உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்சி தாவிய மாஜிக்களிடம் சபாநாயகர் பிரபாகர் விசாரணை

கட்சி தாவிய மாஜிக்களிடம் சபாநாயகர் பிரபாகர் விசாரணை

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்தது குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களிடம் நேற்று சபாநாயகர் பிரபாகர் விசாரணை நடத்தினார். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற பெருந்துறை - ஜெயகுமார், மதுராந்தகம் - மரகதம் குமரவேல், தாராபுரம் - சத்யபாமா, அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா ஆகியோர், சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். பின், நான்கு பேரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்தனர். அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் சபாநாயகர் பிரபாகரிடம் முறையிடப்பட்டது. இது தொடர்பாக, இரு தரப்பினரையும் ஆகஸ்ட் 4ம் தேதி, தலைமை செயலகத்தில் உள்ள தன் அறையில் ஆஜராகும்படி சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேரும் நேற்று ஆஜராகினர். பழனிசாமிக்கு பதிலாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய்சுந்தரம் ஆகியோர் ஆஜராகினர். இரு தரப்பினரிடமும் பல்வேறு விளக்கங்களை சபாநாயகர் கேட்டார். அவர்கள் தெரிவித்த விளக்கங்கள், வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்யப்பட்டன. மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறி, அவர்களை சபாநாயகர் அனுப்பி வைத்தார். சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், கூட்டத்தொடர் முடிந்த பின், மீண்டும் விசாரணை தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்த கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை - சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க, சபாநாயகரிடம் அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mariadoss E
ஆக 05, 2026 17:57

செங்கோட்டையன் கூட்டி வருவார் ஆதவ் அர்ஜூனா கட்சியில் சேர்ப்பார், ஆனந்த் அடையாள அட்டை வழங்குவார். சபாநாயகர் விசாரிப்பார். நல்ல நாடகம்.


kanaga sundaram
ஆக 05, 2026 17:10

இவர்களால் அரசுக்கு நஷ்டம்தானே.ஒட்டு போட்ட மக்களை கேட்டா ராஜினாமா செய்தார்கள்.தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிப்பதுதான் நியாயம்.


naranam
ஆக 05, 2026 13:02

பாவ மன்னிப்புக்குப் பஞ்சமேதும் இல்லையே!


SJRR
ஆக 05, 2026 12:44

கட்சி தாவிய மாஜிக்கள் எல்லாம் வேறு ஒரு கட்சிக்கு சென்றிருந்தால் சபாநாயகர் விசாரணை செய்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் அந்த மாஜிக்கள் எல்லாம் தாவியது இவர் சார்ந்த கட்சிக்குத்தான். இதற்கு எதற்கு இந்த சம்பிரதாய விசாரணை?


duruvasar
ஆக 05, 2026 11:51

கவர்னர் , குடியரசு தலைவர் இவர்களுக்குமட்டும்தான் உச்சநீதிமன்றம் காலக்கெடு வைக்கும். இந்த மாதிரியானமுடிவெடுக்கவேண்டிய காலக்கெடு எதுவும் நீதிமன்றகளுக்கும், சபாநாயகர்களுக்கும் கிடையாது. வாழ்க ஜனநாயகம்.


jeyakumar
ஆக 05, 2026 11:37

இவரே பல கட்சியிலிருந்து தத்தி தத்தி தாவி வந்த சார் விசாரிக்கிறாராம் கட்சி தாவல் பற்றி... காமெடி


Kadaparai Mani
ஆக 05, 2026 09:02

Third rate process


ManiK
ஆக 05, 2026 08:47

இவர் போன்ற ஆட்களுக்கு கட்சி தாவுவதை விசாரிப்பதைவிட ஏன் இதுவரை அன்னிய மதம் தாவவில்லை என்று விசாரிக்க தான் பிடிக்கும்.


சூர்யா
ஆக 05, 2026 08:17

விசாரணையா? இவர் இருக்கும் கட்சியில் சேர்ந்தவர்களிடம் இவரே விசாரணையா?


Mariadoss E
ஆக 05, 2026 18:01

எப்புடி விசாரிப்பார்? ஏன் எங்கள் கட்சியில் சேர்த்திங்கள் என்றா விசாரிக்க முடியும்?


நிக்கோல்தாம்சன்
ஆக 05, 2026 07:31

உலகம் உருண்டையானது எசப்பா எனக்கு தலைமுழுதும் முடியை கொடுப்பா என்று இவர் கேட்டு சொல்லட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை