உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆளுங்கட்சி போர்வையில் அத்துமீறும் பள்ளி மேலாண்மை குழு: விடுமுறை நாளில் வகுப்பறையில் களியாட்டம்

ஆளுங்கட்சி போர்வையில் அத்துமீறும் பள்ளி மேலாண்மை குழு: விடுமுறை நாளில் வகுப்பறையில் களியாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், ஆளுங்கட்சியினர் போர்வையில் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவதால், தலைமை ஆசிரியர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக, பள்ளி மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவிலும், பெற்றோர், ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தினர், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். உறுப்பினர்களில், 75 சதவீதம் பெற்றோராகவும், அதிலும், 50 சதவீதம் பெண்களாகவும் இருக்க வேண்டும் என்ற விதிஉள்ளது. குழுவில் உள்ள பெற்றோரால், தலைவர், துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன் ஒருங்கிணைப்பாளராக தலைமை ஆசிரியர் செயல்படுகிறார். இந்தக் குழுவானது, மாதத்திற்கு ஒரு கூட்டத்தையாவது நடத்தி, மாணவர்களின் பாதுகாப்பு, பள்ளியின் தரம், உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு, கற்றல் குறைபாடு, இடைநிற்றலை நீக்கல், ஆசிரியர்களின் வருகை மற்றும் நடவடிக்கையை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அத்துமீறல் அதற்கான பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், இந்தக் குழுவானது, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இந்த குழுக்களில் பெரும்பாலான இடங்களில், ஆளுங்கட்சியினரே தலைவர், துணை தலைவர் பதவிகளை அபகரித்துஉள்ளனர். இவர்கள், பள்ளிகளுக்கு என சொல்லி நன்கொடை வசூலிப்பது, தங்களின் சொந்த காரியங்களுக்கு பள்ளி வளாகங்களையும் பள்ளியின் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்வது, கட்சி நிர்வாகிகளை விடுமுறைநாட்களில் பள்ளிவளாகத்திற்கு அழைத்து பேசுவது உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதை, தட்டிக்கேட்க முடியாமல் தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

சர்ச்சை வீடியோ

பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டவும், பள்ளியை மேம்படுத்தவும் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்களே, இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முல்லை நகரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியின் மேலாண்மை குழு தலைவியின் கணவர், ஒரு வகுப்பறையில் இளம்பெண்ணுடன் இருந்ததை, அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த விடுதி மாணவர்கள், வீடியோ எடுத்துள்ளனர். அவர்களை மேலாண்மை குழு தலைவியின் கணவர் மிரட்டும் வீடியோவும், சமூக வலைதளங்களில் பரவிசர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து, மேலாண்மை குழு தலைவியிடம் பெற்றோர் கேட்ட போது, தன்சகோதரி தனது கணவரை பார்க்க வந்ததாகவும், அவர் பள்ளியில் இருப்பதை அறிந்து, அங்கு சென்றதாகவும் கூறி உள்ளார்.

என்ன நடக்கிறது

இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளின்வகுப்பறை சாவிகளை, தலைமை ஆசிரியரோ அல்லது உள்ளூர் ஆசிரியரோ வைத்திருப்பது தான் முறை. ஆனால், பல பள்ளிகளில் அப்படி வைத்திருக்க விடுவதில்லை. தினமும் மாலையில், ஆளுங்கட்சியினரிடம் சாவிகளை கொடுத்து விட்டு, காலையில் போய் வாங்க வேண்டியுள்ளது. சாவி அவர்களிடம் இருப்பதால், அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரிவதில்லை. இதுகுறித்து, யாரிடமும் வெளிப்படையாக புகார் அளிக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.--- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Padmasridharan
நவ 05, 2025 06:48

கல்வியும் காவலும் தன்னலமிக்க அரசியல்வாதிகளால் தரம் கெட்டு மக்களை தவறான பாதைகளுக்கு தள்ளி விட்டிருக்கின்றது சாமி. ."பணமும் காமமும் தவிர வேறொன்றுமில்லை"


D.Ambujavalli
நவ 01, 2025 18:28

உள்ளாட்சி, நகர் மன்றம், பள்ளி மேலாண்மை எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பதவி அளிக்கிறோம் என்று பீற்றிக்கொண்டே கணவர், சகோதரர், தந்தை என்றுதானே அதிகாரம் செய்கிறார்கள் இந்த அம்மாவின் கணவரும், மனைவியின் பதவியை வைத்துக்கொண்டு, மைத்துணியையும் அங்கு வரவழைத்துள்ளார் கல்விச்சாலைகள் இன்னும் என்னென்ன கொடுமைகளை இந்த 'மாடலில்' பார்க்க வேண்டுமோ? பள்ளியில் திடீரென்று தீப்பிடித்தால் கூடத் தலைமை ஆசிரியர், இந்தக் குழுத்தலைவர் எங்கிருக்கிறார் என்று தேடி அலைந்து, சாவி வாங்கித்தான் தீயணைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமா? ரொம்ப நல்ல நிர்வாகம்


N S
நவ 01, 2025 16:25

மஹாகவி பாரதி, "பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம் எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்." என்றார். அப்பாவின் திராவிட மாடால் ஆட்சியில் "பள்ளி சாவி அவர்களிடம் இருப்பதால், அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரிவதில்லை." என்று புலம்புவோம்.


Krishna Moorthi K
நவ 01, 2025 16:16

மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அரசுபெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் செங்கல் மணல் ஜல்லி இறக்கி அக்கம் பக்கம் வீட்டினுள் கட்டிட வேலை பார்க்கின்றனர்


Shekar
நவ 01, 2025 15:12

அட போங்கையா, பள்ளி கொள்ளதானே நம் மூதாதையர் பள்ளிகள் கட்டி தந்துள்ளனர்.


Muralidharan S
நவ 01, 2025 11:31

அடுத்தடுத்து தொடர்ந்து திராவிஷ ஆட்சிகளில் கல்வியை நாசம் செய்துவிட்டனர்.. பள்ளிகளின் வகுப்பறைகளை பள்ளியறைகளாக மாற்றியது மிகவும் வேதனையான, கொடுமையான, கண்டிக்கத்தக்க செயல்.. யாருமே ஒன்றுமே செய்யமுடியாத இவர்களை எல்லாம் அந்த சரஸ்வதி தேவிதான் அழிக்கவேண்டும்..


Ganapathi Amir
நவ 01, 2025 11:19

பள்ளி மேலாண்மை குழுவே ஆசிரியர்களை மிரட்டுவதற்கும் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக இருப்பதற்கும் உருவாக்கப்பட்டது தானே...?


Chandrasekaran Balasubramaniam
நவ 01, 2025 11:06

நாடு நாசமா போயிகொண்டிருக்கிறது அரசியல் வியாதிகளால். பள்ளிகளில் இருந்து ஆரம்பமா. கருமம்.


duruvasar
நவ 01, 2025 10:19

ஒன்றும் இல்லாத விஷயம். மேலாண்மை குழு தலைவி தானேதான் தன் சகோதரியை கணவனை பார்க்க அனுப்பிவைத்துளார். என்பது தெரிகிறது. மேலாண்மை குழு தலைவியின் கணவருக்கு பள்ளியில் என்ன வேலை என்ற ஒரு கேள்விதான் செய்தியில் புரியாமல் உள்ளது.


Kalyanaraman
நவ 01, 2025 08:15

எந்த குற்றத்திற்கும் கடும் தண்டனை இல்லை துரித விசாரணை இல்லை. இது போன்ற அவலங்களுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை