வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இங்கே ரயில்ல தத்கால் டிக்கெட்னு அதிகவிலைக்கு வெச்சு ஒரு கும்பல் கொள்ளையடிக்கலியா, அதே மாதிரிதான் எல்லா இடத்திலும் ஆரம்பிச்சுட்டாங்க. காசு இருக்கிறவன் லட்ச ரூவா குடுத்து கூட டிக்கெட் வாங்குவான்.
நிர்வாக அதிகாரிகள் இந்த மோசடியை கூட நிறுத்தாமல் வேறு என்ன அரசாங்க புடுங்கற வேலை?
பக்தி வியாபாரம் எல்லா தமிழ்க் கோவிலும் நடப்பது ஏன்? ஆன் லைன் புக்கிங் பார் கோடு என்று இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பல வழிமுறைகள் இருந்தும், ஏன் நடை முறை படுத்துவதில்லை? அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட் செய்யாது - தர்மமாக நிற்கும் அரங்க நாதனுக்கு -இறைவனுக்கு சேவை செய்யாமல் - என்கிற தொணடரடிப் பொடி ஆழ்வார் திருமாலை பாசுரம் தான் நினைவுக்கு வருகிறது!
இறைவனுக்கு நாம் அடிமை என்கிற எண்ணத்தை மனதில் கொள்ளாமல் பக்தன் என்கிற வெளிவேஷத்தை தங்கள் பிழைப்புக்காக மட்டும் போட்டுக் கொண்டு திரியும் மனிதர்கள் இறந்தால் அவர்கள் உடல்களை பிணம் தின்னும் பறவைகள் கொத்திக் கொண்டு போகுமாம். அப்படி போனாலும் அவர்கள் செய்த பாவங்களை நினைத்து அந்த துண்டங்களை தின்றால் நமக்கும் பாவம் வந்து சேரும் என்று அச்சப்பட்டு அந்த பறவைகள் உண்ணாமல் அவற்றை கீழே போட்டு விடுமாம். அத்தகையவர்களை புறம்சுவர் கோலம் செய்து புள் கவ்வ கிடப்பவர்கள் என்று சாடுகிறார் ஆழ்வார்.
நாம் தெய்வத்தைக் காணவே இயலாது. தெய்வம் நம்மைக் காண்பதுதான் தரிசனம் என்பதை உணராத பக்தன் என்றுமே பரமபதமடைய முடியாது. திருட்டு வழியில் உள்ளே செல்வது நரகத்திற்கே அழைத்துச் செல்லும்.
பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்
நாலாயிரம் ரூபாய் டிக்கெட்டை இருபத்தையாயிரம் கொடுத்து வாங்கிச் செல்லும் அளவுக்கா திருட்டு கறுப்புப் பணமும் மூட நம்பிக்கையும் வளர்ந்து உள்ளது?
"சொர்க்கவாசல் வியாபாரி". தன்னுடைய சந்ததியின் தலையில் பாவத்தை ஏற்றி வைக்கும் வணிகன். பிரபலமான கட்சி என்ற போர்வையை போர்த்திக்கொண்டு குளிர்காய்பவர்கள். சொக்கா உனது சொர்க்க வாசலை வைத்து கள்ளச்சந்தையில் ஈடுபட்ட இவர்களது ஆட்டம் முடிந்த பிறகு இவர்களுக்கு நல்ல வாசலை காட்டுமய்யா.
எல்லாம் முடிவுக்கு வரும்
இறைவனை காண்பதற்கு டிக்கெட் விற்பனை என்பது மிகவும் கேவலமான இந்து மதத்தை இழிவுபடுத்தி அழித்து ஒழிக்க கூடிய ஒரு கீழ்த்தரமான செயல் இந்துக்கள் அனைவரும் விழிப்புணர்வு அடைய வேண்டும் எந்த கோவிலாக இருந்தாலும் சரி ஐந்து ரூபாய் கட்டணம் கூட செலுத்தி இறைவனை காணக் கூடாது என்ற சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் இந்து மதத்தின் கௌரவத்தையும் தனிச்சிறப்பையும் பேணி பாதுகாக்க முடியும்
4000 ரூவா டிக்கெட்டே சாமி பேரை வெச்சு அடிக்கிற கொள்ளைதான்.
அந்தக் கொள்ளையும் செய்யறதுதான்...