உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  பொத்தப்பி சோழர் கல்வெட்டு; கடப்பாவில் கண்டெடுப்பு

 பொத்தப்பி சோழர் கல்வெட்டு; கடப்பாவில் கண்டெடுப்பு

சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுஉள்ளன. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள பொத்தப்பி என்ற ஊரை தலைநகராகக் கொண்டு, 6 - 7ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள், ரே நாட்டு சோழர்கள் எனும் பொத்தப்பி சோழர்கள். இவர்கள் பெல்லாரி, கோனிடேனா, நன்னுாரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்துள்ளனர்; தெலுங்கு சோழர்கள் எனவும் அழைக்கப்பட்டனர் . அவர்கள், தங்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு கோவில்களை கட்டியும், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களை சீரமைத்தும், அவற்றை பராமரிக்க நில தானங்களை வழங்கியும் உள்ளனர். அதற்கு ஆதாரமாக, தற்போது புஷ்பகிரி நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பென்னா நதிக்கரையில் உள்ள பழமையான கோவில்களில், மிகவும் புகழ்பெற்றது நாத நாகேஸ்வரர் கோவில். இந்த கோவிலில், தற்போது மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கோவிலில், 16 தமிழ் கல்வெட்டுகள் இருந்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து, முனிரத்தினம் கூறியதாவது: தற்போது நாங்கள் கல்வெட்டுகளை படியெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவை, 12 - 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டு என்பதை அறிந்துள்ளோம். மற்ற தகவல்கள், அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுத்து படித்த பின்தான் அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Deivendransolanadan
நவ 20, 2025 07:33

கரிகால் சோழன் காலத்தில் கல்லணை கட்டியவன் இவன் ஆந்திர பகுதிகளை வென்று தன் உறவினர் வேளிர் களை குடியேற்றினான் அவர்கள்தான் மொத்தப் பி ரேணாட்டு சோழர்கள் தமிழர்கள்


muthumko muthumko
நவ 19, 2025 22:08

தமிழில் கல்வெட்டு இருந்தும் எதற்காக தமிழினத்தின் பெருமையைத் திருட பார்க்கிறீர்கள்


பாரதி
நவ 19, 2025 19:31

சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஶ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும், இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசன் விமலாதித்த மணந்ததாகவும்.இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாக பல்வேறு கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது தெளிவாகிறது


muthumko muthumko
நவ 19, 2025 22:02

ஆதாரமற்ற தகவல்கள் எதற்காக இந்த பொய் தகவல்


பாரதி
நவ 19, 2025 19:27

விஜயநகர பேரரசின் மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் கல்வெட்டுகள் தமிழில் வெட்டப்பட்டுள்ளது..


Raj
நவ 19, 2025 13:17

தமிழ் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் யார் ஆக்கிரமிப்பு யார் வந்தேறி


Raj
நவ 19, 2025 13:14

தமிழ் கல்வெட்டு கண்டுபிடிச்ச பின்பும் கேள்வி கேக்குற ....


Rathna
நவ 18, 2025 18:44

ராஜ ராஜ சோழனின் மகள் தெலுங்கு நாட்டு இளவரசனை மணந்தாள். குலோத்துங்க சோழர் காலத்தில் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாமல் போக மகள் வயிற்று வழியில் வந்த இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி தஞ்சாவூரில் நடந்தது. அதேபோல தமிழ் வழியில் வந்த சோழர்கள் தெலுங்கு பேசும் பல்லவர்களுடன் மணம் முடிக்கும் வழக்கத்தை கொண்டு இருந்தனர்.


அப்பாவி
நவ 18, 2025 07:27

தமிழக சோழர்களும் வந்தேறிகள்தானா?


chandran
நவ 18, 2025 11:13

அப்பாவி, உலகத்தில் 90% மக்கள் எதாவது ஒரு வழியில் வந்தேறிகள் தான். நமது முன்னோர்களும் கூட வந்தேறிகளாக இருக்க கூடும்.


crap
நவ 18, 2025 17:46

தமிழகத்தில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட சோழ பேரரசில் பிற்காலத்தில் அந்த பகுதியில் திருமண உறவு முறை ஏற்படுத்திக்கொண்டு அரசாண்டவர்கள். உங்கள் கூற்றுப்படி வந்தேறிகளாக இருந்தாலும் தமிழகத்தை தலை நிமிரச் செய்தவர்கள். தமிழகத்தை சுரண்டி சொத்து சேர்த்தவர்கள் அல்லர்.


Raj
நவ 19, 2025 13:16

தெலுகு ல கல்வெட்டு போடணும். தமிழ் ல போட்டா யாரு வந்தேறி


புதிய வீடியோ