:09

Promotion should not given time bound. Promotion should be given on the basis of meritorious service rendered by a Police cons


Kanns
டிச 19, 2024 09:12

No Problems. Reduce Pay of All Govt Staffs from President to Group D to Only Appropriate Minm Wages Only for Worked Days Only 104 Leave/weekky offs As None of them Really Work Fulltime for People/ Nation


hari
டிச 19, 2024 14:25

also need to cut pension for .........


Padmasridharan
டிச 19, 2024 06:17

காவல் துறைக்கே தெரிந்து இருக்கிறது.. "ஓட்டுகளை பெறும் விதமாக, வாக்குறுதி அளிக்கப்பட்டது என்று..." அப்புறம் இதை நம்பி குடும்பத்தாருடன் ஓட்டு எதற்கு போட்டாங்க. இதுவும் லஞ்சம் வாங்கி வேலை செய்வது மாதிரி தானே தலைவர்களே ?


சமீபத்திய செய்தி